என்னவளுக்காக...


எனக்கு எது பிடிக்கும்,
எது பிடிக்காது,
என்று தெளிவாய் உன்னிடம்
சொல்லத்தெரிந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை...
"நான் உன்னை காதலிக்கிறேன்"
என்ற வார்த்தையை மட்டும்
சொல்லத் தெரியவில்லை...

நான் எழுதும் ஒவ்வொரு
கவிதையையும் படித்துவிட்டு,
ஒரு புன்சிரிப்புடன்,
இந்த கவிதைக்கு பின்னால்
"யாரோ ஒரு பெண் இருக்கிறாள்"
என்கிறாய்..அது நீ தான்
என்று உனக்கு தெரிந்தும் கூட..

தோழிகளோடு கலகலப்பாக
சிரித்துக்கொண்டு செல்கையில்,
என்னை பார்த்ததும்
ஏன் அமைதி கொள்கிறாய்..
அதை பார்த்தபின் தெரிந்துகொண்டேனடி
"நீயும் என்னைக்காதலிக்கிறாய்" என்பதை...!!!

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தனிமையின் துயரம்..


உனக்காக நான்,
எனக்காக நீ,
உன்னில் நான்,
என்னில் நீ,
என நாம் இருவரும்
நம்மை மறந்து,
நம் காதலினால் வயப்பட்டிருந்த காலத்தில்
காற்றுகூட புக முடியாமல்
இருவரும் நெருக்கமாய்
அமர்ந்து இருக்கிறோம்..

இருப்பினும்,
அந்த இடைவெளிக்குள்ளும்
அனுமதி வாங்காமலேயே,
வந்து அமர்கிறது காதல்....

பின் ஒரு நாளில்
கருத்து வேறுபாட்டின்,
கணத்த வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கணமும்....

பேசி தீர்ப்பதென,
முடிவு செய்யப்பட்டு,
இருவரும்
கூடிய சந்திப்புகளில்,
மௌனமாய்,
இடைவெளி விட்டு,
அமர்ந்திருக்கிறோம்,
காதலுக்காக....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அசல் - இசை விமர்சனம்..





ஏகனின் படுதோல்விக்கு பின் அஜித்.. அஜித்தின் 49வது படம்..பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையில் அசல் ஆடியோ வெளியாகிவிட்டது.. படம் முழுவதும் மலேசியாவிலும் பிரான்சிலும் எடுத்ததாக சொல்கிறார்கள்.. சிவகாசியில் ஆடியோ ரிலிஸ் வெகுவிமரிசையாக நடந்தது..இதுக்கே இப்படின்னா படம் வந்தா எப்படின்னு தெரியலை..நமக்கெதுக்குங்க அந்த பிரச்சினை எல்லாம்..நாம் பாடலின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே...

படத்தின் அனைத்து பாடல்களும் கவிஞர்.வைரமுத்து எழுதி உள்ளார்..

இசையமைப்பாளர்:- பரத்வாஜ்...

1.அசல்..(சுனிதா மேனன்)

காற்றை நிறுத்திக்கேளு
கடலை அழைத்துக்கேளு
இவன்தான் அசல்..
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா...

படத்தின் தொடக்கப்பாடல்... மேலே உள்ள வரிகளுடன் அமர்க்களமாய் தோன்றுகிறது. சுனிதா மேனன் மிகவும் ஸ்டைலிஸாக பாடியுள்ளார்..இடை இடையே வரும் தல போல வருமா என்னும் வரி அப்படியே அட்டகாசத்திலிருந்து எடுத்து வைத்துள்ளனர்..பாடல் முழுவதும் ஒரு மாஸ் ஹீரோ-வுக்கு உண்டான வரிகள்..அஜித் ரசிகர்களுக்கு இந்த பாட்டு சிம்ம சொப்பனம்..

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பார்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்..

நித்தம் நித்தமும் யுத்தம்-இவன்
நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை...


*********************

2.
குதிரைக்கு தெரியும் - (சர்முகி, சரண்)

இந்த பாட்டு சமீராவுக்கா இல்லை பாவனாவுக்கா என்று தெரியவில்லை..ஒரு பெண்ணின் காம இச்சைகளை மிகவும் நாசூக்காக சொல்லி இருக்கிறார் வைரமுத்து...யாருக்காக இருப்பினும் பாடல் நிச்சயம் ஹிட்..இந்தப்பாடலில் முதலில் பாடும் சர்முகியின் குரல் நச்சென்று உள்ளது...

தொட்டுவிடு ஒருதரம்
தொல்லைகொடு இருதரம்
முத்தமிடு மூனுதரம்
முகர்ந்திடு நாலுதரம்
அள்ளிஎடு ஐந்துதரம்
கொள்ளையிடு ஆறுதரம்
இன்பம் கொடு ஏழுதரம்
இந்த சுகம் நிரந்தரம்
குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு...

*********************

3.டொட்டொடய்ங் - (முகேஷ், ஜனனி)

கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காதல் மலர்ந்து விட்டவுடன் வரும் பாடல்...மெலடியாகவும் அல்லாமல் அடிப்பாட்டாகவும் இல்லாமல் செல்கிறது..அநேகமாக தியேட்டரில் அதிகமான சமோசாக்கள் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..டொட்டொடய்ங்..

பச்சப்புள்ள போலிருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதன்ன
முந்திரிக்கா தோப்பா?

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா...

*********************

4.எங்கே எங்கே - (எஸ்.பி.பாலசுப்ரமணியன்)

வழக்கம்போல் எஸ்.பி.பி ராக்கிங்..வைரமுத்துவின் வரியும் எஸ்.பி.பி. சாரின் தீர்க்கமான குரலும் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன..

எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடையில்
மிருகம் இங்கே..

ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே..

*********************

5.துஷ்யந்தா - (சர்முகி, குமரன்)

பழைய காலத்து படம் புதிய பறவை என்னும் படத்திலிருந்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்னும் பாடலின் ரீ-மேக் என்று நினைக்கிறேன்..அந்தப்பாடலின் சில வரிகள் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளன..ஒரு முறை கேட்கலாம்..

அந்த நீல நதிக்கரை ஓரம் - நீ
நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடிவந்தேன் ஒரு ராகம்
நாம் பழகிவந்தோம் சில காலம்..

*********************

6.எம் தந்தைதான் - (பரத்வாஜ்)

"தல போல வருமா" என்ற அட்டகாசமான பாடலை அட்டகாசத்திற்கு தந்த பரத்வாஜ் இந்த பாடலை பாடியுள்ளார்..முதலில் மிகவும் மெதுவாக தொடங்கும் பாடல் மெதுவாகவே முடிகிறது..கதாநாயகன் தன் தந்தையை நினைத்து பாடும் பாடல்....

*********************

7.எங்கே எங்கே - (கார்த்திகேயன் மற்றும் கோரஸ்)

படத்தில் பிண்ணனி இசைக்காக பயன்படுத்தி இருக்கலாம்..மற்றபடி சொல்ல ஒன்றுமில்லை....


மொத்தத்தில் பாடல்கள் கேட்கலாம்...மூன்று பாடல்கள் மட்டுமே திரும்ப கேட்க மனசு சொல்கிறது..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS