
சிறுவனாய் இருந்த நான்
என்னுள் இன்று ஏகப்பட்ட
மாற்றங்கள் பல கண்டுள்ளேன்...
எண்ணங்கள் பல..
சலனங்கள் சில..
சீராய் இருந்த முகத்தில்
மேடு பள்ளங்கள்..
பள்ளிக்குப் புறப்படும்போது
எண்ணையும் சீப்புமாய் வரும்
அம்மாவின் கையை
உதறும் என் கைகள்..
இன்று கண்ணாடி முன்
அரைமணி நேரம் கையில் சீப்புடன்!!
வீதியில் செல்லும்போது
நண்பர்களுடன் சண்டை
தாண்டிச் சென்றவள்
என்னைத்தான் பார்த்தாலென்று!
உடையில் கவனம்
நண்பர்களுடன் அரட்டை
அரைக்கால் சட்டைக்கு விடுதலை
கையில் கடிகாரம்
பழைய சட்டையை போட மறுத்தல்
இன்னும் எத்தனை மாற்றங்கள் என்னுள்ளே!!
ஒரு சிறு மீசை
அரும்பிய நாள் முதல்....
அரும்பு மீசை...
ஒரு வரி கவிதைகள்...

நான்
என் பெயர்(அன்பு)
என் மனம்
என் அம்மா
நட்பு
காதல்
தோல்வி
அழுகை
சிரிப்பு
ஆதரவற்ற குழந்தைகள்
கடவுளின் "ஊனம்"
நொந்த மனம்
என் குரல்
என் நடனம்
என் கால்கள்
என் கற்பனை
என் கனவு
என் கவிதைகள்
என் கொள்கை
திறமை
நம்பிக்கை
கடவுள்
மயில் இறகு
நிலவு
மழை
காதல்
கோவில்
என் கோபம்
அப்பாவுடன் சண்டை
தம்பியுடன் மௌன விரதம்
என் பிடிவாதம்
பாசம்
நேசம்
என்னை புரியாத நட்பு
விரும்பும் வாழ்க்கை
வாழும் வாழ்க்கை
" நான் ஒரு கவிதை, என் பெயர் ஒரு கவிதை, என் மனம் ஒரு கவிதை,
புரிந்ததவருக்கும் நான் கவிதை,
புரியாதவருக்கும் நான் கவிதை,
மொத்தத்தில் கவிதையே நான்...
என் மீது நான் கொண்ட காதல் ஒரு கவிதை..
இது போதும்.. ஆனால் இன்னும் 1000 கவிதைகள் சொல்வதற்கு இருக்கிறது.. திரும்ப வருவேன் ..
புதிதாக.. புதிராக...
காத்திருங்கள்...
காத்திருப்பதும் கவிதை...
எது காதல் தெரியவில்லை....
என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா...
மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டு கொண்டால் - என்
மனம் வதைபடுகிறதே
அதுதான் காதலா...
அருகில் நீ
இல்லாத போதும்
உன்னுடன்
உறவாடி உரையாடி
மகிழ்கிறேனே
இதுதான் காதலா...
எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாச காற்று உள்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா...
யார் கேட்டும்
இல்லை என்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்க தோன்றுமே
அதுதான் காதலா...
பிரிவுகள் நேரும்போது
ஏதோ ஓர் உணர்வு - நம்
விழிகளுக்குள் நீர் நிரப்பி
செல்கிறதே
அதுதான் காதலா...
ஊரே நம் உறவை
காதலென்ற போது
நீ மட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களேன்று'...
எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியம்
என்பதால்...
எனது காதலிக்காக...

உன்னுடன் என்ன
பேச வேண்டும் என
இரவு முழுவதும்
யோசித்து வந்தேன்..
உன்னை கண்ட நொடியில்
அத்தனையும் மறந்து
ஒன்றும் அறியாதவனாய்
நிற்கிறேன்..
****************************
உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..
****************************
எனக்கு வரும்
ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என
என்னை விட அதிகமாக
ஏங்குகிறது என் தொலைபேசி..
உன் குரல் அதுக்கும்
பிடித்திருக்கிறதாம்..
****************************
பூமியிலும் தேவதைகள்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
உன்னை கண்ட பின்தான்
தெரிந்துகொண்டேன்..
****************************
என் இனியவளே..
தொலைபேசியில் நான்
"ஹலோ" என்றதும்
சிறிது நேரம் அமைதி காத்து
பின் பேசுகிறாயே..
அதுக்கு என்ன அர்த்தமடி..
நீயும் காதலிக்க
கற்றுக்கொண்டாயோ..
****************************
பேருந்து நிலையத்தில்
நிற்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு சொர்க்கம்தான்..
****************************
18 வயசுல.....

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?
**********************
கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !
**********************
உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன
**********************
பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.
**********************
உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?
**********************
துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!
**********************
உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.
**********************
பா.விஜய் அவர்கள் எழுதிய 18 வயசுல என்ற புத்தகத்தில் எனக்குப் பிடித்த கவிதைகள் இவை...
என் உயிர் நண்பனுக்காக....

ஓ... தோழனே! தோழியே!!
காலையில் மலருவது
மல்லிகை என்றால்...
உன்னைக் கண்டதும்
மலர்வது முகமா
இல்லை என் மனமா!
புது மலருக்குப் பூச்சூட்டி
புத்தம் புது பூவினிற்கு
புடவை கட்டி...
பனித்துளியை நீராட்டி
பூங்காற்றை அனுப்புவேன்
உனக்கு தூது சொல்ல...
சாதி, மதம், இனம், மொழி
இவற்றை எல்லாம் கடந்து வரும்
காற்றைப் போல நம் தூய நட்பையும்
சுவாசிப்போம்!!
காற்று வீச மறந்தாலும்;
இலைகள் அசைய மறந்தாலும்;
கடல் அலையை மறந்தாலும்;
பறவை பறக்க மறந்தாலும்;
மான் துள்ளி ஓட மறந்தாலும்;
குயில் கூவ மறந்தாலும்;
மயில்தோகை விரிக்க மறந்தாலும்;
நான் ஒரு நாளும் உனை மறவேன்!!!!!!!!!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...





















































