எனக்கு பிடித்த பாடல்...




திரைப்பட பாடலாசிரியர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் என்றுமே நா.முத்துக்குமார் தான்..இவர் எழுதும் பாடல்கள் மிகவும் எளிதான வார்த்தைகளை கொண்டும்,கேட்டவுடன் மனதில் பதியுமாறும் இருக்கும்..இவரது பாடல்களை எப்போதுமே தனி போல்டரில் போட்டு கேட்டுக்கொண்டு
இருப்பேன்.. இவரை திறமைக்கு 7G படத்தில் கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை என்னும் பாடல் ஒன்று போதும்...அந்தப்பாடலில் எனக்கு பிடித்த சில வரிகள்:-

காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை...
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை!

தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை..

மின்னலின் ஒளியைப் பிடிக்க‌ மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!


தற்சமயம் எனது காலர்டியூனாகவும்,என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் பாடல் பையாவின் ன் காதல் சொல்ல நேரமில்லை..என்னும் பாடல்.. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் அவரே பாடி இருக்கிறார்..பாடலை எழுதியவர் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர்..நா.முத்துக்குமார்.இப்பாடலின் ஒவ்வொரு வரியும் முதல் முறை கேட்கும் போதே மனதில் அப்படியே பதிந்துவிட்டது..காதலிக்காக காதலன் ஏங்கும் ஆசைகளை மிகத்தெளிவாக கூறி இருக்கிறார்..

என் காதல் சொல்ல நேரமில்லை..
உன் காதல் சொல்ல தேவையில்லை..
நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
உண்மை மறைத்தாலும் மறையாதடி...

உன் கையில் சேர ஏக்கமில்லை...
உன் தோளில் சாய ஆசையில்லை...
நீ போன பின்பு சோகமில்லை...
என்று பொய் சொல்ல தெரியாதடி...

உன் அழகாலே அழகாலே
என் வெயில்காலம் அது மழைக்காலம்...

உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்....

சரணம்:1

காற்றோடு கைவீசி நீ பேசினால்
என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே...
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலைவீசுதே..

காதல் வந்தாலே கண்ணோடுதான்
கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?

கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..
இந்த விளையாட்டை ரசித்தேனடி..


சரணம்:2

ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..
இந்த நிமிடங்கள் நீளட்டுமே..
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே...

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்...
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்...

சிறு பிள்ளையென என்தன் இமைகளது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே...

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..

என் அந்திமாலை என் அந்திமாலை
உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்...




பின்குறிப்பு:-

1. கார்க்கி,டக்லஸ்,கார்த்திகைப்பாண்டியன் இந்த மூன்று பேரும் எழுதிய பாட்டு விமர்சனத்தை பார்த்ததால் அடியேனுக்கும் சிறிது ஆசை..அதை நிறைவேற்றவே இந்த முயற்சி...

2.பையாவில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதாலும் சூர்யாவின் தம்பி கார்த்திக் நடித்திருக்கிறார் என்பதாலும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் படத்திற்காக...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேட்டைக்காரன் ஸ்பெஷல்....

(கடவுளே இந்த படமாவது ஓடனும்)

விஜய் ரசிகன்(கார்க்கி அண்ணா மாதிரி) : தலைவா..தலைவா..வேட்டைக்காரன் படம் பார்த்து முதல் காட்சியிலே 500 பேர் செத்துட்டாங்களாம்...

விஜய் : வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சுடோய்...

*******************************

வேட்டைக்காரன் ரீ-மிக்ஸ் பாடல்:

போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரெய்லர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்த வீடு போய் சேர மாட்ட...

*******************************

காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணலைன்னா?
காதலன் : இப்படியே பஸ் பிடிச்சு 'வேட்டைக்காரன்' படம் ரிசர்வ் பண்ண போயிடுவேன்.
காதலி : எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க முடிவெடுத்தியோ, இதுக்கு மேல என் காதலை மறைக்க விரும்பலை. ஐ லவ் யூ டூ!

*******************************

(இந்த கெட்டப்பில் நான் அனுஷ்கா-வைவிட அழகா இருக்கேன்ல..)

வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸில் கே.எஸ்.ரவிக்குமார்..

என்ன பண்ணாலும் விஜய் மாதிரி வர முடியாது..

ரசிகனின் குரல் அதுவும் சரிதான்..

யாரும் விஜய் மாதிரி வர முடியாது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

*******************************

டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?
விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்..

*******************************

இவ்வளவு சொல்லியும் நீங்க சிரிக்கவில்லை என்றால் கடைசியா ஒன்று சொல்றேன்..

வேட்டைக்காரனில் விஜய் சிக்ஸ் பேக்கில் வருகிறாராம்....

*******************************
டிஸ்கி:-

1.இவை அனைத்தும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் தான்...
2. ஏற்கனவே படித்து இருந்தால் திரும்பவும் படியுங்கள்..நன்றாகவே இருக்கவும்
3.மறுபடியும் சொல்றேன் நான் அஜித் ரசிகன் அல்ல...சூர்யாவின் ரசிகன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் காதலி..

என்னவளே..
என் இனியவளே..
என்னுடன் இருப்பவளே..

காலையில் என்னை எழுப்பும்
அலாரம் நீ..

மழையோ,வெயிலோ,
இரவோ,பகலோ,
நீ அழைத்தால் உடனே
ஓடி வருவேன்..

என் கைக்குள் அடங்கும்
சொர்க்கம் நீ..
உன் அழகில் மயங்கும்
பித்தன் நான்..

என் உயிர்மூச்சு இருக்கும்வரை
என்னோடு நீ இருப்பாய்
கண்ணே..

உன்னை வருடாத நாளில்லை..
உன்னை காதோடு உரசாத நொடியில்லை..

என் செல்போனே..
என் காதலி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேருந்து காதலி..


கூட்ட நெரிசல்..
வேலை அலைச்சல்..
எதுவும் தெரியவில்லை எனக்கு...
பேருந்தில் அவள் முகம் கண்டவுடன்...

பூமியில் நகரும் பேருந்து,
என்னை மட்டும்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பயணிக்க வைக்கிறது...

என் விழி படும் இடமெல்லாம்,
அவள் நிற்கிறாள்..
அவள் விழி படும் இடமெல்லாம்,
நான் நகர்கிறேன்...

என்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,
இன்று மட்டும் ஏனோ அவசரம்!

நான் இறங்கும் இடத்தில்
அவளும் இறங்கினாள்...

அவளை முன்னே செல்லவிட்டு
நான் பின்னே நடந்தேன்..
அவளின் கால்தடத்தில்..

அவள் தலைமுடியிலிந்து விழும்
ஒவ்வொரு பூவின் இதழும்
மீண்டும் சொர்க்கத்தை அடைய ஏங்கின..
ஏனோ இயலவில்லை..

உன் வழியில் நீ சென்றாய்
என் வழியில் நான் சென்றேன்..
உன் நினைவுகளை சுமந்தபடி...

நாளையும் வருவாயா..
இதே பேருந்தில்...??

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS