பேருந்து காதலி..


கூட்ட நெரிசல்..
வேலை அலைச்சல்..
எதுவும் தெரியவில்லை எனக்கு...
பேருந்தில் அவள் முகம் கண்டவுடன்...

பூமியில் நகரும் பேருந்து,
என்னை மட்டும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பயணிக்க வைக்கிறது...

என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...

என்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,
இன்று மட்டும் ஏனோ அவசரம்!

நான் இறங்கும் இடத்தில்
அவளும் இறங்கினாள்...

அவளை முன்னே செல்லவிட்டு
நான் பின்னே நடந்தேன்..
அவளின் கால்தடத்தில்..

அவள் தலைமுடியிலிந்து விழும்
ஒவ்வொரு பூவின் இதழும்
மீண்டும் சொர்க்கத்தை அடைய ஏங்கின..
ஏனோ இயலவில்லை..

உன் வழியில் நீ சென்றாய்
என் வழியில் நான் சென்றேன்..
உன் நினைவுகளை சுமந்தபடி...

நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...??

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

31 பின்னூட்டங்கள்:

ஈரோடு கதிர் said...

//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//

வாவ்.... அருமையா இருக்கு இந்த வரிகள்

அடலேறு said...

கவிதை நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெனகெடலாமே !!!

லோகு said...
This comment has been removed by the author.
லோகு said...

பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

காதல் கவிதைகள் எழுதத்துவங்கியாயிற்றா

நல்ல நடை - நல்லாருக்கு கவிதி
நல்வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு!

அத்திரி said...

//லோகு said...
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...
///


rippeateeeeeeyyyyyyyyyyyyyyyy

வால்பையன் said...

//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//

2+3=5
3+2=5

மேலுள்ள வித்தியாசம் தான் உங்கள் வரிகளில் உள்ளது!

அதை வேணுமென்றே கதிர் அண்ணன் ஏத்தி வேற விடுகிறார்! பார்த்து ஜாக்கிரதை!

வால்பையன் said...

//லோகு said...

பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...//


அடுத்து லாக்அப் கவிதை தானா!?

ஆ.ஞானசேகரன் said...

//நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...?? //

வரிகளின் உன் வயதும் தெரிகின்றது அன்பு... எல்லா வரிகளும் அழகு துளிகள்...

கமலேஷ் said...

நல்ல கவிதைகள்...

Anbu said...

\\ஈரோடு கதிர் said...

//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//

வாவ்.... அருமையா இருக்கு இந்த வரிகள்\\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\\அடலேறு said...

கவிதை நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெனகெடலாமே !!!\\\

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அண்ணா.

Anbu said...

\\\லோகு said...

பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...\\\

போலிஸாக இருக்க வாய்ப்பில்லை மச்சான்..

Anbu said...

\\\cheena (சீனா) said...

அன்பின் அன்பு

காதல் கவிதைகள் எழுதத்துவங்கியாயிற்றா

நல்ல நடை - நல்லாருக்கு கவிதி
நல்வாழ்த்துகள்\\\

நன்றி ஐயா..வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\பா.ராஜாராம் said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு!\\

நன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\\அத்திரி said...

//லோகு said...
பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...
///


rippeateeeeeeyyyyyyyyyyyyyyyy\\\


Raittuuu

Anbu said...

\\\வால்பையன் said...

//லோகு said...

பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...//


அடுத்து லாக்அப் கவிதை தானா!?\\\

ஏன் தல...முடிவே பண்ணிட்டீங்களா..

எனக்கு ஜெயில் கஞ்சுதான் என்று..

Anbu said...

\\\ஆ.ஞானசேகரன் said...

//நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...?? //

வரிகளின் உன் வயதும் தெரிகின்றது அன்பு... எல்லா வரிகளும் அழகு துளிகள்...\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\ கமலேஷ் said...

நல்ல கவிதைகள்...\\

நன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

S.A. நவாஸுதீன் said...

அரும்பு மீசைக் கவிதை நல்லா இருக்கு அன்பு

Vidhoosh said...

//பாத்து மாப்ள!! மப்டி போலீசா இருக்க போகுது...//

:))
சூப்பர் கவிதை, சூப்பர் comments.
--வித்யா

இளைய கவி said...

ரொம்ப நல்லா இருக்கு தம்பி, காதல் பண்ணுற வயசு தான இது! கலக்கு கலக்கு.

sathishsangkavi.blogspot.com said...

//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//

நம்ம ஊர் பஸ்ல இதுதான நடக்குது......

அனுபவிச்சு எழுதி இருப்பீங்க போல.......

அழகான கவிதை..............

விக்னேஷ்வரி said...

என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//
நல்லாருக்கு.

நான் இறங்கும் இடத்தில்
அவளும் இறங்கினாள்... //
இது மாத்தியில்ல இருக்கணும்
"அவள் இறங்கும் இடத்தில்
நானும் இறங்கினேன்" ன்னு ;)

அன்பு, யார்கிட்ட குடுத்து எழுதி வாங்கின கவிதை இது...

ரொம்ப நல்லாருக்குங்க, உங்க வயசுக்கு.

Unknown said...

//என்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,
இன்று மட்டும் ஏனோ அவசரம்!//

ஹா ஹா....
அனுபவப்பட்டு எழுதியிருப்பியள் போல?

நல்ல கவிதை...

வாழ்த்துக்கள்....

நிலாமதி said...

வருவாள் நாளையும் உன் மீது ஈர்ப்பு ......அன்பு இருந்தால் அதே நேரம் ...அதே பஸ்ஸில்....வெற்றி பெற வாழ்த்துக்கள்.

angel said...

உன் நினைவுகளை சுமந்தபடி...

this line adds value to your poem

அன்பரசன் said...

கண்டிப்பாக வருவாள் போலீஸூடன்.

சிங்கக்குட்டி said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

இது சும்மா :-)

ஆனா நாட்டாமை...பஸ்சமாத்து, சினேகா போற பஸ் வேணாம்... :-)

அன்புடன் நான் said...

//என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...//

நச்!