Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

பல் விளக்கிட்டியா தோழி.....


கடற்கரை மணலில் கடலை போட்டுக்கொண்டிருந்த போது சொர்க்கம்னா என்னடா என்றாள் தோழி..உன் மடியில் தலை வைத்து தூங்குவது மாதிரி என்றேன்..அப்படின்னா நரகம்னா எப்படிடா இருக்கும் என்றாள்..சிறிது நேர தயக்கத்திற்குப்பின் சொன்னேன்..அந்த சம்பவம் உண்மையில் நடந்தால் அது தான் நரகம் என்றேன் என்றேன்..கோபத்துடன் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்...

போனில் சிணுங்கியவாறே என்னைய உனக்கு எவ்வளவுடா பிடிக்கும் என்றாள்.. ஐம்பது ரூபாய்க்கு பிடிக்கும் என்றேன்..புரியாதவளாய் விளக்கம் கேட்டாள்..ஐம்பது ரூபாய்க்கு டாப்-அப் போட்டு நீயே கால் பண்ணி பேசுறியே அதான் என்றேன்..

தினமும் கவிதையா எழுதுறியே இதெல்லாம் நீயா எழுதுறியா இல்லை எதையும் பார்த்து காப்பி அடிக்கிறியா என்றாள்..காப்பி தான் அடிக்கிறேன் என்றேன்..பலத்த சிரிப்புடன் எதை பார்த்துடா காப்பி அடிச்ச என்றாள்..உன்னைப்பார்த்துத்தான் தினமும் காப்பி அடிக்கிறேன் என்றேன்..

என்ன காலர்டீயூன் வைக்கலாம் என தோழியிடம் கேட்டேன்..உனக்குத்தான் சூர்யா பிடிக்குமே சிங்கம் படத்திலிருந்து வை என்றாள்..சிறிது நேரம் கழித்து கேட்கிறாள்..ஜோதிகாவை எவ்வளவுடா பிடிக்கும் என்று...என்ன சொல்ல என்று தெரியாமல் இருக்கிறேன்..

உதட்டோடு உதடாக தேன் பருக வந்த தோழியை தடுத்து நிறுத்தினேன்..வெட்கப்பட்டவளாய் தலைகுனிந்தபடி என்னடா என்றாள். காலையில் பல் விளக்கிட்டியா என்றேன்..மீண்டும் அதே கோபத்துடன்...

டிஸ்கி:-
1.எப்படி சிவகாசியில் கடற்கரை இல்லையோ அதே மாதிரி எனக்கு தோழியும் இல்லைங்க..எல்லாமே புனைவுதான்..
2.இந்த பதிவை பார்த்து கார்க்கி அண்ணன் மன்னிப்பாராக...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(23.11.2009)


நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஏழு மணிக்கு எங்கள் "வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினை" கூட்டினோம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் மட்டும் "மச்சி வீட்டில கொஞ்சம் வேலை இருக்குடா" என்று கிளம்பினான்..எங்க சங்கத்தில் அவன் ஒருவன் மட்டும் விஜய் ரசிகன்..சரி போயிட்டு வாடா என்று சொன்ன பிறகு தான் ஞாபகத்துக்கு வந்தது "வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸ்"..நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விஜயின் ரசிகனாக இருந்த காரணத்தினாலும்,வேறு பொழுதுபோகவில்லை என்ற காரணத்தினாலும் எங்க ஊர் பஞ்சாயத்து தொலைக்காட்சியில் அனைவரும் அந்த அரிய நிகழ்ச்சியினை பார்த்தோம்..அங்கே போனவுடன் எனக்கே அதிசயமாக இருந்தது..எங்க ஊரிலுள்ள சின்ன பசங்க எல்லாம் (நல்லா கவனிக்கவும் சின்னப்பசங்க) அங்க ஒரே ஆர்ப்பாட்டம்..."புலி உறுமுது புலி உறுமுது" என்ற பாடல் வந்தவுடனே விஜய் காரில் வந்து இறங்குவார்..அதை பார்த்தவுடன் புதியகீதை என்ற மெஹா கிட்டான படமே எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

அனுஷ்கா பார்க்க அழகாக இருக்கிறார்..அனுஷ்காவுக்காக படத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன்..யாராச்சும் வர்ரீங்களா..

******************************

நான் கிரிக்கெட் ஆடிய வராலாற்றிலே நேற்றுதான் என் அதிகபட்ச ஸ்கோரினை பதிவு செய்தேன்..வழக்கமாக 10 ரன்களுக்கு மேல் தாண்டமாட்டேன்..காலையில் நடந்த ஆட்டத்தினில் 20 அடித்த காரணத்தினாலும்,தொடக்க ஆட்டக்காரனாக இறங்குபவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் மாலையில் நடைபெற்ற போட்டியில் எங்கள் அணி கேப்டன் என்னை தொடக்க ஆட்டக்காரனாக என்னை களமிறக்கினான்..முதல் ரன்னை எடுப்பதற்குள் மூன்று ஓவர் முடிந்துவிட்டது...இருப்பினும் மனதை தைரியப்படுத்தி 12 ஓவர் முடிவுக்குள் 42 ரன் அடித்தேன்..எங்கள் அணியின் எண்ணிக்கை 110.தொடரின் முதல் சுற்றில் வெற்றி..இனிவரும் போட்டிகளிலும் வென்று கோப்பையை கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்..

ஆட்டநாயகன் விருது கொடுத்தவுடன் எல்லோரும் என்னை பாராட்ட,,வழக்கமாக களமிறங்குபவன் என்னை ஒரு வெறியோடு ஏற இறங்கிப்பார்த்தான்...

******************************

நேற்று இரவு விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு வட இந்திய பெண்கள் அழகானவர்களா..? தென்னிந்திய பெண்கள் அழகானவர்களா..? என்ற தலைப்பில் தொடங்கிய நிகழ்ச்சி இறுதியில் வட இந்திய ஆண்கள் அழகானவர்களா..இல்லை தென்னிந்திய ஆண்கள் அழகானவர்களா என்ற விவாதத்திற்கு போனது..அவங்க நம்மளை திட்ட நம்ம பொண்ணுங்க அந்த பசங்களை திட்ட கண்களில் ரத்தக்கண்ணீர்தான் வந்தது...

******************************

என்னதான் பசங்க கட்டுக்கோப்பா மனசை வச்சு இருந்தாலுமே ஒரே ஒரு கால் பண்ணி நம்ம மனசை கவுத்திவிடுறாங்க...

1.சாப்பிடியாடா செல்லம்..
2.உன்னோட எஸ்.எம்.எஸ்.ரொம்ப நல்லா இருந்ததுடா..எனக்காக தானே எழுதின..
3.உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தெரியுமா..
4.இன்னிக்கு நீ போட்டிருக்கிற சட்டை ரொம்ப சூப்பர்..நான் நாளைக்கு அதே கலர்தான் சுரிதார் போடப்போறேன்..
5.கேன்-டீன்ல மீட் பண்ணலாம்டா செல்லம்..
6.தியேட்டருக்கு போலாமாடா.
7.படிக்கும் போது கூட புத்தகத்துல உன் முகம் தெரியுதுடா..
8.என்னோட பர்ஸ்ல எப்போதுமே உன் போட்டா இருக்கு தெரியுமா..

இன்னும் இதுபோல நிறைய இருக்கு..

******************************

நகைச்சுவை:-

காதல் என்பது..

"வேட்டைக்காரன்" பட டிரெயிலர் மாதிரி..

பார்க்கதவன் பார்க்க துடிப்பான்..

பார்த்தவன் சாகத்துடிப்பான்...

******************************

தத்துவம்:-
காதல் வர காரணம் கண்கள்..
கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள்..
பெண்களின் இதயம் ஒரு செங்கல்..
அதை உடைக்க முடியாமல் தவிப்பது ஆண்கள்..

******************************

கவிதை:-
அத்தை பையன் என
தோழிகளிடம்
என்னை அறிமுகப்படுத்தையில்
வந்த வெட்கத்தை
மறைக்க முயன்றாயே..
அந்த நொடி
ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

******************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சின்ன சின்னதாய் "16"


பசிக்கும்போது
உண்ணா விட்டால்...
நீ உண்ணும்போது
உனக்கு பசிக்காது..!!

******************
சான்றோர் புத்திமதி கேளான்..
சறுக்கியதும் தானும் புத்திமதி
சொல்ல தொடங்குவான்..??
******************
போதைக்கு...
ஒரு கோப்பை மது போதும்...
தெளிவதற்கோ..?
******************
நீந்த கற்றுகொண்டால்....
இரும்பும் கூட நீரில்
மிதக்கும்..!!
******************
பலமணிநேர சிந்தனவாதியின் வெற்றி..
நொடி பொழுதில் தீர்மானிக்க பட்டுவிடும்..!!
******************
நிலைப்பதாய்
இருந்தால் நேசி...
கிடைக்கும் என்றால்
முயற்சி செய்..!!
******************
'குப்பையை' பேசி..
கோபுரத்தில் சுகிக்கிறது ஒரு கூட்டம்..?!
கோபுரத்தை கனவு கண்டு..
குப்பையிலேயே மடிகிறது ஒரு கூட்டம்..!
******************
எது சலிக்காமல்
கிடைக்கிறதோ...
அது விரைவில்
சலித்து விடும்...!!?
******************
எத்தனை எழுதினாலும் தீரவே மாட்டேன் என்கிறது...?
என் பேனா மையும்....
உன்னை பற்றிய கவிதைகளும்...!!
******************
கொண்டு வருகிறேன்...தினமும்..,
கொடுக்கத்தான் முடிந்ததில்லை ஒருமுறை கூட...
ரோஜாவும்...
என் கடிதமும்..!!
******************
கரண்ட் கம்பியில் சிட்டுகுருவிகளுக்குள் சண்டை
மேல் கூரை இல்லாத குளியலறையில்
அவள் குளிக்கிறாள்..!!
******************
நீ பயணிக்கும் அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்-என் காதலை..
உன்னை தவிர...!!!
******************
உன்னிடம் பேச சேர்த்துவைப்பேன் வார்த்தைகளை...
'அனுமன் வால்'போல
உன்னை பார்த்தும்...
கரைந்து போகும் அத்தனையும் 'கற்பூரம்' போல...!!
******************
உன்னை மட்டுமே அன்பு செய்யும் என்னை பார்த்தும்
உனக்கு கோபம் வருவதுபோல்..
என்னை தவிர உன்னை யார் அன்பு செய்தாலும் ஏனோ
எனக்கு கோபம் வருகிறது..!!
******************
உன்னால் தான் 'விடியல்'
எத்தனை அழகானது என்று தெரிந்துகொள்ள முடிந்தது..?!
உன்னால் தான் 'அஸ்தமனம்'
எத்தனை கொடுமையானது என்றும் தெரிந்து கொண்டேன்..!!
******************
நம் குழந்தைக்கு சோறூட்ட
நிலவை தேடிகொண்டிருக்க வேண்டியதில்லை...
நீதான் இருக்கிறாய் அல்லவா பக்கத்திலேயே..!!
******************
டிஸ்கி:- இவை அனைத்தும் எனது மொபைலுக்கு வந்த குறுந்தகவல்களே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீபாவளி சிறப்புப் பதிவு 2009...!!!


அருமை அண்ணன் ஸ்ரீ அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் என் கூட சேர்ந்து குறும்படம் இருக்கவிருப்பதால்...

பதிவிற்கான விதிமுறைகள் :


1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்..

**************************

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னை பற்றி இந்த உலகமே அறிந்து இருந்தாலும் நீங்கள் கேட்டு இருப்பதால் சொல்கிறேன்..சென்னையில் பிறந்து இன்று சிவகாசியில் வாழ்பவன்..வீட்டிற்கு ஒரே பிள்ளை..அதனால் செல்லம் அதிகம்..தீவிர கிரிக்கெட் ரசிகன்..தற்சமயம் கணிணியில் டிசைனராக இருக்கிறேன்..

**************************

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?


மறக்க முடியாத சம்பவம் என்று எதுவும் இல்லை..நானும் என் நண்பர்களும் சேர்ந்து இரவு 2 மணி வரை வெடி போடுவோம்.நன்றாக என்ஜாய் பண்ணுவோம்..சமீபவத்தில் மூன்று நாட்களுக்கு முன்னே டிக்கெட் ரிசர்வ் செய்து ஆதவன் என்ற சூப்பர்ஹிட் படத்தை பார்த்தது...

**************************

3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

பொதுவாக விஷேஷ நாட்களில் வெளியூருக்கு செல்வதில்லை..சொந்த ஊரிலே தான் ஊர் சுத்தும் சுகமே தனிதான்..மாலை நேரங்களில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என ஒளிபரப்பாகும் குப்பை படங்களை பார்ப்பது..

**************************

4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தீபாவளி என்ற ஒரு நாள் சந்தோஷத்திற்காக பலபேர் இங்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வருடம் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்..20 வயது இளைஞர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை. ஒரு வருடம் கூட பட்டாசு ஆலைகள் வெடிக்காமல் இருந்ததில்லை..ஆனால் இம்முறை பல உயிர்கள் என் கண் முன்னே இறந்து இருப்பதை பார்த்ததால் எழுதுகிறேன்..

**************************

5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

இந்த முறை நான் ஆடை எடுக்கவில்லை..அப்படியே எடுத்து இருந்தாலும் தைத்துத்தான் இருப்பேன்..

**************************

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எல்லாமே கடையிலேதான்..இனிப்பும் காரமும் கலந்து வீட்டிற்கு வாங்கிச்சென்றேன்..மற்றபடி நகரத்தில் உள்ள மாதிரி திண்பண்டங்கள் கொடுக்கல்,வாங்கல் நடைமுறைகள் இன்னும் எங்கள் ஊருக்கு வரவில்லை..

**************************

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

முதல் நாளே அனைவருக்கும் இ-மெயில் அனுப்பினேன்..என்னுடைய மொபைலில் பேலண்ஸ் இல்லாததால் யாருக்கும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூறவில்லை..

**************************

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

பகல் நேரங்களில் ஊர் சுத்துவேன்..இரவு நேரங்களில் வீடு வந்துவிடுவேன்..

**************************

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இதுவரை செய்ததில்லை..இனிமேல் செய்ய ஆசை உண்டு..

**************************

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

லோகு..(அச்சம் தவிர்)


.ஞானசேகரன்..(அம்மா அப்பா)


எவனோ ஒருவன்..(அதி பிரதாபன்)


பீர் முகமது..(ஜெய்ஹிந்துபுரம்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(27-10-2009)


கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சீனா ஐயா அவர்கள் அவர் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்.. அதற்கு போன ஞாயிற்றுக்கிழமைதான் விடை கிடைத்தது..நானும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பி மதியம் அவரது வீட்டினை அடைந்தேன்..அவர் இருக்கும் அபார்மென்டை பார்க்கும் போதே நானும் அங்கேயே தங்கிவிடலாமோ என நினைப்பு வந்தது (காரணம் கேட்பவர்கள் தனியாக மின்னஞ்சல் பண்ணவும்). வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்தவுடன் சீனா ஐயாவின் மனைவி அவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடுத்தார்கள்.மிகவும் அருமையாக இருந்தது..பின் சிறிது நேரம் கதைத்து விட்டு அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்தேன்..மிகவும் அழகாக இருந்தது..பின் மதிய உணவு சாப்பிட்டோம்.. சாதம்,சாம்பார்,கேரட் பொரியல்,என அருமையான விருந்து.இந்த விருந்தை கார்த்தி அண்ணா மிஸ் பண்ணிவிட்டார்..பின் மின்சாரம் தடை செய்யப்படவே இருவரும் பேராண்மை படத்துக்கு கிளம்பினோம்..படமும் அருமை,தியேட்டரும் அருமை.ஏனென்றால் சிவாகாசியில் இருக்கும் தியேட்டரை விட பல மடங்கு நன்றாக இருந்தது..பின் வீட்டிற்கு வந்தவுடன் கார்த்தி அண்ணா வந்தார்..அதன் பின் ஸ்ரீதர் அண்ணா வந்தார்..மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு கிளம்பினோம்..பதிவர் சந்திப்பினில் நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...

*************************

அது என்னமோ ஏதோ தெரியவில்லை..எனக்கு எவனோ ஒருவன் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போய்கிறது..போன முறை சிவகாசி வந்தவுடன் அழைத்தார்கள்..என்னால் செல்ல இயலவில்லை..இதோ இந்த சனிக்கிழமையும் அப்படியே நடந்தது.நான் அழைக்கும் போது அவர் கொஞ்சம் பிஸி.அவர் அழைக்கும் போது நான் கொஞ்சம் பிஸி..நாம் இருவரும் அடுத்த முறையாவது சந்தித்துவிடுவோமா அண்ணா...

*************************

அண்மையில் பார்த்த படங்களில் என்னை வெகுவாக ஈர்த்தது பேராண்மை...படத்தில் பல இடங்களில் பொண்வண்ணன் பேசும் போது கட் செய்யப்படுகின்றன.இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்களையே சென்சார் அனுமதித்து தொலைக்காட்சிகளில் வெளியிடும் போது ஒரு நல்ல படத்தின் வசனத்தை கத்தரிப்பது நன்றாக இல்லை.. மற்றபடி படத்தில் நடித்து உள்ள அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம் போல் இருக்கிறது..

*************************

கவிதை:-

உயிர்

உயிருடன் இருக்கும் பொழுது ,
உணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,
உயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,
உணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;
உயிரில்லாத உடலை பார்த்து . . .

*************************

தத்துவம்:-

இன்றைய வெற்றி நாளையும் வெற்றி…!!
இன்றைய தோல்வி நாளைய அனுபவம்… !!!!

*************************

டிஸ்கி:-

இந்த பதிவு படித்து முடித்தவுடன் பின்னூட்டமோ வோட்டோ மட்டும் தான் போடணும் என்று அவசியம் இல்லை...எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க..

100 பாலோயர்ஸ் அடையச்செய்த அனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...



வலையுலக கதாநாயகன்...

பதிவுலக மன்மதன் அண்ணன் ராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இவர் மென்மேலும் வளர நமீதா நற்பணி மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,,

சூரத் கிளை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கரையும் உருவங்கள்..


இரவு மணி பதினொன்றை தாண்டியது..தெருவினில் ஆள் நடமாட்டம் அதிகமில்லை..சாலையோர டீக்கடையில் எப்.எம்.மில் "நினைத்தாலே இனிக்கும்" ஓடிக்கொண்டிருக்கிறது.தன்னுடைய பாத்திரங்களை தெருவில் போட்டு விளக்கிக்கொண்டிருந்தான் டீக்கடைக்காரன்..அதன் கழிவுநீர் ரோட்டினை அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தது..தன் நிழலை பார்த்தவாறே நடந்து வந்தான் கண்ணன்..தெருவின் கடைசியில் உள்ள மின்விளக்கு அவனுக்கு வழிகாட்டியது..கழிவுநீரை தாண்ட முயற்சி செய்கையில் இரண்டு நாளாக இப்போ பிய்ந்துவிடும் பிறகு பிய்ந்துவிடும் என்ற நிலையில் இருந்த செருப்பு அவன் வீட்டருகில் யாரும் இல்லாத வேளையில் அறுந்து போனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..

செருப்பினை கையில் பிடித்தவாறே வீட்டினை நோக்கி நடக்கலானான்..வீட்டின் முன் நின்றான்..கதவினை தட்ட மனம் வரவில்லை..கண்களிலே கண்ணீர்தான் வந்தது.நிலையினை பிடித்தவாறே நின்றான்..திடீரென கதவினை திறந்தாள் அக்கா வாசுகி..

எவ்வளவு நேரமா வெளியில நிக்கிறடா..??

கதவினை தட்டவேண்டியதுதானா.??

கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டினுள் நுழைந்தான் கண்ணன்..

இந்த சத்தங்களுக்கு இடையே அப்பா கண்முழித்தார்..கண்ணா வந்துட்டியா..காலாகாலத்துலே சீக்கிரமா வரலாம்ல..பொம்பிளைப்புள்ளை எவ்வளவு நேரமா முழிச்சுக்கிட்டு இருப்பா..??

தட்டினில் சாதத்தினை வைத்து அவனை சாப்பிடச்சொன்னாள் வாசுகி..

எனக்கு சாப்பாடு வேண்டாம்..

ஏன்டா..துரை சாப்பிட்டு வந்திங்களோ..???

இல்லை..

பின்ன என்ன..??

பசிக்கலை..

ஆமா காலையில வேலை விஷயமா போனியே என்ன ஆச்சு..

கிடைக்கலை...

சரி விடுடா..நீ சாப்பிடு உனக்கு நல்லா வேலையா சீக்கிரமா கிடைக்கும்..

வருகிற வழியில் சுரேஷ் மாமாவை பார்த்தேன்..

என்ன சொன்னார்..அவர் மகனுக்கு வேலை கிடைச்சிருச்சாமே..

நாளைக்கு திருப்பூருக்கு போகச்சொன்னார்..அங்கே அவருக்கு தெரிந்த நண்பரிடம் வேலைக்கு சேர்த்துவிடுகிறேன் என்றார்..

சரி போயிட்டு வாடா..போக காசு வைத்திருக்கிறாயா என்று அவன் சட்டைப்பைக்குள் கையை நுழைத்தாள்..கிழிந்து போன ஐந்து ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது..இரு வருகிறேன் என்று தன் வளையல் டப்பாவுக்குள் எட்டு மடிப்பாக வைத்திருந்த ஐம்பது ரூபாய் தாளை நீட்டினாள்..

என்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..

கண்களில் நீர் மல்க அவள் மடியினில் சாய்ந்தான் கண்ணன்..ஆறுதல் கூறியவாறே அழுது கொண்டிருந்தாள் அவள் அக்கா வாசுகி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2040-ல் இந்தியாவின் தலைப்புசெய்திகள்..


1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.

2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..

3.நான் அடுத்த உலக்கோப்பையிலும் விளையாட விருப்பமாக உள்ளேன் - சச்சின் பேட்டி...

4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....

5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா.....

6.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.5 உயர்வு..இனி 999/லிட்டர்......

7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......

8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........

9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........

10.விஜய் தனது அடுத்த படத்தில் காலேஜ் மாணவனாக வலம் வருகிறார்..........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பால் சைவமா..?? அசைவமா..??




இந்தக்கேள்வி இச்சிறுவனின் மனதில் சிறுவயதில் இருந்தே இருக்கிறது..

அசைவம் கூடாதென்ற காந்தியே, ஆட்டுப்பால் குடித்தாராம்.. எனவே பால் சைவம் என்பது காந்தியின் கருத்து..

தன் கோவிலுக்கு மாலை அணிந்துவரும் பக்தர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என உத்தரவிட்ட ஐயப்பன் புலிப்பால் குடித்தாராம்..அதனால் அவரது பார்வையில் பால் சைவமே..



முட்டையை அசைவம் என்று கூறுகிறார்கள்..எப்படி கோழியின் வயிற்றிலிருந்து முட்டை வருகிறதோ..அதே மாதிரிதானே மாட்டின் மடியிலிருந்து பால் வருகிறது..எப்படி பால் மட்டும் சைவமாக இருக்க முடியும் என்பதே இச்சிறுவனின் கேள்வி..

*************

என்னுடைய வாழ்வினில் நடந்த சம்பவம்:-

நான் சிறுவனாக இருந்த போது எனது சித்தப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார்.அந்த வருடம் அது அவருக்கு முதல் வருடம்.எனவே கன்னிச்சாமி என்றெல்லாம் அழைத்தார்கள்..அவரை கோவிலுக்கு வழியனுப்ப நானும் என்னோட அம்மாவும் போயிருந்தோம்.வழக்கமாக நாங்கள் போனால் எங்கள் சித்தி கறிகுழம்பு வைப்பது வழக்கம்..ஆனால் அன்று வைக்கவில்லை.ஏன் என்று கேட்டதற்கு சித்தப்பா அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று அம்மா சொன்னாங்க..அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பால் குடித்தார்..

மறுபடியும் சந்தேகம்..பாலும் மாட்டிலிருந்து தானே வருகிறது..எப்படி சைவமாக முடியும்..

ஒரு உயிரை கொன்று அதன் இறைச்சியை புசிப்பது தான் அசைவம் என்றால் கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை மட்டும் நாம் குடிக்கலாமா..??

கன்றுக்குட்டியும் ஓர் உயிர்தானே..அதுக்கும் பசி என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்...

*************

நாம் சைவம் என்று சாப்பிடிகின்ற நெல்,கத்திரிக்காய்,தக்காளி என எல்லா தாவரங்களுமே நிலத்தில் விழுந்தால் மறுபடியும் முளைக்கக்கூடியவைதான்..அப்படியானால் அதுக்கும் உயிர் இருக்கதான் செய்கிறது..உயிரைக்கொன்று தான் நாம் சாப்பிடுகிறோம்..

தாவரங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக பூக்கின்ற பூக்களை கூட மனிதர்கள் சைவம் என்று கூறியே சாப்பிடுகிறோம்..

*************

வீட்டில் என் அம்மாவிடம் ஒருமுறை காலையில் காபியை குடித்தவாறே கேட்டேன்.பால் சைவமா..அசைவமா என்று அவங்க சொன்ன பதில்..சைவமோ அசைவமோ "குடிச்சா நல்லா இருக்குல" என்கிறார்கள்..சரி நண்பர்களிடம் கேட்போம் என்று விவாதித்தால் "இவ்வளவு நாளா நல்லாதானாட இருந்த..தீடீரென்று என்ன ஆச்சு உனக்கு" அப்படி என்கிறார்கள்..

அதான் பதிவர்களிடம் விவாதிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்...

தயவு செய்து விளக்கத்தினை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

விவாதத்துடன்:-

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனக்கு வந்த குறுஞ்செய்திகள்..



மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!

****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மதுரை சம்பவம்-சம்பவங்கள் பல..



தவறான தொழில் செய்தாலும் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடிக்கும் ரவுடியின் கதை..ரவுடியாக ஆலமரத்தான்(ராதாரவி). ராதாவின் மகனாக குட்டி(ஹரிக்குமார்).குட்டியின் அக்கா மகளாக கார்த்திகா.ராதாரவியின் பேரில் ஓட்டு வாங்கி எம்.பி.ஆகிறார் கட் அவுட் ஆளவந்தான் ( காதல் தண்டபாணி)..ஆனால் கள்ளச்சாரயம் காய்ச்ச்சுவதால் ராதாரவியின் எதிரி ஆகிறார்..இவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சினை முதல் பாதி..

இரண்டாம் பாதியில் என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக கரோலின் தாமஸ் (அனுயா). போலிஷ் வேஷத்தில் இருப்பதை விட மற்ற காஷ்டியூம்களில் கலக்குகிறார்..அருமையான நடிப்பு..இரண்டாம் பாதி முழுவதும் அவர் ரவுடியுடன் மோதுவது என படம் நகர்கிறது.

படத்தில் ஹீரோ பேசும் முதல் வார்த்தையே..

வடக்கிலே திண்டுக்கல்லு..
தெற்கிலே திருப்பரங்குன்றம்...
மேற்கிலே மேலூர்..
கிழக்கிலே கூடலூர்..என்கிற டையலாக்..

டையலாக் பேசுவதில் விஜயை மிஞ்சுகிறார்.மற்றபடி சண்டைக்காட்சிகளில் இவரிடம் அடி வாங்குபவர்கள் எல்லாம் எப்படி 20 அடி தூரம் தள்ளி விழுகிறார்கள் என்பது தெரியவில்லை..சண்டைக்காட்சிகளில் "அனல் அரசு" அனலை கக்குகிறார்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஹரிக்குமார் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்..வசனங்கள் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக பேசிகிறார்..படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார்..மற்றாபடி ஒன்னுமில்லைங்க..



கார்த்திகா படத்தில் மூன்று காட்சிகளில் வருகிறார்..இரண்டு பாடல்களுக்கு ஆடுகிறார்..இரண்டு முறை அழுகிறார்..மற்றபடி எதுவும் இல்லைங்க..



அனுயா அழகாக இருக்கிறார்.நன்றாக நடித்திருக்கிறார்..ஹீரோவுடன் காதல் கொள்வதாக ஏமாற்றி அவர் அப்பாவையும் மாமாவையும் கொலை செய்கிறார்.இறுதியில் இறந்தும்விடுகிறார்..காதலுடன் ரொமான்ஸ் காட்சிகள் அருமை..

ஆனந்த் பாபு கூலிப்படை ரவுடியாக வருகிறார்..

இசை ஜான் பீட்டர் சொல்லிக்கொள்ளும் படி இல்லை..

படத்தின் பாடல்களையும் எழுதி இயக்கி இருப்பவர் யுரேகா..

படத்தில் பேசப்பட்ட வித்தியாசமான வசனங்கள்:-

1.ஆடு புளுக்கை போடுற மாதிரி அதிகமா பேசாத..
2.குட்டின்னா..பன்னிக்குட்டி இல்லைடி..சிங்கக்குட்டி..
3.கீழ விழுந்தா விழுந்த இடத்துல தான் எந்திக்க முடியும்..கொஞ்சம் தள்ளிப்போயா எந்திக்க முடியும்..
4.நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் லைட்டே எரியும்..நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் சூரியனே எரியும்..

இது போல் படத்தில் வசனங்களுக்கும் பஞ்ச் டையாலாக்கும் குறைவில்லை..

சம்பவங்கள்:

1.படம் முழுவதும் ஒரே சாவுக்காட்சிகள்..தியேட்டரே சுடுகாடு வாசம்..
2.நான் பார்த்தவரையில் வித்தியாசமான கிளைமேக்ஸ்..இதுவரை வந்த தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்று சண்டையாக இருக்கும்..இல்லையென்றால் செண்டிமெண்டாக இருக்கும்..இதில் கொஞ்சம் வித்தியாசம்..பாருங்கள்..
3.மதுரை மெயின் ரோட்டில் ஒரு முத்தம் (ரோட்டில ஒருத்தர் கூட இல்லைங்க..)

மதுரைச்சம்பவம்:- சம்பவங்கள் நிறைய இருக்கு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொடர்பதிவு..


என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த "காதல் மன்னன்" லோகு அவர்களுக்கு என் நன்றிகள்..

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

*********
இனி...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /ஓபன் ஹார்ட்../அன்பு.(அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். இல்லைங்க..!!)

2. B – Best friend? : என்னோடு பழகிய அனைவரும் எனக்கும் பெஸ்ட்தான்..குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் என் அம்மா தான்..

3. C – Cake or Pie? : கேக் ரொம்ப பிடிக்கும்..

4. D – Drink of choice? தண்ணியடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லைங்க..பால் மட்டும் தான்.கொஞ்சம் டிக்காஷனோட..

5. E – Essential item you use every day? கண்கள்..(அவளை பார்த்த என் கண்களை என்றுமே பார்த்துக்கொண்டிருக்க ஆசைதான்..)

6. F – Favorite color? கறுப்பு,நீலம்,

7. G – Gummy Bears Or Worms : இதுல எதுவுமே எங்க ஊரில் இல்லைங்க..

8. H – Hometown? - பட்டாசு நகரம்,குட்டி ஜப்பான்,சிவகாசி தான்..

9. I – Indulgence? - அப்படின்னா..

10. J – January or February? - பிப்ரவரி (காதலர் தினம் இருப்பதால்)

11. K – Kids & their names? என்னோட சாய்ஸ்:- மாயா..

12. L – Life is incomplete without? Love (காதலிப்பவனுக்கே உரிய சுகம் )

13. M – Marriage date? - எங்க அம்மா தான் முடிவு எடுக்கணும்..

14. N – Number of siblings? 0...

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? நாய்..

17. Q – Quote for today? கடமைச்செய்..பலனை எதிர்பாரதே..

18. R – Reason to smile? மனதில் வேதனைகள் இருப்பினும் வெளிக்காட்டாமல் இருக்க...

19. S – Season? வசந்த காலம்

20. T – Tag 4 People?-

கார்த்திகைப்பாண்டியன்

ராஜூ (டக்லஸ்)

இயற்கை

சிவசைலம்

21. U – Unknown fact about me? ரொம்ப நல்ல பையனாக இருந்தேன்..

22. V – Vegetable you don't like? வெண்டைக்காய்..

23. W – Worst habit? கோபப்படுதல்..(குறைக்க நினைக்கிறேன்..முடியலை)

24. X – X-rays you've had? இதுவரைக்கும் இல்லைங்க..

25. Y – Your favorite food? அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரிக்கும் அனைத்துமே பிடிக்கும்..

26. Z – Zodiac sign? தனுசு..

***************************


1. அன்புக்குரியவர்கள் : நண்பர்கள்..

2. ஆசைக்குரியவர் : இனிமேல் வர இருக்கும் காதலி...அல்லது மனைவி....


3. இலவசமாய் கிடைப்பது : அம்மாவின் பாசம்..


4. ஈதலில் சிறந்தது : ஈதலே சிறந்தது தானே.

5. உலகத்தில் பயப்படுவது : தியேட்டரில் விஜய் படம் பார்ப்பது..

6. ஊமை கண்ட கனவு : தெரியலையே..

7. எப்போதும் உடனிருப்பது : அம்மா ஆசையுடன் வாங்கித்தந்த பேனா..

8. ஏன் இந்த பதிவு : நட்புக்காக

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நோயற்ற வாழ்வு தான். ..

10.ஒரு ரகசியம் : அதான் ரகசியமாச்சே..!!


11.ஓசையில் பிடித்தது : குழந்தையின் சிரிப்பு..


12.ஔவை மொழி ஒன்று : தந்தை தாய் பேண்...

13.()ஃறிணையில் பிடித்தது: பூனைக்குட்டி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேட்டைக்காரன்-முன்நவீனத்துவமான விமர்சனம்..


ஏ.வி.எம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் மிகவும் பிரம்மாண்டமாய் வந்திருக்கும் படம் வேட்டைக்காரன்...

பொதுவாகவே விஜய் படங்களில் முதலில் ஒரு ஓபனிங் சாங் வரும்..ஆனால் இப்படத்தின் முதல் காட்சியே நம் நெஞ்சை உருக்குகிறது..விஜய் பத்து வயது சிறுவனாக வருகிறார்..அதற்காக அவர் கடினமாக உழைத்திருப்பார் என எதிர்பார்க்கிறேன்..கண்ணில்லாத அக்கா...காலில்லாத தம்பி..ஆஸ்த்துமா நோயில் தாய்..மரண படுக்கையில் தந்தை..வேலையில்லாமல் விஜய்..என முதல் காட்சியிலே ஒரு குடும்பத்தின் கஷ்டங்களை நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர் பாபு சிவன்..

விஜய் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இன்டர்வியூ போகிறார்..அங்கே இவரது திறமை அவமதிக்கப்படிகிறது உடனே"வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்"..என்ற பாடல் ஒளிபரப்பாகிறது..பாடலிலே விஜய் அந்த கம்பெனியின் எம்.எடியை தீர்த்துக்கட்டுகிறார்..

இப்படி வேலை தேடிக்கொண்டிருக்கும் விஜயின் கனவு என்னவென்றால் தமிழகத்தின் முதல்வர் ஆவதுதான்..இதற்காக இவர் படும் கஷ்டங்கள்..படத்தில் மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளன..



இடையில் அனுஷ்காவுடன் மோதல்..மோதலின் விளைவு காதல்..என தன் இளமைக்கால வாழ்க்கையையும் என்ஜாய் பண்ணுகிறார்..அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதுடன் தன் காதலன் முதலமைச்சராக அவர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை..



இக்கட்டத்தில் தமிழகத்தில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடவே ஆளுங்கட்சி கவிழ்கிறது..இந்நேரத்தில் விஜய் கட்சி உருவாக்குகிறார்..தேர்தலில் நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும் கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான நடிப்பு..அனுஷ்கா கட்சியின் விளம்பரத்தூதுவர்.

இறுதியில் தேர்தலில் வென்றும் விடுகிறார்...தமிழக முதல்வனாக விஜய்..வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டையில்..பார்க்கவே கொடுத்து வைக்கனும் நம் கண்களுக்கு ..

படத்தில் எந்த ஒரு பாமரனும் நினைத்தால் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்ற உண்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். :-((

கிளைமேக்ஸ் காட்சியில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தமிழக மக்களுக்கு ஒரு இருபது நிமிடம் அறிவுரை கூறுகிறார்...

படத்தின் பிற்பாதியில் தமிழகத்தின் வறுமை எப்படி குறைந்தது..விஜயின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கார் இயக்குனர்..

படத்தில் பிண்ணனி இசையும் (விஜய் ஆண்டனி) கிளைமேக்ஸ் வசனங்களும் மிக அருமை..

வேட்டைக்காரன்:- தமிழகத்தின் பஞ்சத்தை வேட்டையாட வந்தவன்..

டிஸ்கி 1 : படத்தில் விஜய் ஆட்சி செய்வதை பார்க்கும்போது நமக்கே இவர் உண்மையிலே ஆட்சிக்கு வந்தால் எப்படிக்கு இருக்கும் தமிழகத்தின் பஞ்சம் தீர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது..

டிஸ்கி 2 : இங்கு கூறியிருக்கும் அனைத்தும் கற்பனையே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பதிவர்களே போட்டிக்கு ரெடியா..

குழந்தை..

சோகங்கள் மறைத்திடும்..
கோபங்கள் போக்கிடும்..
அன்பின் உருவம் - குழந்தை..

*****************************

இது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..

இங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..

"காதல்"

இந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..

கவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..

அதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...

என்ன போட்டிக்கு ரெடியா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்போனில் இ-மெயில் தகவலைப்பெற...

செல்போன் பயன்கள் அனைவரும் அறிந்ததே...

அதில் இன்னும் கூடுதல் வசதியாக நமது செல்போனில் நமக்கு வரும் இ-மெயில் தகவல்களை பெறுவதை பற்றி இப்போது பார்க்கலாம். நாம் ஒவ்வொரு முறையும் கணிணியை ஆன் செய்து நமக்கு இ-மெயில் வந்துள்ளதா என பார்க்கவேண்டாம்.

இந்த தளத்தில் நமது விவரங்களை பதிவு செய்தாலே போதும். நமக்கு இ-மெயில் வந்ததும் , நம்முடைய cellphone-ல் sms வந்து விடும்.முதலில் இந்த இலவச சேவையை பெற இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு முதலில் இந்த தளம் ஓப்பன் ஆகும்.



இதன் மேற்புறம் உள்ள இந்த விண்டோ வில் உள்ள Signup for free என்பதனை கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து Register கிளிக் செய்யுங்கள்.



இந்த தளத்தை மூடிவிடுங்கள். இப்போது உங்களுடைய செல்போனில் ஒரு குறுந்தகவல்( SMS ) வரும். அதில் உங்களுக்கு பாஸ்வேர்ட் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதை குறித்துக்கொள்ளுங்கள்.




இப்போது மீண்டும் அதே தளத்தை திறங்கள்..இதில் உள்ள மொபைல் நம்பர் என்கிற இடத்தில் உங்கள் மொபைல் எண்ணை குறிப்பிடுங்கள். அதன் கீழ் உள்ள Password-ல் உங்களின் செல்போனில் வந்த பாஸ்வேர்டை குறிப்பிட்டு லாகின் ஆகுங்கள். இப்போது உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுத்துவிட்டு Submit செய்யுங்கள். உங்களுடைய தகவல்களை பதிவு செய்தபின் இந்த Conform விண்டோ ஓப்பன் ஆகும்.



விண்டோவை மூடி விடுங்கள். இப்போது உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்யுங்கள்.அதில மேற்புறம் உள்ள Settings கிளிக் செய்யுங்கள்.அதில் ஐந்தாவது காலத்தில் உள்ள Forwarding and POP/IMAP கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





அதில் Forwarding எதிரில் உள்ள Forward a copy of incoming mail to என்கிற ரேடியோ பட்டனை கிளிக் செய்த பின்னர் Forward a copy of incoming mail to
பக்கத்தில் உள்ள பாக்ஸில் 91போட்டு பக்கத்தில் உங்கள் செல்போன் எண்ணை தட்டச்சு செய்து அதன் உடன் @m3m.in சேருங்கள்.

உதாரணமாக:- 91 xxx xxx xxxx @ m3m.in என வரவேண்டும். இதில் x -போட்டுள்ள இடத்தில் உங்கள் செல்போன் எண்ணை குறிப்பிடுங்கள்.




இறுதியாக Save Changes கிளிக் செய்யுங்கள்.அவ்வளவுதான். இனி டெஸ்டிங்காக வேறு ஒரு இ-மெயிலிருந்து உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி பாருங்கள். அல்லதுஉங்கள் நண்பர் யாரையாவது மெயில் அனுப்பச் சொலலுங்கள். இப்போது ஓரே நேரத்தில் உங்கள் செல்போனுக்கும் கணிணிக்கும் மெயில் வருவதை காண்பீர்கள்.

தகவலுடன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலியுங்கள்....


நேசித்தால் காதல் வரும்...
வர்ணித்தால் கவிதை வரும்....
கவிதையை வாசியுங்கள்....
காதலியை நேசியுங்கள்...

கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....

கவிதைபிழையை திருத்தினால்
காதல்....
காதல்பிழையை திருத்தினால்
சாதல்.....

கவிதை காதலின் தாக்கமோ... !!

வருந்துவதை விட திருந்துவது
மேல் என்று எண்ணினேன்...
திருந்த முடியவில்லை
கவிதையினால் மட்டும்...

யோசித்தேன்...

அங்கு காதல் இல்லை
அதனால் கவிதையும் இல்லை..... !!
எப்படி திருந்துவது.. யோசித்தேன்...
"காதல் வயப்படுவதே மேலோ....."
என்று யூகித்தேன்.....

காதல் வசப்பட்டேன்....!!

இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் உயிர் நண்பனுக்காக....


ஓ... தோழனே! தோழியே!!

காலையில் மலருவது
மல்லிகை என்றால்...

உன்னைக் கண்டதும்
மலர்வது முகமா
இல்லை என் மனமா!

புது மலருக்குப் பூச்சூட்டி
புத்தம் புது பூவினிற்கு
புடவை கட்டி...

பனித்துளியை நீராட்டி
பூங்காற்றை அனுப்புவேன்
உனக்கு தூது சொல்ல...

சாதி, மதம், இனம், மொழி
இவற்றை எல்லாம் கடந்து வரும்
காற்றைப் போல நம் தூய நட்பையும்
சுவாசிப்போம்!!

காற்று வீச மறந்தாலும்;
இலைகள் அசைய மறந்தாலும்;
கடல் அலையை மறந்தாலும்;
பறவை பறக்க மறந்தாலும்;
மான் துள்ளி ஓட மறந்தாலும்;
குயில் கூவ மறந்தாலும்;
மயில்தோகை விரிக்க மறந்தாலும்;
நான் ஒரு நாளும் உனை மறவேன்!!!!!!!!!!!

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(27-07-09)


முதலில் சந்தோஷமான விஷயம் ஒன்று..நமது பாசக்காரப் பதிவர் சீனா ஐயாவின் மகள் பிரியா மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்..தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்..அவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்!!

****************************
பதிவுலகில் போன வாரம் விருதுகள் வாரம் என்று சொல்லலாம்..எனக்கு இயற்கை அக்கா மற்றும் வியா,அவர்கள் இன்டிரஸ்டிங் அவார்டு கொடுத்தார்கள்..இந்த வாரம் விஜயின் பரம எதிரியான மன்னிக்கவும் ரசிகனான பிரியமுடன் வசந்த் அவர்கள் ஒரு விருதினை வழங்கியுள்ளார்..அவருக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு விருதினை வாங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
****************************
நேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினது.. அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் என்னை மெய்மறக்க செய்தது...அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடலும்,விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ மகாதேவன் ஆகியோர் பாடிய பாடலும் மிகவும் அருமையாக இருந்தது..
****************************
நிகழ்ச்சியின் இடையே வந்த ஏர்டெல் கம்பெனியின் விளம்பரம் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்தது..ஒரு சிறு குழந்தை காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விடுகிறாள்..தண்ணீருடன் கப்பல் நன்றாக போய் கொண்டிருக்கிறது..தீடீரென மழை பொழிவதால் மழையில் காகிதக்கப்பல் நனையாமல் இருக்க தனது கை வைத்து கப்பலை மறைக்கிறாள்...சிறிது நேரத்தில் தன் இரண்டு கை மட்டுமே இருந்த இடத்தில் இன்னும் சிலர் வந்து கப்பலின் மீது கை வைத்து பாதுகாப்பாக கொண்டு செல்கின்றனர்..இவை அனைத்தும் வெறும் 45 வினாடிகளில்...அருமை..(மிகப்பெரிய நடிகர்களே தயவு செய்து அந்த சிறு குழந்தையிடம் நடிப்பினை கற்றுக்கொள்ளுங்கள்...)
****************************
கவிதை:-

எனது அறையின் தினசரி காலண்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்...
பார்க்கவில்லையெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்...
****************************
தத்துவம்:-

லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..
****************************
பொன்மொழி:-

எத்தனை துன்பங்கள் வந்தாலும்

எத்தனை தடைகள் வந்தாலும்

எனக்கு கவலையில்லை..

ஏனெனில், நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...

1000 முறை தோற்றவன்..

எடிசன்..
****************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(21-07-09)



நமது பதிவுலகில் மூத்த பதிவரான சீனா ஐயா அவர்கள் தம் இரண்டு பெண் குழந்தைகளையும் மற்றும் பேரன் பேத்திகளையும் பார்க்க 45 நாள் விடுப்பில் இலண்டன் சென்று உள்ளாராம்...அவரது இந்த சுற்றுலா பயணம் உல்லாசமாக அமைய எனது வாழ்த்துக்கள்..வரும்பொழுது எனக்கு ஒரு பரிசு பொருள் வாங்கிவதாக கூறியுள்ளார்..பரிசினைக்காண ஆவலாக உள்ளேன்..
*******************************************
பதிவுலகத்தை விட்டு சென்ற பிரபல பதிவர் சென்றதுக்கு காரணம் பிரச்சனை எதுவும் இல்லையாம்.. தொழிலில் கவனம் செலுத்தவே எழுதுவதை விட்டாராம். தொழில் சரியான பின் காதல் கவிதைகள் மீண்டும் பொழிவார் என தெரிகிறது..(எனக்கு இப்பவே கண்ணை கெட்டது)
*******************************************
பதிவுலக மங்கை இயற்கை அக்கா அவர்கள் எனக்கு ஒரு பிளாக்கர் விருது கொடுத்துள்ளார்கள்..அவர்களுக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு அனைவ்ருக்கும் என் வாழ்த்துக்கள்.
*******************************************
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போகாமல் வீட்டினில் தொலைக்காட்சியினை மேய்ந்து கொண்டிருக்கையில் சன் மீயூசிக் சேனலை பார்த்தேன்..எனக்கு மிகவும் பிடித்த பாடல் குளிர் 100டிகிரி படத்திலிருந்து பூம் பூம் என்று ஆரம்பிக்கிற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.. பென்னிதயால்,அபிஷேக்,மற்றும் சிலர் படித்த பாடல்.பாடலில் ஒரு வரியில் 'மானாட மயிலாட' என்கிறஒரு வரி வரும்..அதை மட்டும் சன் மியூசிக் கணிணி வல்லுநர்கள் மீயூட் செய்துவிட்டனர்..எனக்கு அவர்களது கோழைத்தனத்தை பார்க்கும் போது ஒரே சிரிப்பு..
*******************************************
மேலும் ஒரு அருமையான நிகழ்ச்சினை காண நேர்ந்தது..அது விஜய் டி.வி.யின் 'நீயா நானா' நிகழ்ச்சி. 'காதலில் இருப்பவர்கள் காதலில் இருந்தவர்கள்' இரு தரப்பினர்களுக்கும் இடையான உரையாடல்..மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது..வெகுவிரைவில் இந்த நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கிறேன்..அவ்வ்வ்வ்வ்வ்
*******************************************
கவிதை:-

நீ நடக்கையில் உன்

நிழல் உன்னுடன் வருகிறது..

நான் நடக்கையில் மட்டும் என்னுடன்

இரண்டு நிழல்கள் வருவதாக உணர்கிறேன்...

நாம் இருவரும் நடக்கையில்

மூன்று நிழல்கள் நம்மை தொடர்கின்றன்..

அப்படியானால்

மூன்றாவது நிழல்...

நம் குழந்தையா..!!!

(டிஸ்கி:-இது என்னுடைய முதல் காதல் கவிதை..அதனால் நீங்க நல்லா இருக்கு என்று சொல்லியே ஆக வேண்டும்..இல்லைன்னா இது போல பல மொக்கைக்கவிதைகள் காத்து உள்ளன...)
*******************************************
நகைச்சுவை:-

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..
*******************************************
தத்துவம்:-
காதல் என்பது அழகான ஓவியம் போல..

வரையத்தெரிந்தவன் புத்திசாலி..

வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீங்க எவ்வளவு பெரிய பதிவர்..பரிசோதிக்க ஒரு போட்டி..



படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம்..

வந்தது வந்துட்டிங்க...ஒரு ஆறு வித்தியாசம் கண்டுபிடிச்சி பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.. முதலில் சொல்லுபவர்களுக்கு வால்பையனுடன் ஒரு விருந்து..பங்கு பெறுவீர்..போட்டியில்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS