
திரைப்பட பாடலாசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் என்றுமே நா.முத்துக்குமார் தான்..இவர் எழுதும் பாடல்கள் மிகவும் எளிதான வார்த்தைகளை கொண்டும்,கேட்டவுடன் மனதில் பதியுமாறும் இருக்கும்..இவரது பாடல்களை எப்போதுமே தனி போல்டரில் போட்டு கேட்டுக்கொண்டு
இருப்பேன்.. இவரை திறமைக்கு 7G படத்தில் கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை என்னும் பாடல் ஒன்று போதும்...அந்தப்பாடலில் எனக்கு பிடித்த சில வரிகள்:-
காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை...
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை!
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை..
மின்னலின் ஒளியைப் பிடிக்க மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!
என் காதல் சொல்ல நேரமில்லை..
உன் காதல் சொல்ல தேவையில்லை..
நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
உண்மை மறைத்தாலும் மறையாதடி...
உன் கையில் சேர ஏக்கமில்லை...
உன் தோளில் சாய ஆசையில்லை...
நீ போன பின்பு சோகமில்லை...
என்று பொய் சொல்ல தெரியாதடி...
உன் அழகாலே அழகாலே
என் வெயில்காலம் அது மழைக்காலம்...
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்....
சரணம்:1
காற்றோடு கைவீசி நீ பேசினால்
என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே...
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலைவீசுதே..
காதல் வந்தாலே கண்ணோடுதான்
கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?
கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..
இந்த விளையாட்டை ரசித்தேனடி..
சரணம்:2
ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..
இந்த நிமிடங்கள் நீளட்டுமே..
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே...
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்...
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்...
சிறு பிள்ளையென என்தன் இமைகளது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே...
என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..
என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்...

பின்குறிப்பு:-









