
முதலில் சந்தோஷமான விஷயம் ஒன்று..நமது பாசக்காரப் பதிவர் சீனா ஐயாவின் மகள் பிரியா மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்..தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்..அவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்!!
****************************
பதிவுலகில் போன வாரம் விருதுகள் வாரம் என்று சொல்லலாம்..எனக்கு இயற்கை அக்கா மற்றும் வியா,அவர்கள் இன்டிரஸ்டிங் அவார்டு கொடுத்தார்கள்..இந்த வாரம் விஜயின் பரம எதிரியான மன்னிக்கவும் ரசிகனான பிரியமுடன் வசந்த் அவர்கள் ஒரு விருதினை வழங்கியுள்ளார்..அவருக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு விருதினை வாங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
****************************
நேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினது.. அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் என்னை மெய்மறக்க செய்தது...அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடலும்,விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ
மகாதேவன் ஆகியோர் பாடிய பாடலும் மிகவும் அருமையாக இருந்தது..
****************************
நிகழ்ச்சியின் இடையே வந்த ஏர்டெல் கம்பெனியின் விளம்பரம் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்தது..ஒரு சிறு குழந்தை காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விடுகிறாள்..தண்ணீருடன் கப்பல் நன்றாக போய் கொண்டிருக்கிறது..தீடீரென மழை பொழிவதால் மழையில் காகிதக்கப்பல் நனையாமல் இருக்க தனது கை வைத்து கப்பலை மறைக்கிறாள்...சிறிது நேரத்தில் தன் இரண்டு கை மட்டுமே இருந்த இடத்தில் இன்னும் சிலர் வந்து கப்பலின் மீது கை வைத்து பாதுகாப்பாக கொண்டு செல்கின்றனர்..இவை அனைத்தும் வெறும் 45 வினாடிகளில்...அருமை..(மிகப்பெரிய நடிகர்களே தயவு செய்து அந்த சிறு குழந்தையிடம் நடிப்பினை கற்றுக்கொள்ளுங்கள்...)
****************************
கவிதை:-
எனது அறையின் தினசரி காலண்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்...
பார்க்கவில்லையெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்...
****************************
தத்துவம்:-
லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..
பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..
கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..
****************************
பொன்மொழி:-
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை தடைகள் வந்தாலும்
எனக்கு கவலையில்லை..
ஏனெனில், நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
1000 முறை தோற்றவன்..
எடிசன்..
****************************