கண்டதும் கேட்டதும்..(1/7/09)


இது ஒரு மொக்கைப்பதிவுதான்..அதாவது அவியல்,குவியல்,உட்கார்ந்து யோசித்தது,ரூம் போட்டு யோசித்தது,காக்டெயில்,கொத்து புரோட்டா,மாதிரி இதுவும் ஒன்னுங்க....எனக்கும் இந்த மாதிரி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசைங்க..ஆனால் அதிகமான ஆணி பிடுங்குதல்,சரியான தலைப்பு கிடைக்காததால் எழுத இயலவில்லை..இந்த தலைப்பின் சொந்தக்காரர் அண்ணன் ஸ்ரீ-க்கு என் மனமார்ந்த நன்றிகள்..

*******************************************************************

போன வெள்ளிக்கிழமையன்று வெளியான நாடோடிகள் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது.அனைவரும் போய் பார்க்க வேண்டிய படம்.
சசிகுமார் இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் கலக்கி வருகிறார்..அவரது நடனம் கூட நன்றாக உள்ளது...சமீபத்திய மொக்கைப்படங்கள் பார்த்த எனக்கு இப்படம் ஒரு திருப்தியாக இருந்தது.இனி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்கள்..ஆயிரத்தில் ஒருவன்,கந்தசாமி.நந்தலாலா..பொறுத்திருந்து பார்ப்போம்..

*******************************************************************

சமீபத்தில் வந்த திரைப்பட பாடல்களில் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரத்தில் ஒருவன் தான்..படத்தில் இருக்கும் பத்து பாடல்களும் அருமையாக உள்ளது.இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் தன் பணியை செவ்வென செய்து உள்ளார்..இருந்தாலும் செல்வராகவன் படம் என்றாலே என் நெஞ்சினில் வருவது யுவன்சங்கர் ராஜாவின் இசைதான்..துள்ளுவதோ இளமை, 7யின் தாக்கம்...இப்படத்திலும் இசையமைத்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.இருப்பினும் ஜீ.வி.பிரகாஷ்குமாருக்கு ஹேட்ஸ் ஆப்...

பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்க.

*******************************************************************

அண்ணன் பைத்தியக்காரன் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டி நேற்றோடு நிறைவுக்கு வந்தது.பல மூத்த பதிவர்கள் பங்கு பெற்ற இப்போட்டியில் நானும் பங்குபெற்றது மிக்க மகிழ்ச்சி..மொத்தம் 219 கதைகளாம்.என்னோட சிறுகதை படிக்க..

*******************************************************************

24-6-09 அன்று அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் தங்கைக்கு மதுரையில் இனிதே நடைபெற்றது..இதில் பங்குகொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி.சொல்லரசன் மற்றும் ஆதவா ஆகிய இரு முக்கிய பதிவர்களை முதன் முதலாக சந்தித்தேன்.தங்கைக்கு கல்யாணம் முடிந்த கையுடன் தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..


*******************************************************************

வழக்கமாக நான் பதிவெழுதாத நாட்களில் நம்ம கடையின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கும்..வெறும் பத்து ஹிட்ஸ் வந்து இருக்கும்..அதுவும் நான்தான் பார்த்திருப்பேன்..கடந்த இரண்டு நாட்களாக தினமும் 100 பேர் வருகின்றனர்...என்னவென்று தணிக்கைகுழு வைத்து ஆராய்ச்சி செய்ததில் டாக்டர் தேவன் சாரின் பதிவுலக மன்மதன்கள் என்ற பதிவுதான் காரணம் என தெரியவந்தது..எனவே டாக்டருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
மேலும் டாக்டரின் சமீபத்திய பதிவான காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை அவரது மனைவி படித்துவிட்டாராம்..வீட்டில் ஒரே கலாட்டாவாம்..
மேலும் விவரங்களுக்கு தேவா சாரை அணுகவும்...

*******************************************************************

பிரபல பதிவர் அவர் தன் காதலியிடன் சண்டையிட்டுக்கொண்டு உள்ளாராம்..தொ(ல்)லைபேசியில் வந்த குறுந்தகவல் தான் காரணமாம்..நல்லா பார்த்து எஸ்.எம்.எஸ். அனுப்புங்க மக்கா

*******************************************************************

நகைச்சுவை:-

ஆசிரியர்: ஒவ்வொருவரும் அவங்கிட்ட இருக்கிற தனித்திறமைப் பற்றி சொல்லுங்க..
மாணவன்:நான் பின்னாலே நடப்பேன் சார்..
ஆசிரியர்:எவ்வளவு தூரம்.
மாணவன்:உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுதோ அவ்வளவு தூரம்..
ஆசிரியர்:...????

*******************************************************************

கவிதை:-

பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்...

*******************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!


முதலில் இக்கதையின் கதாநாயகனை பற்றிய ஒரு சிறு குறிப்பு:-

என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மேலும் சொந்தமாக ஒரு Browsing Centre வைத்து நடத்தி வருகிறேன்.

ஒரு மாலை நேரப்பொழுது..மணி சரியாக தெரியாவிட்டாலும் கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்..அந்த அழகினை மெல்ல ரசித்துக்கொண்டிருந்தேன்..'இயற்கையின் அழகே தனிதான்'என்று மனதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்...
சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..

சுய நினைவுக்கு வந்தவனாய்...பத்து ரூபாய் மேடம்

இந்தாங்க..

பணத்தை வாங்கியவுடன் என் மனது ஏனோ திரும்பி பார்க்க சொல்லி கட்டளையிட்டது..

திரும்பிப் பார்த்தவுடன்..கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது.. Browsing பண்ணனும்...

ம்ம்..எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பண்ணுங்க..

மணிக்கு எவ்வளவு ரூபாய்?

ஐந்தே ரூபாய் தான் மேடம்..

ரொம்ப கம்மியாக இருக்கு..

ஆடித்தள்ளுபடி அதான்..ஒரு புன்சிரிப்புடன்..

அந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்...

சார் இந்த சிஸ்டம் வொர்க் பண்ணலை..

ச்செ..இது வேற மக்கர் பண்ணுது..என்று மனதிற்குள் புலம்பினவனாய்..

நீங்க இந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்..

சரி..

Browsing பண்ணி முடித்ததும் என் அருகில் வந்து இந்தாங்க..என்று 100 ரூபாயை நீட்டினாள்..

சில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..

அவளோ என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றாள்..

என்னடா நடக்குது இங்க..என் நண்பன் கேட்டான்..

சும்மாதான்டா..அந்த பொண்ணு அழகா இருக்காடா மச்சி..அதுவும் அவளோட அந்த தெத்துப்பல் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் உள்ளதுடா..

உனக்கு என்னமோ ஆச்சு..உட்கார்ந்து வேலையைப் பாருடா..

மறுநாள் மாலை..

அவளுக்காக நான் காத்திருக்க..

இம்முறை அனைத்து சிஸ்டம் வேலை செய்கிறதா என்று செக் பண்ணினேன்..

நினைத்தது போலவே அந்த அழகு தேவதை வந்தாள்..ஒரு புன் சிரிப்புடன்

Browsing பண்ணி முடித்தவுடன் சரியான சில்லறையை கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..

கிட்ட போய்..anyhelp என்றேன்..

ya என்றாள்..

உடனே நான் ஹீரோயிசத்தினை காட்ட ஆரம்பித்தேன்..தோல்வியே கிடைத்தது தவிர வெற்றி கிட்டவில்லை..இறுதியில் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க மேடம்..மெக்கானிக் வரச்சொல்றேன் என்றேன்..

மெக்கானிக் வந்து சரி பண்ணும் வரை அவளுடன் கலாய்த்துக்கொண்டிருந்தேன்..தான் காலேஜ் படிப்பதாக கூறினாள்..கஷ்டப்பட்டு அவளுடைய மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டேன்..

அன்று முதல் நாங்கள் எஸ்.எம்.எஸில்.பேசத்தொடங்கினோம்

அவள் : "Don't miss or avoid d person who really had a true affection on u. it may make u feel when they live without u and your memories....."

அவசர அவசரமாக பதிலளித்தேன்..

"hey... what a surprise... எப்படி இருக்கே? சாப்டாச்சா? "

அவள்: ஓ சாப்டாச்சு.. நீ சாப்டயா.. வீட்டுக்கு வந்தாச்சா..

சாப்டாச்சு.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு வரல.. ஆபிஸ்லதான் இருக்கிறேன்..

அவள்: ஏன்பா???

கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்.. அதுதான்..

அவள்: சரி.. continue பண்ணு.. Good night.. Sweet dreams.. bye..

ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லுதே...

அவள்: ரொம்ப ஐஸ் வைக்காத.. வேலைய பாரு..

ஐஸ் கிரீமுக்கே யாரவது ஐஸ் வைக்க முடியுமா...

அவள்: ஐயோ முடியல... நா தூங்க போறேன்..

கனவுலையும் என் கூடத்தான் பேச போற.. அதுக்கு இப்பவே பேசலாம்ல..

அவள்: ஆசைதான்.. டைப் பண்ணி முடிச்சுட்டு சீக்கிரம் தூங்குடா.. Bye..

சரிங்க மேடம்.. Good night...

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தேன்.. கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்தேன்..

ஸ்பீக்கரில்
"காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை..
காதல் இன்றி யாரும் இங்கில்லை..." யேசுதாஸ் பாடி கொண்டிருந்தார்..

அப்படியே தூங்கி போனேன்..

டிஸ்கி:- 1.இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..

2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஏ.டி.ம்.சென்டரினை அடிக்கடி உபயோகப்படுத்துவீர்களா...!!!
















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் கதாநாயகர்களின் கவர்ச்சிப்படங்கள்












இந்த புகைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்காகவே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS