அபிநயா-LC112-அன்பு-சிங்கம்...


எனக்கு எல்லாம் கஷ்டம் அப்படின்னா என்னவென்று கூட தெரியாதுங்க. என்னோட வாழ்க்கையில (நீ அப்படி என்னடா வாழ்ந்துட்டன்னு அத்திரி அண்ணன் கேட்காதீங்க..) இதுவரை நான் அழுதிருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்..நான் கடைசியா அழுதது கூட 3-ம் வகுப்பு படிக்கும் போது 2-வது ரேங்க் வந்ததுக்காக எங்கம்மா என்னை பூரிக்கட்டையாலே அடிச்சாங்க, அப்பத்தான் அழுதேன், அதுகூட அடிக்கிறதை நிப்பாட்டனுமே அப்படிங்கிறதுக்காக... இப்படி இருந்த நான் நேத்து மதியம் குப்புறபடுத்து விஜய் டி.வி.யில் "விஜய் அவார்ட்ஸ்" என்னும் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த நிகழ்ச்சி என்னவோ பல மாதத்துக்கு முன்னாடியே போடப்பட்டது தான் என்றாலும் இந்த மானிடனால் நேற்றுதான் பார்க்க முடிந்தது..அப்போது 2009ம் வருடத்துக்கான சிறந்த NEW COMER FEMALE என்னும் விருது "நாடோடிகள் அபிநயா" வுக்கு கொடுக்கப்பட்டது..அந்த விருதை வாங்கியவுடன் அவங்க உணர்ச்சி பொங்க பேச ஆரம்பிக்க அவளது இயலாமையை அறிந்து கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.. அவளின் அழுகையை கண்டவுடன் என்னமோ தெரியலைங்க என்னையும் அறியாமலே என் கண்கள் கலங்கின...
HATS OFF ABINAYA

**********************



சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே என்னை ரொம்ப கவர்ந்த படம் களவாணிதாங்க..மூன்று நிதிகளின் பிரச்சினையால் எங்கள் ஊரில் ஒரு பிட்டுபட தியேட்டரில் அந்த படத்தை ஓட்டினார்கள்.. சரி, நல்ல படத்தை எங்க போய் பார்த்த என்ன என்று எண்ணிக்கொண்டு வழக்கம்போல் ஓனரின் உபயத்தோடு படத்துக்கு சென்றேன். படம் நன்றாக இருந்தாலும் படம் பார்த்த இடம் சரியில்லை என்பதால் படம் மனதில் அவ்வளவாக நிலைக்கவில்லை..இருப்பினும் ஹரிஸ் ராகவேந்திராவின் குரல் மட்டும் நெஞ்சில் ஒலித்துக்கொண்டு இருந்தது..சரி இருக்கவே இருக்கு திருட்டு டி.வி.டி என்று வாங்கிவிட்டேன்..இதுவரை இரண்டு நாளில் நான்கு முறை பார்த்தாச்சு.. படம் பார்த்ததன் விளைவா என்னவென்று தெரியலை, தோழி பேசும் போதெல்லாம் "கட்டிக்கிறேன்னு சொல்லு" என்று சொல்லச்சொல்கிறேன்..படத்தின் கதாநாயகி ஓவியாவுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்ங்க..

**********************


நான் எப்போதுமே கிரிக்கெட் விளையாடும் போது ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்..கடந்த சில வாரங்களாக நான் சரியாக விளையாடாத காரணத்தினால், வழக்கமாக நான்காவது ஆளாக களமிறங்கும் நான் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தேன்.. சரி டீம்லயாவது சேர்த்துக்குறாங்களே அப்படிங்கிற நம்பிக்கையில நானும் விளையாட போனேன்.. நேத்து எங்களுக்கும் எங்கள் ஊரின் அருகில் உள்ள விஸ்வநத்தம் என்கிற ஊருக்கும் மேட்ச்.. முதலில் பேட் செய்த அவர்கள் 16 ஓவர்களுக்கு 96 ரன் அடிச்சாங்க.. நாங்களும் திரும்ப மன தைரியத்தோட களமிறங்கி நல்லாத்தான் விளையாடுனோம்.. நானோ சந்தோஷமாக இருந்தேன், நல்லவேளை நாம இன்னிக்கு இறங்க வேண்டி இருக்காது என நினைத்துக்கொண்டிருக்கையில் வரிசையாக எல்லோரும் பேட்டை கொண்டுபோவதும், திரும்ப கொண்டு வருவதுமாய் இருந்தனர்.. இறுதியில் 1 ஒவருக்கு 4 ரன்கள் என்று இருக்கையில் நான் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே மனதை தைரியப்படுத்திக்கொண்டு களமிறங்கினேன்.. நான் சந்தித்த முதல் பந்தே பவுன்சர்.. நான் அம்பயரிடம் நோ-பால் கேட்க, அம்பயர் என்னை பார்த்து நீ இன்னும் வளரணும் தம்பி என்றார்.. கேட்டு அசிங்கப்பட்டுடீயேடா அன்பு என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த பந்தை வீச அதுவும் கீப்பர் கைக்கே போனது. கீப்பர் தவறவிட்டவுடன் என்னோட பாட்னர் மிகவும் சிரத்தை ஓடி வர நானும் ஓடினேன்..அப்பாட தப்பிச்சோம் அப்படின்னு நினைக்கும் போதே பாவிப்பையன் சிங்கிள் தட்டிவிட்டான்..கடைசி 3 பந்து 2 ரன்கள்.. மனதிற்குள் ஆரோமலே பாடல் ஒலிக்க நானும் எப்படியாவது அடிக்கவேண்டும் என்று எத்தனிக்க மறுபடியும் மிஸ்ஸிங்.. இம்முறை கீப்பர் என்னருகே நிற்பதனால் பைஸ் ரன் கூட எடுக்கமுடியவில்லை. 2 பந்துகள் 2 ரன்கள்.. சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம் என்று முணுமுணுத்துக்கொண்டே மட்டையை ஓங்கினேன்.. என்னையும் அறியாமல் பந்து தானாகவே மட்டையில் பட்டு பவுண்டரி லைனை தொட்டது..அன்பு என்னிக்குமே நீ சிங்கம்தான்டா...

தயவு செய்து படிக்கிற மக்கள் கமெண்ட் போடுங்க.. வாழ்த்த மனமில்லை என்றாலும் ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பல் விளக்கிட்டியா தோழி.....


கடற்கரை மணலில் கடலை போட்டுக்கொண்டிருந்த போது சொர்க்கம்னா என்னடா என்றாள் தோழி..உன் மடியில் தலை வைத்து தூங்குவது மாதிரி என்றேன்..அப்படின்னா நரகம்னா எப்படிடா இருக்கும் என்றாள்..சிறிது நேர தயக்கத்திற்குப்பின் சொன்னேன்..அந்த சம்பவம் உண்மையில் நடந்தால் அது தான் நரகம் என்றேன் என்றேன்..கோபத்துடன் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்...

போனில் சிணுங்கியவாறே என்னைய உனக்கு எவ்வளவுடா பிடிக்கும் என்றாள்.. ஐம்பது ரூபாய்க்கு பிடிக்கும் என்றேன்..புரியாதவளாய் விளக்கம் கேட்டாள்..ஐம்பது ரூபாய்க்கு டாப்-அப் போட்டு நீயே கால் பண்ணி பேசுறியே அதான் என்றேன்..

தினமும் கவிதையா எழுதுறியே இதெல்லாம் நீயா எழுதுறியா இல்லை எதையும் பார்த்து காப்பி அடிக்கிறியா என்றாள்..காப்பி தான் அடிக்கிறேன் என்றேன்..பலத்த சிரிப்புடன் எதை பார்த்துடா காப்பி அடிச்ச என்றாள்..உன்னைப்பார்த்துத்தான் தினமும் காப்பி அடிக்கிறேன் என்றேன்..

என்ன காலர்டீயூன் வைக்கலாம் என தோழியிடம் கேட்டேன்..உனக்குத்தான் சூர்யா பிடிக்குமே சிங்கம் படத்திலிருந்து வை என்றாள்..சிறிது நேரம் கழித்து கேட்கிறாள்..ஜோதிகாவை எவ்வளவுடா பிடிக்கும் என்று...என்ன சொல்ல என்று தெரியாமல் இருக்கிறேன்..

உதட்டோடு உதடாக தேன் பருக வந்த தோழியை தடுத்து நிறுத்தினேன்..வெட்கப்பட்டவளாய் தலைகுனிந்தபடி என்னடா என்றாள். காலையில் பல் விளக்கிட்டியா என்றேன்..மீண்டும் அதே கோபத்துடன்...

டிஸ்கி:-
1.எப்படி சிவகாசியில் கடற்கரை இல்லையோ அதே மாதிரி எனக்கு தோழியும் இல்லைங்க..எல்லாமே புனைவுதான்..
2.இந்த பதிவை பார்த்து கார்க்கி அண்ணன் மன்னிப்பாராக...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மதராசப்பட்டினம் - திரைப்பார்வை!!!


அது என்னவென்று தெரியலைங்க.. இயக்குனர் பாலா கிட்ட வொர்க் பண்ணபிறகு எல்லாரும் நல்லா நடிக்க ஆரம்பிச்சுடுறாங்க...விக்ரம், சூர்யா வரிசையில் இப்போது ஆர்யா...

மதுரையிலிருந்த தமிழ் சினிமாவை கொஞ்சம் நகர்த்தி சென்னைக்கு கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் விஜய்..அதிலும் 1947 க்கு. கீரிடம் படம் எடுத்தவரா இவர் என எல்லோரையும் அசர வைத்துவிட்டார்.

படத்தின் கதை என்னவென்றால் தியேட்டரில் போய் பாருங்க மக்களே..அப்புறம் எதுக்குடா பதிவு போட்ட அப்படீன்னு கேட்டீங்கன்னா...கீழே கொஞ்சம் படிங்க கடைசியில சொல்றேன்..


ஆர்யா: சத்தியமா இவர்கிட்ட இருந்து இப்படி ஒரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லைங்க. அவர் பேசுறதுக்கு முன்னாடியே அவர் கண் பேசுது. மல்யுத்த வீரனாகவும் சரி,ஏமியுடன் காதல் கொள்ளும் காட்சியுலும் சரி, பாடல் காட்சிகளிலும் சரி, மனுஷன் பின்னுகிறார்..அதிலும் நீங்க இங்கிலிஸ் பாடம் கத்துக்கிறப்ப தியேட்டரே கொஞ்சம் அலறித்தான் போனது..மற்றபடி தல,தளபதி,லொட்டு,லொசுக்கு,மண்ணு,மண்ணாங்கட்டி, இவங்க கூட எல்லாம் உங்களை ஒப்பிடும் போது நீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ்..



ஏமி: எந்த ஊரு தாயி நீ.. உருக்கி வைச்ச மெழுகுவர்த்தி சிலை மாதிரி இருக்கியேயம்மா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு..ஆர்யா இங்கிலிஸ் படித்து அதை ஏமியிடம் ஒப்பிக்கும் போது மறந்துவிட உடனே ஏமி "ம ற ந் து ட் டி யா" என்று தமிழ்ல பேசுவாங்க..அப்ப அவங்க ரெண்டு கண்களை காட்டும் போது ஒரு பிண்ணனி இசை வரும் சான்ஸ்லெஸ் ஜி.வி.. படம் பார்க்குறவங்க இந்த சீனை மறந்துவிடாதீங்க.. படம் முழுக்க இவங்க ஆட்சிதான்...
ஜீ.வி.பிரகாஷ்: தமிழ் சினிமாவிற்கு நல்ல பிண்ணனி இசையமைப்பாளராக இருக்கிறார். ஆரூயிரே இந்த பாட்டை தவிர எல்லா பாட்டும் செம. பல இடங்களில் உங்க இசை படத்தை இன்னும் சுவாரஸ்சியமாக்கிருக்கிறது..

எடிட்டிங் ஆண்டனி படத்துக்கு பேர் போடும் போதே நீங்க பாதி ஜெயிச்சுட்டீங்க பாஸ்..

ஆர்ட் டைரக்டர் செல்வகுமார், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, இந்த ரெண்டு பேரும் இந்த படத்துக்கு ரொம்ப உழைச்சு இருக்காங்க.. 1947 - ல் உள்ள, சென்ட்ரல், ஸ்பென்ஸர் பிளாஷா, பின்புறம் ஹார்லிக்ஸ் விளம்பரம், என ஒவ்வொரு சீனிலும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க..

மற்றபடி படத்தில், நாசர், எம்.எஸ்.வி.பாஸ்கர், வெள்ளைக்கார போலீஸ்துரை, ஏரோபிளேன் பறந்தாலே குண்டு போட போடுறாங்க என்று சொல்லி கொண்டே ஓடும் நபர், ஒரே ஒரு வாத்தியார், எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கும் வெண்ணிலா கபடிகுழு அப்பு குட்டி, படகு ஓட்டிச்செல்லும் வயதான கிழவர் இன்னும் எத்தனையோ பேர் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்..

கடைசியாய் இயக்குனர் விஜய் உங்களை எப்படி பாராட்டினாலும் போதாதுங்க..லண்டனில் இருந்து கிளம்பி சென்னை மற்றும் மதராசப்பட்டினத்தை மாற்றி மாற்றி காண்பித்து திரைக்கதையை கொஞ்சம் கூட தளரவிடாமல் கொண்டு போயிருக்கீங்க..உங்க கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம் பாஸ்...

அப்புறம் எதுக்குடா பதிவு போட்ட அப்படீன்னு கேட்டீங்கன்னா...

மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் நன்றி சொல்லத்தான்.!!!கிட்டத்தட்ட 2.45 மணி நேரம் ஓடுகின்ற இந்த படத்தை எந்தவித அலுப்பும் தட்டாமல் நம்மை இருக்கையோடு இருக்கையாக உட்காரச்செய்திருக்கிறார்கள்..

தியேட்டர் கமெண்ட்ஸ்:-

ஏமி ஒரு காட்சியில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஆர்யாவுடன் டாவ்வடித்துக்கொண்டிருக்கும்..அதைப்பார்த்து பின் வரிசையில் இருந்த ஒருவர் "மாப்ள அப்பவே முக்காடு போட்டுக்கிட்டு சுத்தி இருக்காங்கடா" என்றார்..

போலீஸ் நிலையத்தில் ஒரு போலிஸ்காரன் ஆர்யாவிடம் "இந்த தடவை நீ தப்பிச்சிட்ட அடுத்த தடவை உயிரோட போக மாட்டே" என்பான். அதற்கு ஆர்யா "நானும் அதே தான் சொல்றேன்" என்று சொல்லும் போதும் ரசிகர்களின் கைத்தட்டல் கொஞ்சம் அதிகம்...

**********************

படம் முடிந்து வெளியேறும் போது தீவிர விஜய் ரசிகனான என் நண்பனிடம் கேட்டேன்...

மாப்ள...இந்த படத்துல ஒரு வேளை உங்க தலைவர் விஜய் நடிச்சிருந்தா எப்படிடா இருந்திருக்கும் என்றேன்..

என்னை ஒரு மாதிரி ஏறஇறங்க பார்த்துவிட்டு "ஏன்டா உனக்கு மட்டும் இப்படி யோசிக்கத்தோணுது" என்றான்..

இல்லை மாப்ள..படத்துல ஒரு சீன்ல ஆர்யா ரொம்ப போலிஸ்துரை கூட சண்டை போடுவார்..ஒருவேலை உங்க தலைவரா இருந்தா ஒரு நிமிஷம் தான் எதிரில் நிற்பவன் ஆள் காலி என்றேன்..

அருகிலிருந்த தெரியாத நபர் ஒருவர் உடனே "படம் பார்க்குற நம்மளும் காலியாயிடுவோம் தம்பி" என்றார்..

மதராசப்பட்டினம் - ஒரு தடவை இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்...



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன்னைத்தவிர...


உன் தலையில் இருந்து
தவறி விழுந்த ஒற்றை முடி..

அந்த முடியில் குடி கொண்டிருந்த
சொர்க்கத்தை அடைந்த பூக்கள்...

உனக்கே தெரியாமல் உன்னிடம்
இருந்து களவாடிய ஹேர்-கிளிப்...

நீ முகம் துடைக்கையில் விழுந்த
ஸ்டிக்கர் பொட்டு...

கீழே விழுந்து நொறுங்கி போன
வளையல் துண்டுகள்..

நீ ஆசையாய் சாப்பிடும்
டைய்ரிமில்க் சாக்லெட் கவர்...

மை இல்லை என அலட்சியமாய் - நீ
தூக்கி எறிந்த பேனா...

உன் கழுத்தில் இன்பவேதனையை அனுபவித்து
அறுந்து விழுந்த பாசிமணி...

நீ அடிக்கடி வெட்டி கீழே போடும்
நகத்துண்டுகள்...

இவை அனைத்தும்
உன் நினைவுகளாய்
என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன...

உன்னைத்தவிர...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீ மொதல்ல ஆள விடு சாமி...


வீட்டிற்குள் அப்பா மாட்டி வைத்த படத்தில்
முருகன் வேலுடனும் சேவலுடனும் சிரிக்கிறார்.
அம்மாவோ வெள்ளி செவ்வாய்களில், தவறாமல்
மாரியம்மனுக்கும் காளியம்மனுக்கும் , அவர்களின்
கோயிலிக்கு சென்று, தரிசனம் செய்கின்றார்.
மாமாவோ மாதாமாதம் மடப்புரம் செல்கின்றார்.
சித்திக்கு சிந்தலக்கரை வெட்காளிதான் உச்சிதமாம்.
தாத்தாவோ, குலதெயவம்தான் குலம் காக்குமென்கிறார்.
சாமி இல்லையென்று, என் அக்கா புருஷன்
சொன்னால், பாட்டி பத்ரகாளியாகின்றாள்.
அக்காவோ, கணவனுக்கு நல்ல புத்தி குடுவென‌
சித்தி விநாயகரைத் துதிக்கின்றாள், ஆனால்
அண்ணனுக்கு அய்யனார்தான் இஷ்ட தெய்வமாம்..
கருமாரியை கவனித்தால் கஷ்டமெல்லையென,
அங்கலாய்க்கிறாள் பக்கத்து வீட்டு மாமி.
ஏனோ, என்னால் எவரிடமும் கேட்கமுடியவில்லை
"எங்கே உன் கடவுளை காமி" என, கேட்டால் எல்லாரும்
சொல்லி வைத்தாற் போல் சொல்கின்றனர்.
" நீ மொதல்ல ஆள விடு சாமி" என..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கடிதங்கள்...


கனவே கனவே

என் கனவெல்லாம் நீயே...

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்...

நீ நடக்கும் வீதியில்
தூசியே இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை
நான் கடந்து போவதால்...

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை
நான்
தொடருந்து வருவதால்...

நீ தூக்கி ஏறியும்
குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ
அது குடி புகுவதால்...

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில்
என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும்
தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்

என்னைத் துண்டு
துண்டாக்கிவிட்டு நீயோ
தூரமாய் போகிறாய்...

தூக்கத்தைத் தொலைத்து நான்
திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத
என் காதல் கடிதங்கள் மட்டும்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையில்...!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS