கா.பா. - தோழி - பிரித்தி...


டிஸ்கி: முதலில் இந்த பதிவு எழுத காரணமாக இருந்த அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்-அண்ணி பிரித்தி அவர்களுக்கு மிக்க நன்றி.. அண்ணன் கா.பா.வுக்கு கிடைத்த காதலி போல் எனக்கும் ஒரு காதலி கிடைக்க ஆசைதான்..சரி விடுங்க என் ஆசை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அண்ணன் கா.பா. விரைவில் அண்ணி பிரித்தியை கைப்பிடிக்க எல்லாம் வல்ல எழுச்சி ஏழுமலையாணை பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன்.

***************

இவ்வுலகில் தேவதையே இல்லை என்று சொல்லி வாக்குவாதம் பண்ணும் அம்மாவிடம் எப்படி சொல்லி புரிய வைப்பேன்.. அவளுக்கு மருமகளாக வருபவளே தேவதைதான் என்பதை..

சக்கரை நோய் வரப்போகிறதென எச்சரிக்கிறார் என் குடும்ப மருத்துவர்..முடிவு எடுத்துவிட்டேன் இனிமேல் உன் பெயரை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உச்சரிக்க வேண்டுமென்று..

நீ, நான், காதல், என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.. முத்தம், காமம் என்று சொன்னால் உடனே உதடுகள் ஒட்டிக்கொள்கிறது என்றேன் தோழியிடம்.. ஒரு மாதிரியாக என்னை பார்த்தவள் உன் உதடும் என் உதடும் ஒட்டிக்கொள்ள என்ன சொல்ல வேண்டும் என்கிறாள்!!!

"ரத்தசரித்திரம்" படத்தில் கூட ஆட்களை கொல்ல அரிவாள், துப்பாக்கியை உபயோகப்படுத்தினார்கள்.. ஆனால் என்னவளோ கையில் ஒரு தாளை வைத்துக்கொண்டு பயமுறுத்துகிறாள்.. அவள் கையில் "காவலன்" படத்திற்கான டிக்கெட்..

நீ போனபின்பும் கூட
வெட்கத்திலிருக்கிறது...
நீ ஆடிய ஊஞ்சல்!!

உன் கழுத்திலே இருப்பதற்கு
என்ன தவம் செய்திருக்கும்...
அந்த வெள்ளை பாசிகள்!!

***************

இந்த மொக்கைக்கு எதுக்குடா கா.பா.வுக்கு நன்றி சொன்ன அப்படின்னு கேட்டீங்கன்னா எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. அண்ணனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாக அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..வாழ்த்துக்கள் அண்ணா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் மகான் அல்ல...விமர்சனம்!


கதை என்னவென்றால்...அட நிறுத்துங்க,நமக்கெல்லாம் எதுக்கு பாஸ் கதை.. கொடுக்குற 50 ரூபாய்க்கு நல்லா டைம்பாஸ் ஆகுதா அப்படின்னு கேட்டீங்கன்னா நீங்க என் கூட்டாளிங்க..

இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக்கியம் வேணும்... காலேஜ் பசங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாது..சிகரெட்,கஞ்சா அடிக்கக்கூடாது.. காலேஜ் பசங்க அப்படின்னா புத்தகம் தான் படிக்கணும்... படத்துல ஒரு கதை இருக்கணும்.. கதாநாயகி சேலை மட்டும்தான் கட்டணும்..அப்படின்னு நினைக்கிறவங்க தயவு செய்து படத்திற்கு போகாதீங்க..அப்புறம் படம் பார்த்துவிட்டு, என்ன இந்த படத்துல காலேஜ் பசங்க கஞ்சா அடிக்கிறாங்க..இதை பார்த்துதான் எங்கூர் பசங்க எல்லாம் கெட்டு போறாங்க அப்படின்னு கண்டனப்பதிவு போடாதீங்க...

சரி விடுங்க படத்துக்கு வருவோம்...

கதை என்னன்னு கேட்டீங்கன்னா.. காலேஜ் படிக்கிற ஐந்து பசங்க போதைக்கு அடிமையாகி ஒரு காதல் ஜோடியை கொலை பண்றாங்க..அதுக்கு ஒரே சாட்சியா கதாநாயகனோட அப்பா..அவரையும் அந்த பசங்க கொலை பண்றாங்க.. தன் அப்பாவை கொன்ற அந்த பசங்களை திருப்பி பழி வாங்குவதே மீதிக்கதை.. இதற்கிடையில் காஜல் அகர்வாலுடன் காதல் கொள்ளும் கார்த்தி, என திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்தியுள்ளார் சுசீந்தரன்..

படத்தில் காலேஜ் பசங்களாக நடித்துள்ள ஐந்து பேரும் எக்ஸ்டிரானரி பெர்பார்மன்ஸ்.. அதிலும் நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக நடித்தவர் இதில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.. அதிலும் அவரது கண் சொல்லவே வேணாம்.. அப்புறம் பரட்டைத்தலையன், இந்த ஐந்து பேருக்கு துணை போகும் மாமா என எல்லோரும் தங்களது வேலையை கனகச்சிதமாக செய்துள்ளனர்...

காஜல் அகர்வால் முதல் பாதியில் காதலிக்க வருகிறார்..இரண்டாவது பாதியில் இரண்டு நிமிடம்.. ஒரு பாடல்.. அவ்வளவுதான்..

கார்த்தியின் தந்தையாக வரும் ஜெயபிரகாஷ் மிக அருமை...எல்லோருக்கும் இதே போல் அப்பா அமைந்தால் யோகம்தான்...

மற்றபடி வெண்ணிலா கபடிகுழுவில் வரும் 50 புரோட்டா சாப்பிடுபவர், குப்பத்தில் வசிக்கும் தாதா, இன்னும் நிறைய பேரை இயக்குனர் மிகச்சரியாக கையாண்டுள்ளார்..

படத்தின் இரண்டாவது ஹீரோ யுவன்... ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாயிருக்கும் நிலைமையில் படத்தின் பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் கலக்கி இருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர், சண்டைப்பயிற்சி அனல் அரசு, என எல்லோரும் ரவுண்டி கட்டி அடித்துள்ளனர்..

முதல் பட வெற்றிக்குப்பின் சுசீந்திரன், நகரத்தை மையமாக கொண்டு ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்துள்ளார்..

படத்தின் நாயகன் கார்த்தி, முதல் பாதியில் எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்துடனே இருக்கிறார்.. இவர் நடிக்கும் படத்தில் காமெடி பண்ண தனியாக ஆட்கள் தேவையில்லை.. இதுக்கு மேல் இவரை பற்றி சொன்னா சூர்யா தம்பி அப்படிங்கிறதால தான் இவன் இப்படி பேசுறான்னு சொல்லுவீங்க.. :-))

நான் மகான் அல்லா - இறகை போலே பறக்கிறேனே..

______________________


படத்தின் இடைவேளையின் போது தல நட(டி)க்கும் மங்காத்தா டிரெய்லர் போடப்பட்டது.. டிரெய்லர் போட்டதிலிருந்து ரசிகர்களின் அமைதிக்கு அளவே இல்லை.. பக்கத்திலிருந்தவர் உடனே என்னிடம் சொன்னார்.. அதை ஏன் என்னை பார்த்து சொன்னார்ன்னு தெரியலை..

ஏன் எல்லோரும் அமைதியா இருக்காங்க தெரியுமா? என்றார்..

தெரியலையே அண்ணே..

இத்தனை நாளா நடந்த தல இப்போ தான் உட்கார்ந்து இருக்கார்.. ஒருவேளை நடந்து நடந்து கால்வலி வந்துருச்சோ அப்படின்னு எல்லாம் பீல் பண்ணிருப்பாங்க என்றார்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அபிநயா-LC112-அன்பு-சிங்கம்...


எனக்கு எல்லாம் கஷ்டம் அப்படின்னா என்னவென்று கூட தெரியாதுங்க. என்னோட வாழ்க்கையில (நீ அப்படி என்னடா வாழ்ந்துட்டன்னு அத்திரி அண்ணன் கேட்காதீங்க..) இதுவரை நான் அழுதிருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்..நான் கடைசியா அழுதது கூட 3-ம் வகுப்பு படிக்கும் போது 2-வது ரேங்க் வந்ததுக்காக எங்கம்மா என்னை பூரிக்கட்டையாலே அடிச்சாங்க, அப்பத்தான் அழுதேன், அதுகூட அடிக்கிறதை நிப்பாட்டனுமே அப்படிங்கிறதுக்காக... இப்படி இருந்த நான் நேத்து மதியம் குப்புறபடுத்து விஜய் டி.வி.யில் "விஜய் அவார்ட்ஸ்" என்னும் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த நிகழ்ச்சி என்னவோ பல மாதத்துக்கு முன்னாடியே போடப்பட்டது தான் என்றாலும் இந்த மானிடனால் நேற்றுதான் பார்க்க முடிந்தது..அப்போது 2009ம் வருடத்துக்கான சிறந்த NEW COMER FEMALE என்னும் விருது "நாடோடிகள் அபிநயா" வுக்கு கொடுக்கப்பட்டது..அந்த விருதை வாங்கியவுடன் அவங்க உணர்ச்சி பொங்க பேச ஆரம்பிக்க அவளது இயலாமையை அறிந்து கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.. அவளின் அழுகையை கண்டவுடன் என்னமோ தெரியலைங்க என்னையும் அறியாமலே என் கண்கள் கலங்கின...
HATS OFF ABINAYA

**********************



சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே என்னை ரொம்ப கவர்ந்த படம் களவாணிதாங்க..மூன்று நிதிகளின் பிரச்சினையால் எங்கள் ஊரில் ஒரு பிட்டுபட தியேட்டரில் அந்த படத்தை ஓட்டினார்கள்.. சரி, நல்ல படத்தை எங்க போய் பார்த்த என்ன என்று எண்ணிக்கொண்டு வழக்கம்போல் ஓனரின் உபயத்தோடு படத்துக்கு சென்றேன். படம் நன்றாக இருந்தாலும் படம் பார்த்த இடம் சரியில்லை என்பதால் படம் மனதில் அவ்வளவாக நிலைக்கவில்லை..இருப்பினும் ஹரிஸ் ராகவேந்திராவின் குரல் மட்டும் நெஞ்சில் ஒலித்துக்கொண்டு இருந்தது..சரி இருக்கவே இருக்கு திருட்டு டி.வி.டி என்று வாங்கிவிட்டேன்..இதுவரை இரண்டு நாளில் நான்கு முறை பார்த்தாச்சு.. படம் பார்த்ததன் விளைவா என்னவென்று தெரியலை, தோழி பேசும் போதெல்லாம் "கட்டிக்கிறேன்னு சொல்லு" என்று சொல்லச்சொல்கிறேன்..படத்தின் கதாநாயகி ஓவியாவுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்ங்க..

**********************


நான் எப்போதுமே கிரிக்கெட் விளையாடும் போது ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்..கடந்த சில வாரங்களாக நான் சரியாக விளையாடாத காரணத்தினால், வழக்கமாக நான்காவது ஆளாக களமிறங்கும் நான் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தேன்.. சரி டீம்லயாவது சேர்த்துக்குறாங்களே அப்படிங்கிற நம்பிக்கையில நானும் விளையாட போனேன்.. நேத்து எங்களுக்கும் எங்கள் ஊரின் அருகில் உள்ள விஸ்வநத்தம் என்கிற ஊருக்கும் மேட்ச்.. முதலில் பேட் செய்த அவர்கள் 16 ஓவர்களுக்கு 96 ரன் அடிச்சாங்க.. நாங்களும் திரும்ப மன தைரியத்தோட களமிறங்கி நல்லாத்தான் விளையாடுனோம்.. நானோ சந்தோஷமாக இருந்தேன், நல்லவேளை நாம இன்னிக்கு இறங்க வேண்டி இருக்காது என நினைத்துக்கொண்டிருக்கையில் வரிசையாக எல்லோரும் பேட்டை கொண்டுபோவதும், திரும்ப கொண்டு வருவதுமாய் இருந்தனர்.. இறுதியில் 1 ஒவருக்கு 4 ரன்கள் என்று இருக்கையில் நான் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே மனதை தைரியப்படுத்திக்கொண்டு களமிறங்கினேன்.. நான் சந்தித்த முதல் பந்தே பவுன்சர்.. நான் அம்பயரிடம் நோ-பால் கேட்க, அம்பயர் என்னை பார்த்து நீ இன்னும் வளரணும் தம்பி என்றார்.. கேட்டு அசிங்கப்பட்டுடீயேடா அன்பு என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த பந்தை வீச அதுவும் கீப்பர் கைக்கே போனது. கீப்பர் தவறவிட்டவுடன் என்னோட பாட்னர் மிகவும் சிரத்தை ஓடி வர நானும் ஓடினேன்..அப்பாட தப்பிச்சோம் அப்படின்னு நினைக்கும் போதே பாவிப்பையன் சிங்கிள் தட்டிவிட்டான்..கடைசி 3 பந்து 2 ரன்கள்.. மனதிற்குள் ஆரோமலே பாடல் ஒலிக்க நானும் எப்படியாவது அடிக்கவேண்டும் என்று எத்தனிக்க மறுபடியும் மிஸ்ஸிங்.. இம்முறை கீப்பர் என்னருகே நிற்பதனால் பைஸ் ரன் கூட எடுக்கமுடியவில்லை. 2 பந்துகள் 2 ரன்கள்.. சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம் என்று முணுமுணுத்துக்கொண்டே மட்டையை ஓங்கினேன்.. என்னையும் அறியாமல் பந்து தானாகவே மட்டையில் பட்டு பவுண்டரி லைனை தொட்டது..அன்பு என்னிக்குமே நீ சிங்கம்தான்டா...

தயவு செய்து படிக்கிற மக்கள் கமெண்ட் போடுங்க.. வாழ்த்த மனமில்லை என்றாலும் ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பல் விளக்கிட்டியா தோழி.....


கடற்கரை மணலில் கடலை போட்டுக்கொண்டிருந்த போது சொர்க்கம்னா என்னடா என்றாள் தோழி..உன் மடியில் தலை வைத்து தூங்குவது மாதிரி என்றேன்..அப்படின்னா நரகம்னா எப்படிடா இருக்கும் என்றாள்..சிறிது நேர தயக்கத்திற்குப்பின் சொன்னேன்..அந்த சம்பவம் உண்மையில் நடந்தால் அது தான் நரகம் என்றேன் என்றேன்..கோபத்துடன் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்...

போனில் சிணுங்கியவாறே என்னைய உனக்கு எவ்வளவுடா பிடிக்கும் என்றாள்.. ஐம்பது ரூபாய்க்கு பிடிக்கும் என்றேன்..புரியாதவளாய் விளக்கம் கேட்டாள்..ஐம்பது ரூபாய்க்கு டாப்-அப் போட்டு நீயே கால் பண்ணி பேசுறியே அதான் என்றேன்..

தினமும் கவிதையா எழுதுறியே இதெல்லாம் நீயா எழுதுறியா இல்லை எதையும் பார்த்து காப்பி அடிக்கிறியா என்றாள்..காப்பி தான் அடிக்கிறேன் என்றேன்..பலத்த சிரிப்புடன் எதை பார்த்துடா காப்பி அடிச்ச என்றாள்..உன்னைப்பார்த்துத்தான் தினமும் காப்பி அடிக்கிறேன் என்றேன்..

என்ன காலர்டீயூன் வைக்கலாம் என தோழியிடம் கேட்டேன்..உனக்குத்தான் சூர்யா பிடிக்குமே சிங்கம் படத்திலிருந்து வை என்றாள்..சிறிது நேரம் கழித்து கேட்கிறாள்..ஜோதிகாவை எவ்வளவுடா பிடிக்கும் என்று...என்ன சொல்ல என்று தெரியாமல் இருக்கிறேன்..

உதட்டோடு உதடாக தேன் பருக வந்த தோழியை தடுத்து நிறுத்தினேன்..வெட்கப்பட்டவளாய் தலைகுனிந்தபடி என்னடா என்றாள். காலையில் பல் விளக்கிட்டியா என்றேன்..மீண்டும் அதே கோபத்துடன்...

டிஸ்கி:-
1.எப்படி சிவகாசியில் கடற்கரை இல்லையோ அதே மாதிரி எனக்கு தோழியும் இல்லைங்க..எல்லாமே புனைவுதான்..
2.இந்த பதிவை பார்த்து கார்க்கி அண்ணன் மன்னிப்பாராக...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மதராசப்பட்டினம் - திரைப்பார்வை!!!


அது என்னவென்று தெரியலைங்க.. இயக்குனர் பாலா கிட்ட வொர்க் பண்ணபிறகு எல்லாரும் நல்லா நடிக்க ஆரம்பிச்சுடுறாங்க...விக்ரம், சூர்யா வரிசையில் இப்போது ஆர்யா...

மதுரையிலிருந்த தமிழ் சினிமாவை கொஞ்சம் நகர்த்தி சென்னைக்கு கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் விஜய்..அதிலும் 1947 க்கு. கீரிடம் படம் எடுத்தவரா இவர் என எல்லோரையும் அசர வைத்துவிட்டார்.

படத்தின் கதை என்னவென்றால் தியேட்டரில் போய் பாருங்க மக்களே..அப்புறம் எதுக்குடா பதிவு போட்ட அப்படீன்னு கேட்டீங்கன்னா...கீழே கொஞ்சம் படிங்க கடைசியில சொல்றேன்..


ஆர்யா: சத்தியமா இவர்கிட்ட இருந்து இப்படி ஒரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லைங்க. அவர் பேசுறதுக்கு முன்னாடியே அவர் கண் பேசுது. மல்யுத்த வீரனாகவும் சரி,ஏமியுடன் காதல் கொள்ளும் காட்சியுலும் சரி, பாடல் காட்சிகளிலும் சரி, மனுஷன் பின்னுகிறார்..அதிலும் நீங்க இங்கிலிஸ் பாடம் கத்துக்கிறப்ப தியேட்டரே கொஞ்சம் அலறித்தான் போனது..மற்றபடி தல,தளபதி,லொட்டு,லொசுக்கு,மண்ணு,மண்ணாங்கட்டி, இவங்க கூட எல்லாம் உங்களை ஒப்பிடும் போது நீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ்..



ஏமி: எந்த ஊரு தாயி நீ.. உருக்கி வைச்ச மெழுகுவர்த்தி சிலை மாதிரி இருக்கியேயம்மா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு..ஆர்யா இங்கிலிஸ் படித்து அதை ஏமியிடம் ஒப்பிக்கும் போது மறந்துவிட உடனே ஏமி "ம ற ந் து ட் டி யா" என்று தமிழ்ல பேசுவாங்க..அப்ப அவங்க ரெண்டு கண்களை காட்டும் போது ஒரு பிண்ணனி இசை வரும் சான்ஸ்லெஸ் ஜி.வி.. படம் பார்க்குறவங்க இந்த சீனை மறந்துவிடாதீங்க.. படம் முழுக்க இவங்க ஆட்சிதான்...
ஜீ.வி.பிரகாஷ்: தமிழ் சினிமாவிற்கு நல்ல பிண்ணனி இசையமைப்பாளராக இருக்கிறார். ஆரூயிரே இந்த பாட்டை தவிர எல்லா பாட்டும் செம. பல இடங்களில் உங்க இசை படத்தை இன்னும் சுவாரஸ்சியமாக்கிருக்கிறது..

எடிட்டிங் ஆண்டனி படத்துக்கு பேர் போடும் போதே நீங்க பாதி ஜெயிச்சுட்டீங்க பாஸ்..

ஆர்ட் டைரக்டர் செல்வகுமார், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, இந்த ரெண்டு பேரும் இந்த படத்துக்கு ரொம்ப உழைச்சு இருக்காங்க.. 1947 - ல் உள்ள, சென்ட்ரல், ஸ்பென்ஸர் பிளாஷா, பின்புறம் ஹார்லிக்ஸ் விளம்பரம், என ஒவ்வொரு சீனிலும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க..

மற்றபடி படத்தில், நாசர், எம்.எஸ்.வி.பாஸ்கர், வெள்ளைக்கார போலீஸ்துரை, ஏரோபிளேன் பறந்தாலே குண்டு போட போடுறாங்க என்று சொல்லி கொண்டே ஓடும் நபர், ஒரே ஒரு வாத்தியார், எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கும் வெண்ணிலா கபடிகுழு அப்பு குட்டி, படகு ஓட்டிச்செல்லும் வயதான கிழவர் இன்னும் எத்தனையோ பேர் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்..

கடைசியாய் இயக்குனர் விஜய் உங்களை எப்படி பாராட்டினாலும் போதாதுங்க..லண்டனில் இருந்து கிளம்பி சென்னை மற்றும் மதராசப்பட்டினத்தை மாற்றி மாற்றி காண்பித்து திரைக்கதையை கொஞ்சம் கூட தளரவிடாமல் கொண்டு போயிருக்கீங்க..உங்க கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம் பாஸ்...

அப்புறம் எதுக்குடா பதிவு போட்ட அப்படீன்னு கேட்டீங்கன்னா...

மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் நன்றி சொல்லத்தான்.!!!கிட்டத்தட்ட 2.45 மணி நேரம் ஓடுகின்ற இந்த படத்தை எந்தவித அலுப்பும் தட்டாமல் நம்மை இருக்கையோடு இருக்கையாக உட்காரச்செய்திருக்கிறார்கள்..

தியேட்டர் கமெண்ட்ஸ்:-

ஏமி ஒரு காட்சியில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஆர்யாவுடன் டாவ்வடித்துக்கொண்டிருக்கும்..அதைப்பார்த்து பின் வரிசையில் இருந்த ஒருவர் "மாப்ள அப்பவே முக்காடு போட்டுக்கிட்டு சுத்தி இருக்காங்கடா" என்றார்..

போலீஸ் நிலையத்தில் ஒரு போலிஸ்காரன் ஆர்யாவிடம் "இந்த தடவை நீ தப்பிச்சிட்ட அடுத்த தடவை உயிரோட போக மாட்டே" என்பான். அதற்கு ஆர்யா "நானும் அதே தான் சொல்றேன்" என்று சொல்லும் போதும் ரசிகர்களின் கைத்தட்டல் கொஞ்சம் அதிகம்...

**********************

படம் முடிந்து வெளியேறும் போது தீவிர விஜய் ரசிகனான என் நண்பனிடம் கேட்டேன்...

மாப்ள...இந்த படத்துல ஒரு வேளை உங்க தலைவர் விஜய் நடிச்சிருந்தா எப்படிடா இருந்திருக்கும் என்றேன்..

என்னை ஒரு மாதிரி ஏறஇறங்க பார்த்துவிட்டு "ஏன்டா உனக்கு மட்டும் இப்படி யோசிக்கத்தோணுது" என்றான்..

இல்லை மாப்ள..படத்துல ஒரு சீன்ல ஆர்யா ரொம்ப போலிஸ்துரை கூட சண்டை போடுவார்..ஒருவேலை உங்க தலைவரா இருந்தா ஒரு நிமிஷம் தான் எதிரில் நிற்பவன் ஆள் காலி என்றேன்..

அருகிலிருந்த தெரியாத நபர் ஒருவர் உடனே "படம் பார்க்குற நம்மளும் காலியாயிடுவோம் தம்பி" என்றார்..

மதராசப்பட்டினம் - ஒரு தடவை இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்...



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன்னைத்தவிர...


உன் தலையில் இருந்து
தவறி விழுந்த ஒற்றை முடி..

அந்த முடியில் குடி கொண்டிருந்த
சொர்க்கத்தை அடைந்த பூக்கள்...

உனக்கே தெரியாமல் உன்னிடம்
இருந்து களவாடிய ஹேர்-கிளிப்...

நீ முகம் துடைக்கையில் விழுந்த
ஸ்டிக்கர் பொட்டு...

கீழே விழுந்து நொறுங்கி போன
வளையல் துண்டுகள்..

நீ ஆசையாய் சாப்பிடும்
டைய்ரிமில்க் சாக்லெட் கவர்...

மை இல்லை என அலட்சியமாய் - நீ
தூக்கி எறிந்த பேனா...

உன் கழுத்தில் இன்பவேதனையை அனுபவித்து
அறுந்து விழுந்த பாசிமணி...

நீ அடிக்கடி வெட்டி கீழே போடும்
நகத்துண்டுகள்...

இவை அனைத்தும்
உன் நினைவுகளாய்
என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன...

உன்னைத்தவிர...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீ மொதல்ல ஆள விடு சாமி...


வீட்டிற்குள் அப்பா மாட்டி வைத்த படத்தில்
முருகன் வேலுடனும் சேவலுடனும் சிரிக்கிறார்.
அம்மாவோ வெள்ளி செவ்வாய்களில், தவறாமல்
மாரியம்மனுக்கும் காளியம்மனுக்கும் , அவர்களின்
கோயிலிக்கு சென்று, தரிசனம் செய்கின்றார்.
மாமாவோ மாதாமாதம் மடப்புரம் செல்கின்றார்.
சித்திக்கு சிந்தலக்கரை வெட்காளிதான் உச்சிதமாம்.
தாத்தாவோ, குலதெயவம்தான் குலம் காக்குமென்கிறார்.
சாமி இல்லையென்று, என் அக்கா புருஷன்
சொன்னால், பாட்டி பத்ரகாளியாகின்றாள்.
அக்காவோ, கணவனுக்கு நல்ல புத்தி குடுவென‌
சித்தி விநாயகரைத் துதிக்கின்றாள், ஆனால்
அண்ணனுக்கு அய்யனார்தான் இஷ்ட தெய்வமாம்..
கருமாரியை கவனித்தால் கஷ்டமெல்லையென,
அங்கலாய்க்கிறாள் பக்கத்து வீட்டு மாமி.
ஏனோ, என்னால் எவரிடமும் கேட்கமுடியவில்லை
"எங்கே உன் கடவுளை காமி" என, கேட்டால் எல்லாரும்
சொல்லி வைத்தாற் போல் சொல்கின்றனர்.
" நீ மொதல்ல ஆள விடு சாமி" என..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கடிதங்கள்...


கனவே கனவே

என் கனவெல்லாம் நீயே...

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்...

நீ நடக்கும் வீதியில்
தூசியே இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை
நான் கடந்து போவதால்...

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை
நான்
தொடருந்து வருவதால்...

நீ தூக்கி ஏறியும்
குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ
அது குடி புகுவதால்...

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில்
என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும்
தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்

என்னைத் துண்டு
துண்டாக்கிவிட்டு நீயோ
தூரமாய் போகிறாய்...

தூக்கத்தைத் தொலைத்து நான்
திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத
என் காதல் கடிதங்கள் மட்டும்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையில்...!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் காதலியின் பரிசுபொருள்

ஏதேதோ பேசிய பிறகு
இறுதியாய் கேட்டாய்..
நாளை என்ன நாளென்று..

அதை நீ சொல்லி நான்
கேட்க வேண்டும் என்பதற்காக
அமைதியாய் இருக்க..

சிறிது நேர மௌனத்திற்கு
பின் சொன்னாய்...
நம் காதலின் முதலாம் ஆண்டு
நிறைவு தினமென்று..

அப்போது தான் புரிந்து கொண்டவன் போல சிரிக்க..

நாளை என்ன பரிசு தருவாய் என்றாய்?

பதிலுக்கு நீ என்ன தருவாய் என்றேன்...

பதில் சொல்லவில்லை - சொன்னாய்
நீ கொண்டு வரும் பரிசு என் வாழ்நாளில் நான் மறக்கக்கூடாது - அதேபோல்
நான் கொண்டு வரும் பரிசும் அப்படியே தான் இருக்கும் என நினைக்கிறேன்...

மறுநாள் காலை விடியும் பொழுதே
ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனை போல
உன் பரிசு பொருளுக்காக காத்திருந்தேன்..

இருவரும் சந்தித்தோம்...
என்னை விட அவசரப்பட்டவளாய்...
எங்கே எனக்கான பரிசு பொருள் என்றாய்..

எதுவும் அறியாதவனாய் நிற்க...
அதுவரை உரையாடிய அவள் இதழ்கள்
உரையாடாமல் நின்றன..

உரையாடமல் நின்ற இதழ்களை
நான் சிறிது நேரம் உறவாடிக்கொள்ள
எனக்கான பரிசுப்பொருள் எங்கே என்றேன்..

அதனுடன் தானே இவ்வளவு நேரம்
உரையாடிக்கொண்டிருந்தாய் என்கிறாய்...

என்னவென்று புரியாமல் நான்.. :-)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடலை! கடலை! கடலை!



கடலை ரசித்தபடி
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!

குறிப்பு:- மீள்பதிவு....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பையா-வும் நானும்....


படத்தின் பாடல்களை கேட்கும் போதே, எப்படா படம் வரும் என்று காத்திருந்தேன்..ஒரு வழியாக நேற்று வெளியானது..வழக்கம்போல் ஓனரின் உபயத்தால் பையா-வை பார்க்க முடிந்தது..

அழகான ஒரு பெண்ணை பேருந்தில் சந்திக்கிறீர்கள்..பின் அவளையே அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது..நீங்கள் வண்டி ஓட்டும் செல்லும் போது அவளே உங்களிடம் லிப்ட் கேட்கிறார்கள் பாம்பே வரைக்கும்..யாராச்சும் வரமுடியாதுன்னு சொல்லுவோமா என்ன..??? இதுதான் பையா படத்தின் கதை..அவளை பாம்பே கூட்டிட்டு போகும் போது இவனை ஒரு கும்பலும் அவளை ஒரு கும்பலும் வலை விரித்து தேடுகிறது..அவர்களிடம் இருந்து மீண்டு வருவதே மிச்ச கதை..



கார்த்தியின் ஒவ்வொரு அசைவிலும் சூர்யாவினை பார்க்க முடிகிறது..சில நேரங்களில் சூர்யாவின் படம்தான் பார்க்கிறோமோ என்ற எண்ணத்தோன்றுகிறது..ஒவ்வொரு காட்சியிலும் கார்த்தி மிகவும் என்ஜாய் பண்ணி நடித்திருக்கிறார்..காதல் காட்சிகளில் தமன்னாவுடன் பேசும் போதும், சண்டைக்காட்சிகளில் வில்லனும் பேசும் போதும், இவர் காட்டும் முக பாவனைகள் என்னவென்று சொல்ல..தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்த இன்னொரு சூர்யாவாய் அவதாரம் எடுத்திருக்கிறார்..இதுவரை கைலியுடன் பார்த்த அவரை கலர் கலர் காஷ்டியூம்களில் பார்க்கும் போது ஒரு சின்ன பயம் தோன்றியது..எங்க சூர்யாவை மிஞ்சிடுவாரோ என்று...



தமன்னா பெரிதாக வேலை இல்லாவிட்டாலும் பாடல் காட்சிகளில் தன்னால் முடிந்தவரை உழைத்திருக்கிறார்...(கூடிய சீக்கிரமே ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் தமன்னா முன்னேற்றக்கழகம், மதுரை கிளை.) விருப்பம் இருப்பவர்கள் இணைந்து கொள்ளலாம்...

படத்தில் காமெடிக்காக வில்லன்கள் பயன்படுத்திருக்கார்கள்...

படத்தின் இசை யுவன் come back என்று சொல்லிக்கொள்ளலாம்...பாடல்களிலும், பிண்ணனி இசையிலும் கலக்கியிருக்கிறார்..என் காதல் சொல்ல நேரமில்லை என்னும் பாடல் திரையில் வரும் வந்த விசில் சவுண்டுக்கு அளவில்லை...

ஒளிப்பதிவாளர் மதியும், எடிட்டர் ஆண்டனியும் தங்கள் பணியை செவ்வென செய்து முடித்துள்ளார்கள்...

என்னடா படத்தில் குறையே இல்லையா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..

என்னதான் பல குறைகள் என் கண் முன்னே வந்து சென்றாலும், எப்போதும் என்ஜாய் பண்ணி நடித்துக்கொண்டிருந்த கார்த்தியும், அழகான தமன்னாவும், அதனை மறைத்துவிட்டார்கள்..

முதன் முதலாக கலர் கலர் காஷ்டியூம்களில் கார்த்தி, அழகான தன் இடையை எப்போதும் தாராளமாக காட்டிக்கொண்டிருக்கும் தமன்னா, தேன் போன்ற ஐந்து பாடல்கள், அழகான பிண்ணனி இசை, தொலைதூர கார் பயணம், அழகான சேஸிங் காட்சிகள், என இரண்டரை மணி நேரம் எந்தவித சலிப்பும் தட்டாமல் செல்கிறது பையா...

படம் முடிந்து வெளியேறும்போது எனது சைக்கிள் கூட கார் வேகத்துக்கு சென்றது என்னவோ மறுக்கமுடியாத உண்மை..

பையா - சூப்பர் டைம் பாஸ் மச்சி...

பின்குறிப்பு:-

இத்தனை நாள் நான் உயிரோடி இருக்கிறேனா, இல்லையா என்பதை அடிக்கடி தொலைபேசியின் மூலம் அறிந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி..கொஞ்சம் வேலை அதிகம் மக்களே..அதான் பதிவிட முடியவில்லை..மன்னிக்கவும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் தான்டா கடவுள்..


திருடினேன் போலிஸ் துரத்தியது..
விபச்சார விடுதி கட்டி நடத்தினேன்..
மகளிர் சங்கங்கள் தடுத்தன..

வேலை செய்ய மனமுமில்லை..
அதற்கான எண்ணமும் இல்லை..

என்ன செய்யலாம் என்று
யோசித்த வேளையில்
காவி உடை அணிந்து
நான் தான்டா சாமியார் என்றேன்
ஒரு கும்பல் காலில் விழுந்தனர்..
நீ தான் என் இறைவன் என்றது இன்னொரு கும்பல்..

அடங்கொக்கமக்கா இப்படியும் வாழலாமோ
என்று எண்ணி முடிப்பதற்குள்
மாட மாளிகைகள் என்ன..
மாலை மரியாதை அணிவகுப்புகள் தான் என்ன..

குமுதமும்,குங்குமமும், போட்டி போட்டு
அழைக்கின்றன..கட்டுரை எழுத..

ஏற்கனவே எழுதுபவன் கூட
என்னை பற்றி புகழ்பாடுகிறான்..

காலையில் வேதம் ஓதம் பாடிய எனக்கு
மாலையில் சிறிது நேரம் ஓய்வு தேவையாகத்தான் இருந்தது..
அழைத்தேன் நடிகையை..
வந்தாள் காலை அமுக்கினாள்..
$%%^*‍)()
^‍%‍^*^*($%^^

ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா என்னா சுகமடா..

இது கூட அறியாமல் இன்றும்
காலையில் வேலைக்கு அவசரம் அவசரமாக
கிளம்புவனை பார்த்தால்
சிரிப்பாகவும் கேலியாகவும் இருக்கிறது..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நடிகர் விஜயும்,கேபிளும்,கார்க்கியும்..


குறிப்பு:- கீழே உள்ள பதிவில் சிகப்பு கலரில் காட்டப்பட்டுள்ளது அவர்களுடைய மைண்டு வாய்ஸ் ஆக குறிப்பிடப்பட்டுள்ளது

குருவி,வில்லு,வேட்டைக்காரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்து கொண்டிருக்கின்ற இளைய தளபதி (டாக்)டர்.விஜய் அவர்களின் தீவிர ரசிகனும்,அவரின் கட்சியின் மேனேஜருமாக கார்க்கி இருக்கிறார்..

இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்து தன் அடுத்த படத்திற்கான விவாதத்தினை தொடங்குகின்றனர்...

கார்க்கி, என்னோட அடுத்த படம் ஒரு வித்தியாசமாகவும்,அதே சமயம் அரசியல், மக்களின் பிரச்சினைகள், சமுதாய கருத்துக்கள் பற்றி எடுத்துரைப்பதாகவும் இருக்கணும் என்று நினைக்கிறேன்..நீ என்ன நினைக்கிற..

இல்லை தலைவா..ஏற்கனவே தமிழ்படத்தில் நம்மளை பற்றி நாரடிச்சுட்டாங்க..இனிமேலும் இது எல்லாம் கொஞ்சம் வேணாமே..

இல்லை கார்க்கி..நான் உறுதியான முடிவோட இருக்கேன்..அடுத்த படத்தில் நான் அரசியல் கேரக்டரில் நடிச்சே ஆகணும்..

அப்ப சரி உன்னை யார் வந்து திருத்தமுடியும்..

என்ன கார்க்கி ஒன்னும் பேசாம இருக்கே..

இல்லை தலைவா..எனக்கு தெரிந்த இயக்குனர் ஒருத்தர் ரொம்ப நாளாக படம் பண்ண துடித்துக்கொண்டிருக்கிறார்..அவரிடம் நிறைய கதைகள் உள்ளன.அவரை வேணா வரச்சொல்லட்டுமா..

யாருப்பா அவர்..

வேற யாருமில்லை..கேபிள்சங்கர் னு சொல்லி முடிப்பதற்குள்...

அவரா..எல்லா படமும் பார்த்துவிட்டு முதல் நாளே விமர்சனம் எழுதுவாரே அவர் தானே..அப்ப சரி..

என்ன தலைவா..உடனே .கே.சொல்லிடுங்க..

அதாவது கார்க்கி..அவர் படம் எடுத்தா விமர்சனம் நல்லா இருக்குன்னு எழுதுவார்..அதை வச்சாவது ஒரு 1000 பேர் படம் பார்க்க வருவாங்க இல்லையா...
இந்த பொழைப்புக்கு...

என்ன கார்க்கி அமைதியா இருக்க..நான் சொல்றது சரிதானே...

ம்ம்ம் சரிதான் தலைவா..எப்படி பார்த்தாலும் பத்து நாள் ஓடப்போகுது..

சரி அவரை நாளைக்கே வீட்டுக்கு வரச்சொல்லு..வரும் போதே நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட கதைகள் ரெடி பண்ணி கொண்டுவர சொல்லு..

மெரினா கடற்கரையில் கேபிளும் கார்க்கியும்..

என்ன கார்க்கி திடீரென்று வரச்சொல்லி இருக்க..

இல்லை அண்ணே..எங்க தளபதி உங்க கூட ஒரு படம் பண்ணலாம் என்று நினைக்கிறார்..நீங்க என்ன பீல் பண்றிங்க..அதுவும் அரசியல் சப்ஜெக்ட் ஆகத்தான் இருக்கணும் என்று நினைக்கிறார்..

அரசியலா..இல்லை கார்க்கி என்னோட முதல் படம் கொஞ்சம் காதல் கதையா இருந்தா நல்லா இருக்கும்ன்னு பீல் பண்றேன்..

எனக்காக அண்ணே..சும்மா கதை மட்டும் வந்து சொல்லுங்க.. கதை பிடித்திருந்தால் அதுக்கு அப்புறம் மிச்சத்தை பார்ப்போம்..

சரி கார்க்கி உனக்காக வருகிறேன்..

மறுநாள் காலை..விஜய், கார்க்கி, கேபிள்சங்கர்..


வாங்க, வாங்க, சங்கர் சார்....எப்படி இருக்கீங்க?.

நல்லா இருக்கேன் சார்..நீங்க எப்படி இருக்கீங்க?..

எனக்கென்ன இந்த தமிழக ரசிகர்கள் இருக்கும் வரை கவலை இல்லையே. நான் என்ன பண்ணினாலும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க...எனக்கே காமெடியாத்தான் இருக்கு..அது சரி..கதை என்ன வென்று சொல்லுங்க..

சார் படத்தின் கதைப்படி நீங்க மூன்று முக்கிய கேரக்டரில் நடிக்கீறிங்க..

என்ன சொல்றீங்க சங்கர் சார் நிஜமாவா..

ஆமா சார்..படத்தோட ஓபனிங் சீன்ல அமெரிக்கா வெள்ளை மாளிகை காட்டுறோம்..அங்கே அமெரிக்க அதிபரை பின்பக்கமாக நிக்கிறார்..

யாரு..பராக் ஓபாமாவா...

இல்லை சார்..அமெரிக்க அதிபரே நீங்கதான்.

கிழிஞ்சது போ (கார்க்கி)

அப்புறம்..(விஜய்)

இந்திய பிரதமருடன் பேசிக்கொள்கிறார்..இங்கே இந்திய பிரதமராகவும் நீங்களே..

சபாஷ்..வெரி குட் சங்கர் சார்..இதை இதை இதைத்தான் இத்தனை நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..என்ன பேசிக்கிறாங்க..

அமெரிக்காவும் இந்தியாவும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது பற்றி தீவிரமாக பேசிக்கிறாங்க..

அப்புறம்..

இதற்கு இடையூறாக சீன நாட்டின் பிரதமர் இருக்கிறார்..இவரை கொலை செய்ய தமிழகத்தின் தீவிர முன்னணி ரவுடியாக மூன்றாவது கேரக்டரில் களமிறங்குறீர்கள்..

வாவ்..அட்டகாசம்..கேட்கும் போதே... ம்ம்ம் மேலே சொல்லுங்க சார்..

ரவுடி கேரக்டரில் வருபவர் மதுரையில் சிறு கிராமத்தில் வசிக்கிறார்..கிராமத்தில் தண்ணீர் வசதியோ,கரண்ட் வசதியோ,படிப்பறிவோ எதுவும் இல்லை..தன் கிராம மக்களின் நிலையை கண்டு மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். எப்படியாவது தன் கிராம மக்களுக்கு இந்த சுதந்திர நாட்டில் சுதந்திரம் வாங்கித்தர ஆசைப்படுகிறார்..இவன் ரவுடி தான் என்றாலும் மனதுக்குள் கொஞ்சம் பாசமும்,இரக்கமும் உண்டு..தன் கிராமம் முன்னேற வேண்டுமானால் நான் முதலமைச்சராக வேண்டும் என தீர்மானிக்கிறார்..

இந்நிலையில் அவருக்கு பிரதமரிடம் இருந்து அழைப்பு வருகிறது..சீன அதிபரை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்..

கொலை செய்தால் பதிலுக்கு என்ன கூலி கிடைக்கும்..

என்ன வேண்டும்..

தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்..

என்னது முதல்வர் பதவியா..

ஆமாம் முதல்வர் பதவி கிடைத்தால் நான் இந்த வேலையை செய்கிறேன் என்கிறார்..

சிறிது நேரம் யோசித்த பிரதமர் சரி என்று சொல்லிவிட நீங்கள் சீனா செல்ல தயாராகிறீர்கள்..

ஒருவழியாக சீன அதிபரை கொன்றுவிட்டு முதல்வர் ஆசையுடன் இந்தியா திரும்பும் வேளையில்..பிரதமர் உங்களை ஏமாற்றிவிடுகிறார்..

சீனாவுக்கே சென்று அவனை கொன்ற எனக்கு இந்தியாவில் உன்னை கொல்ல நேரம் ஆகாதுடா என்று சவால்விடுகிறார்கள்..

இதோட இடைவேளை...

இதற்குபின் இந்திய பிரதமரை கொலைசெய்ய முயற்சிக்கிறீர்கள்..ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்துவிடுகிறார்..ஆனால் கடைசியில் அவரை கொல்லும் தருவாயில் இதுவரை அனாதையாக வாழந்து வந்த உங்களுக்கு அவர்தான் அப்பா என்று தெரிய வருகிறது...

எப்படி எண்ணே (கார்க்கி)

என்னது எப்படி...

எப்படி தெரியும் கடைசி நேரத்தில் அவர்தான் அப்பா என்று..

மச்சம் ரெண்டு பேருக்கும் ஒரே இடத்தில் இருக்கும்..அதே மாதிரி இருவரும் ஒரே மாதிரி செயின் அணிந்து இருப்பர்..

இல்லை அண்ணே..இதுலே லாஜிக் இடிக்குது..

இதுல மட்டுமா லாஜிக் இடிக்குது. நான் அமெரிக்க அதிபர் என்பதிலே மிகப்பெரிய லாஜிக் இடிக்குது...இதுக்குப்போய் லாஜிக் எல்லாம் பார்த்துக்கிட்டு..நீங்க சொல்லுங்க சங்கர் சார்..நான் கதைப்படி அப்பாவை கொன்றுவிடுவேனா..இல்லையா..என்னாலே சஸ்பென்ஸ் தாங்க முடியலை..
அதை இனிமேல் தான் யோசிக்கணும்...ம்ம்ம் அதுவந்து படம் எடுக்கும்போது யோசிப்போமே...

அதுவும் சரிதான்..ஏனென்றால் படம் எடுக்கும் போது நிறைய ஐடியா கிடைக்கும்..

இது தப்பு சங்கர் அண்ணே..சரியான கதைக்கரு நீங்கள் இல்லாமல்
களமிறங்குறீர்கள்..

கார்க்கி அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இருக்காது..நீ சும்மா இரு..

நாசமா போச்சு..(கார்க்கி) அமைதியாக வெளியேறுகிறார்..

அப்புறம் அதிகமாக அரசியல் வசனங்கள் எல்லாம் வரவேண்டும்..அதே சமயம் சென்சார் கட் பண்ணிட கூடாது..

கவலையை விடுங்க பாஸ்..நம்ம தயாரிப்பாளரே கலைஞர் மகன் தான்..ஒன்னும் கவலைப்படாதீங்க..

அப்புறம் படத்துல ஜோடி யாருன்னு சொல்லவே இல்லை..மூன்று கதாபாத்திரம் என்பதால் மூன்றி அறிமுக சாங் வைக்கணும்..ஒவ்வொரு சாங்கிலும் நம்ம கட்சிக்கொடி பின்னாலே தெரியணும்..பாட்டை நம்ம கபிலனையே எழுத சொல்லிடுவோம்..ஒரே ஒரு மெலடி..ஒரு தத்துவப்பாடல்..ஒரு தீம் சாங்..மியூசிக் வந்து விஜய் ஆண்டனியே போதும்..என்ன நான் சொல்றது சரிதானே சார்..

உன்னை திருத்தவே முடியாதுடா சாமி...அவசரமா என் மனைவி போன் பண்றா என்னவென்று தெரியவில்லை..இதோ ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன் என்று தலைதெறிக்க ஓடுகிறார் கேபிள் சங்கர்...

கேபிள் ஓடுவதை பார்த்த கார்க்கி உள்ளே வந்து என்ன தலைவா என்ன ஆச்சு..

ஓபனிங் சாங் பற்றி பேசினோம்...

இதோ டீ குடிச்சுட்டு வரேன் தலைவா..

ஏய் கார்க்கி..கார்க்கி நில்லுப்பா..

டிஸ்கி:-1 இந்த பதிவுக்கு நீங்கள் ஆதரவினை பார்த்து என் அடுத்த பதிவில் அஜித்தும்,கார்த்திகைபாண்டியனும்,கேபிளும்.. என்ற தலைப்பில் எழுதலாம் என்றிருக்கிறேன்..

டிஸ்கி:-2 இந்த மாதிரியான மொக்கை எல்லாம் எனக்கு முதல் முயற்சியே..தவறு எதுவும் இருந்தால் வோட் போட்டும்,கருத்துரையிட்டும் மன்னித்தருளவும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS