Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

கா.பா. - தோழி - பிரித்தி...


டிஸ்கி: முதலில் இந்த பதிவு எழுத காரணமாக இருந்த அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்-அண்ணி பிரித்தி அவர்களுக்கு மிக்க நன்றி.. அண்ணன் கா.பா.வுக்கு கிடைத்த காதலி போல் எனக்கும் ஒரு காதலி கிடைக்க ஆசைதான்..சரி விடுங்க என் ஆசை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அண்ணன் கா.பா. விரைவில் அண்ணி பிரித்தியை கைப்பிடிக்க எல்லாம் வல்ல எழுச்சி ஏழுமலையாணை பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன்.

***************

இவ்வுலகில் தேவதையே இல்லை என்று சொல்லி வாக்குவாதம் பண்ணும் அம்மாவிடம் எப்படி சொல்லி புரிய வைப்பேன்.. அவளுக்கு மருமகளாக வருபவளே தேவதைதான் என்பதை..

சக்கரை நோய் வரப்போகிறதென எச்சரிக்கிறார் என் குடும்ப மருத்துவர்..முடிவு எடுத்துவிட்டேன் இனிமேல் உன் பெயரை ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உச்சரிக்க வேண்டுமென்று..

நீ, நான், காதல், என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.. முத்தம், காமம் என்று சொன்னால் உடனே உதடுகள் ஒட்டிக்கொள்கிறது என்றேன் தோழியிடம்.. ஒரு மாதிரியாக என்னை பார்த்தவள் உன் உதடும் என் உதடும் ஒட்டிக்கொள்ள என்ன சொல்ல வேண்டும் என்கிறாள்!!!

"ரத்தசரித்திரம்" படத்தில் கூட ஆட்களை கொல்ல அரிவாள், துப்பாக்கியை உபயோகப்படுத்தினார்கள்.. ஆனால் என்னவளோ கையில் ஒரு தாளை வைத்துக்கொண்டு பயமுறுத்துகிறாள்.. அவள் கையில் "காவலன்" படத்திற்கான டிக்கெட்..

நீ போனபின்பும் கூட
வெட்கத்திலிருக்கிறது...
நீ ஆடிய ஊஞ்சல்!!

உன் கழுத்திலே இருப்பதற்கு
என்ன தவம் செய்திருக்கும்...
அந்த வெள்ளை பாசிகள்!!

***************

இந்த மொக்கைக்கு எதுக்குடா கா.பா.வுக்கு நன்றி சொன்ன அப்படின்னு கேட்டீங்கன்னா எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. அண்ணனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாக அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..வாழ்த்துக்கள் அண்ணா..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அபிநயா-LC112-அன்பு-சிங்கம்...


எனக்கு எல்லாம் கஷ்டம் அப்படின்னா என்னவென்று கூட தெரியாதுங்க. என்னோட வாழ்க்கையில (நீ அப்படி என்னடா வாழ்ந்துட்டன்னு அத்திரி அண்ணன் கேட்காதீங்க..) இதுவரை நான் அழுதிருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்..நான் கடைசியா அழுதது கூட 3-ம் வகுப்பு படிக்கும் போது 2-வது ரேங்க் வந்ததுக்காக எங்கம்மா என்னை பூரிக்கட்டையாலே அடிச்சாங்க, அப்பத்தான் அழுதேன், அதுகூட அடிக்கிறதை நிப்பாட்டனுமே அப்படிங்கிறதுக்காக... இப்படி இருந்த நான் நேத்து மதியம் குப்புறபடுத்து விஜய் டி.வி.யில் "விஜய் அவார்ட்ஸ்" என்னும் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த நிகழ்ச்சி என்னவோ பல மாதத்துக்கு முன்னாடியே போடப்பட்டது தான் என்றாலும் இந்த மானிடனால் நேற்றுதான் பார்க்க முடிந்தது..அப்போது 2009ம் வருடத்துக்கான சிறந்த NEW COMER FEMALE என்னும் விருது "நாடோடிகள் அபிநயா" வுக்கு கொடுக்கப்பட்டது..அந்த விருதை வாங்கியவுடன் அவங்க உணர்ச்சி பொங்க பேச ஆரம்பிக்க அவளது இயலாமையை அறிந்து கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.. அவளின் அழுகையை கண்டவுடன் என்னமோ தெரியலைங்க என்னையும் அறியாமலே என் கண்கள் கலங்கின...
HATS OFF ABINAYA

**********************



சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே என்னை ரொம்ப கவர்ந்த படம் களவாணிதாங்க..மூன்று நிதிகளின் பிரச்சினையால் எங்கள் ஊரில் ஒரு பிட்டுபட தியேட்டரில் அந்த படத்தை ஓட்டினார்கள்.. சரி, நல்ல படத்தை எங்க போய் பார்த்த என்ன என்று எண்ணிக்கொண்டு வழக்கம்போல் ஓனரின் உபயத்தோடு படத்துக்கு சென்றேன். படம் நன்றாக இருந்தாலும் படம் பார்த்த இடம் சரியில்லை என்பதால் படம் மனதில் அவ்வளவாக நிலைக்கவில்லை..இருப்பினும் ஹரிஸ் ராகவேந்திராவின் குரல் மட்டும் நெஞ்சில் ஒலித்துக்கொண்டு இருந்தது..சரி இருக்கவே இருக்கு திருட்டு டி.வி.டி என்று வாங்கிவிட்டேன்..இதுவரை இரண்டு நாளில் நான்கு முறை பார்த்தாச்சு.. படம் பார்த்ததன் விளைவா என்னவென்று தெரியலை, தோழி பேசும் போதெல்லாம் "கட்டிக்கிறேன்னு சொல்லு" என்று சொல்லச்சொல்கிறேன்..படத்தின் கதாநாயகி ஓவியாவுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்ங்க..

**********************


நான் எப்போதுமே கிரிக்கெட் விளையாடும் போது ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்..கடந்த சில வாரங்களாக நான் சரியாக விளையாடாத காரணத்தினால், வழக்கமாக நான்காவது ஆளாக களமிறங்கும் நான் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தேன்.. சரி டீம்லயாவது சேர்த்துக்குறாங்களே அப்படிங்கிற நம்பிக்கையில நானும் விளையாட போனேன்.. நேத்து எங்களுக்கும் எங்கள் ஊரின் அருகில் உள்ள விஸ்வநத்தம் என்கிற ஊருக்கும் மேட்ச்.. முதலில் பேட் செய்த அவர்கள் 16 ஓவர்களுக்கு 96 ரன் அடிச்சாங்க.. நாங்களும் திரும்ப மன தைரியத்தோட களமிறங்கி நல்லாத்தான் விளையாடுனோம்.. நானோ சந்தோஷமாக இருந்தேன், நல்லவேளை நாம இன்னிக்கு இறங்க வேண்டி இருக்காது என நினைத்துக்கொண்டிருக்கையில் வரிசையாக எல்லோரும் பேட்டை கொண்டுபோவதும், திரும்ப கொண்டு வருவதுமாய் இருந்தனர்.. இறுதியில் 1 ஒவருக்கு 4 ரன்கள் என்று இருக்கையில் நான் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே மனதை தைரியப்படுத்திக்கொண்டு களமிறங்கினேன்.. நான் சந்தித்த முதல் பந்தே பவுன்சர்.. நான் அம்பயரிடம் நோ-பால் கேட்க, அம்பயர் என்னை பார்த்து நீ இன்னும் வளரணும் தம்பி என்றார்.. கேட்டு அசிங்கப்பட்டுடீயேடா அன்பு என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த பந்தை வீச அதுவும் கீப்பர் கைக்கே போனது. கீப்பர் தவறவிட்டவுடன் என்னோட பாட்னர் மிகவும் சிரத்தை ஓடி வர நானும் ஓடினேன்..அப்பாட தப்பிச்சோம் அப்படின்னு நினைக்கும் போதே பாவிப்பையன் சிங்கிள் தட்டிவிட்டான்..கடைசி 3 பந்து 2 ரன்கள்.. மனதிற்குள் ஆரோமலே பாடல் ஒலிக்க நானும் எப்படியாவது அடிக்கவேண்டும் என்று எத்தனிக்க மறுபடியும் மிஸ்ஸிங்.. இம்முறை கீப்பர் என்னருகே நிற்பதனால் பைஸ் ரன் கூட எடுக்கமுடியவில்லை. 2 பந்துகள் 2 ரன்கள்.. சிங்கம் சிங்கம் He is துரை சிங்கம் என்று முணுமுணுத்துக்கொண்டே மட்டையை ஓங்கினேன்.. என்னையும் அறியாமல் பந்து தானாகவே மட்டையில் பட்டு பவுண்டரி லைனை தொட்டது..அன்பு என்னிக்குமே நீ சிங்கம்தான்டா...

தயவு செய்து படிக்கிற மக்கள் கமெண்ட் போடுங்க.. வாழ்த்த மனமில்லை என்றாலும் ரெண்டு வார்த்தை திட்டிட்டாவது போங்க..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பல் விளக்கிட்டியா தோழி.....


கடற்கரை மணலில் கடலை போட்டுக்கொண்டிருந்த போது சொர்க்கம்னா என்னடா என்றாள் தோழி..உன் மடியில் தலை வைத்து தூங்குவது மாதிரி என்றேன்..அப்படின்னா நரகம்னா எப்படிடா இருக்கும் என்றாள்..சிறிது நேர தயக்கத்திற்குப்பின் சொன்னேன்..அந்த சம்பவம் உண்மையில் நடந்தால் அது தான் நரகம் என்றேன் என்றேன்..கோபத்துடன் திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்...

போனில் சிணுங்கியவாறே என்னைய உனக்கு எவ்வளவுடா பிடிக்கும் என்றாள்.. ஐம்பது ரூபாய்க்கு பிடிக்கும் என்றேன்..புரியாதவளாய் விளக்கம் கேட்டாள்..ஐம்பது ரூபாய்க்கு டாப்-அப் போட்டு நீயே கால் பண்ணி பேசுறியே அதான் என்றேன்..

தினமும் கவிதையா எழுதுறியே இதெல்லாம் நீயா எழுதுறியா இல்லை எதையும் பார்த்து காப்பி அடிக்கிறியா என்றாள்..காப்பி தான் அடிக்கிறேன் என்றேன்..பலத்த சிரிப்புடன் எதை பார்த்துடா காப்பி அடிச்ச என்றாள்..உன்னைப்பார்த்துத்தான் தினமும் காப்பி அடிக்கிறேன் என்றேன்..

என்ன காலர்டீயூன் வைக்கலாம் என தோழியிடம் கேட்டேன்..உனக்குத்தான் சூர்யா பிடிக்குமே சிங்கம் படத்திலிருந்து வை என்றாள்..சிறிது நேரம் கழித்து கேட்கிறாள்..ஜோதிகாவை எவ்வளவுடா பிடிக்கும் என்று...என்ன சொல்ல என்று தெரியாமல் இருக்கிறேன்..

உதட்டோடு உதடாக தேன் பருக வந்த தோழியை தடுத்து நிறுத்தினேன்..வெட்கப்பட்டவளாய் தலைகுனிந்தபடி என்னடா என்றாள். காலையில் பல் விளக்கிட்டியா என்றேன்..மீண்டும் அதே கோபத்துடன்...

டிஸ்கி:-
1.எப்படி சிவகாசியில் கடற்கரை இல்லையோ அதே மாதிரி எனக்கு தோழியும் இல்லைங்க..எல்லாமே புனைவுதான்..
2.இந்த பதிவை பார்த்து கார்க்கி அண்ணன் மன்னிப்பாராக...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2040-ல் இந்தியாவின் தலைப்புசெய்திகள்..


1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.

2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..

3.நான் அடுத்த உலக்கோப்பையிலும் விளையாட விருப்பமாக உள்ளேன் - சச்சின் பேட்டி...

4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....

5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா.....

6.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.5 உயர்வு..இனி 999/லிட்டர்......

7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......

8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........

9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........

10.விஜய் தனது அடுத்த படத்தில் காலேஜ் மாணவனாக வலம் வருகிறார்..........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனக்கு வந்த குறுஞ்செய்திகள்..



மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!

****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேட்டைக்காரன்-முன்நவீனத்துவமான விமர்சனம்..


ஏ.வி.எம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் மிகவும் பிரம்மாண்டமாய் வந்திருக்கும் படம் வேட்டைக்காரன்...

பொதுவாகவே விஜய் படங்களில் முதலில் ஒரு ஓபனிங் சாங் வரும்..ஆனால் இப்படத்தின் முதல் காட்சியே நம் நெஞ்சை உருக்குகிறது..விஜய் பத்து வயது சிறுவனாக வருகிறார்..அதற்காக அவர் கடினமாக உழைத்திருப்பார் என எதிர்பார்க்கிறேன்..கண்ணில்லாத அக்கா...காலில்லாத தம்பி..ஆஸ்த்துமா நோயில் தாய்..மரண படுக்கையில் தந்தை..வேலையில்லாமல் விஜய்..என முதல் காட்சியிலே ஒரு குடும்பத்தின் கஷ்டங்களை நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர் பாபு சிவன்..

விஜய் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இன்டர்வியூ போகிறார்..அங்கே இவரது திறமை அவமதிக்கப்படிகிறது உடனே"வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்"..என்ற பாடல் ஒளிபரப்பாகிறது..பாடலிலே விஜய் அந்த கம்பெனியின் எம்.எடியை தீர்த்துக்கட்டுகிறார்..

இப்படி வேலை தேடிக்கொண்டிருக்கும் விஜயின் கனவு என்னவென்றால் தமிழகத்தின் முதல்வர் ஆவதுதான்..இதற்காக இவர் படும் கஷ்டங்கள்..படத்தில் மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளன..



இடையில் அனுஷ்காவுடன் மோதல்..மோதலின் விளைவு காதல்..என தன் இளமைக்கால வாழ்க்கையையும் என்ஜாய் பண்ணுகிறார்..அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதுடன் தன் காதலன் முதலமைச்சராக அவர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை..



இக்கட்டத்தில் தமிழகத்தில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடவே ஆளுங்கட்சி கவிழ்கிறது..இந்நேரத்தில் விஜய் கட்சி உருவாக்குகிறார்..தேர்தலில் நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும் கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான நடிப்பு..அனுஷ்கா கட்சியின் விளம்பரத்தூதுவர்.

இறுதியில் தேர்தலில் வென்றும் விடுகிறார்...தமிழக முதல்வனாக விஜய்..வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டையில்..பார்க்கவே கொடுத்து வைக்கனும் நம் கண்களுக்கு ..

படத்தில் எந்த ஒரு பாமரனும் நினைத்தால் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்ற உண்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். :-((

கிளைமேக்ஸ் காட்சியில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தமிழக மக்களுக்கு ஒரு இருபது நிமிடம் அறிவுரை கூறுகிறார்...

படத்தின் பிற்பாதியில் தமிழகத்தின் வறுமை எப்படி குறைந்தது..விஜயின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கார் இயக்குனர்..

படத்தில் பிண்ணனி இசையும் (விஜய் ஆண்டனி) கிளைமேக்ஸ் வசனங்களும் மிக அருமை..

வேட்டைக்காரன்:- தமிழகத்தின் பஞ்சத்தை வேட்டையாட வந்தவன்..

டிஸ்கி 1 : படத்தில் விஜய் ஆட்சி செய்வதை பார்க்கும்போது நமக்கே இவர் உண்மையிலே ஆட்சிக்கு வந்தால் எப்படிக்கு இருக்கும் தமிழகத்தின் பஞ்சம் தீர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது..

டிஸ்கி 2 : இங்கு கூறியிருக்கும் அனைத்தும் கற்பனையே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(27-07-09)


முதலில் சந்தோஷமான விஷயம் ஒன்று..நமது பாசக்காரப் பதிவர் சீனா ஐயாவின் மகள் பிரியா மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்..தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்..அவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்!!

****************************
பதிவுலகில் போன வாரம் விருதுகள் வாரம் என்று சொல்லலாம்..எனக்கு இயற்கை அக்கா மற்றும் வியா,அவர்கள் இன்டிரஸ்டிங் அவார்டு கொடுத்தார்கள்..இந்த வாரம் விஜயின் பரம எதிரியான மன்னிக்கவும் ரசிகனான பிரியமுடன் வசந்த் அவர்கள் ஒரு விருதினை வழங்கியுள்ளார்..அவருக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு விருதினை வாங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
****************************
நேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினது.. அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் என்னை மெய்மறக்க செய்தது...அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடலும்,விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ மகாதேவன் ஆகியோர் பாடிய பாடலும் மிகவும் அருமையாக இருந்தது..
****************************
நிகழ்ச்சியின் இடையே வந்த ஏர்டெல் கம்பெனியின் விளம்பரம் ஒன்று என்னை மிகவும் ரசிக்க வைத்தது..ஒரு சிறு குழந்தை காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் விடுகிறாள்..தண்ணீருடன் கப்பல் நன்றாக போய் கொண்டிருக்கிறது..தீடீரென மழை பொழிவதால் மழையில் காகிதக்கப்பல் நனையாமல் இருக்க தனது கை வைத்து கப்பலை மறைக்கிறாள்...சிறிது நேரத்தில் தன் இரண்டு கை மட்டுமே இருந்த இடத்தில் இன்னும் சிலர் வந்து கப்பலின் மீது கை வைத்து பாதுகாப்பாக கொண்டு செல்கின்றனர்..இவை அனைத்தும் வெறும் 45 வினாடிகளில்...அருமை..(மிகப்பெரிய நடிகர்களே தயவு செய்து அந்த சிறு குழந்தையிடம் நடிப்பினை கற்றுக்கொள்ளுங்கள்...)
****************************
கவிதை:-

எனது அறையின் தினசரி காலண்டர் கூட
கேலி பேசுகிறது என்னை..
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்த தேதியை மெதுவாக கிழிக்கின்றேனாம்...
பார்க்கவில்லையெனில்
பிய்த்து கசக்கி எறிகிறேனாம்...
****************************
தத்துவம்:-

லவ் என்று சொன்னாலும் காதல் என்று சொன்னாலும்
உதடுகள் ஒட்டாது..

பிக்-அப்,டிராப்,எஸ்கேப்,என்று சொன்னால் மட்டுமே
உதடுகள் ஒட்டும்..

கலைஞர் இல்லைங்கோ இன்றைய இளைஞர்..
****************************
பொன்மொழி:-

எத்தனை துன்பங்கள் வந்தாலும்

எத்தனை தடைகள் வந்தாலும்

எனக்கு கவலையில்லை..

ஏனெனில், நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...

1000 முறை தோற்றவன்..

எடிசன்..
****************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்..(அன்பு)


1. ரொமான்ஸ் லுக்குனு சொல்லி காதல் காட்சிகள்ல கேவலமா ஒரு பார்வை பாப்பிங்களே அது புடிக்காது..

2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..

3. காமெடி பண்றேன்னு 'வாங்க்னா, போங்கனா' அப்படின்னு வாயை கோணலா வச்சுட்டு பேசுவீங்களே... அது கேவலமா இருக்குது..

4. பாடல் காட்சிகள்ல உங்க லிப் மூமெண்ட் ரொம்ப கேவலம்.. பாட்டுக்கு சிங்க் ஆகாம வாயசைப்பது....... முடியல..

5. நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி.. அந்த படத்துக்கு அப்புறம் எங்க ஊர் தியேட்டர் ஆபரேட்டர் ஒருத்தர் கோமாவில் கிடக்கிறார் தெரியுமா..

6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..

7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..

8. எல்லா பங்க்சனுக்கும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே வருவீங்களே.. அது பாக்க சகிக்கலை..

9. பிரஸ் மீட்ல 'சைலென்ஸ்' ன்னு கத்துனீங்களே அத பார்த்து எங்க ஊர்ல பல பேருக்கு காய்ச்சல் வந்துடுச்சு..

10. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கிட்டு அதை பெருமையா வேற போட்டுடீங்களே அது சுத்தமா புடிக்கலை..

11. வில்லு படத்துல பாரதியார் கெட்டப்புல வந்தீங்களே.. நல்ல வேளை பாரதியார் சின்ன வயசுல இறந்துட்டார்..

இப்படி உங்க கிட்ட பிடிக்காதது இன்னும் நிறைய இருக்கு...

டிஸ்கி 1: இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவோ, நேர் பதிவோ, சைடு பதிவோ இல்லை..

டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(21-07-09)



நமது பதிவுலகில் மூத்த பதிவரான சீனா ஐயா அவர்கள் தம் இரண்டு பெண் குழந்தைகளையும் மற்றும் பேரன் பேத்திகளையும் பார்க்க 45 நாள் விடுப்பில் இலண்டன் சென்று உள்ளாராம்...அவரது இந்த சுற்றுலா பயணம் உல்லாசமாக அமைய எனது வாழ்த்துக்கள்..வரும்பொழுது எனக்கு ஒரு பரிசு பொருள் வாங்கிவதாக கூறியுள்ளார்..பரிசினைக்காண ஆவலாக உள்ளேன்..
*******************************************
பதிவுலகத்தை விட்டு சென்ற பிரபல பதிவர் சென்றதுக்கு காரணம் பிரச்சனை எதுவும் இல்லையாம்.. தொழிலில் கவனம் செலுத்தவே எழுதுவதை விட்டாராம். தொழில் சரியான பின் காதல் கவிதைகள் மீண்டும் பொழிவார் என தெரிகிறது..(எனக்கு இப்பவே கண்ணை கெட்டது)
*******************************************
பதிவுலக மங்கை இயற்கை அக்கா அவர்கள் எனக்கு ஒரு பிளாக்கர் விருது கொடுத்துள்ளார்கள்..அவர்களுக்கு என் நன்றிகள்..மேலும் என்னோடு அனைவ்ருக்கும் என் வாழ்த்துக்கள்.
*******************************************
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போகாமல் வீட்டினில் தொலைக்காட்சியினை மேய்ந்து கொண்டிருக்கையில் சன் மீயூசிக் சேனலை பார்த்தேன்..எனக்கு மிகவும் பிடித்த பாடல் குளிர் 100டிகிரி படத்திலிருந்து பூம் பூம் என்று ஆரம்பிக்கிற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.. பென்னிதயால்,அபிஷேக்,மற்றும் சிலர் படித்த பாடல்.பாடலில் ஒரு வரியில் 'மானாட மயிலாட' என்கிறஒரு வரி வரும்..அதை மட்டும் சன் மியூசிக் கணிணி வல்லுநர்கள் மீயூட் செய்துவிட்டனர்..எனக்கு அவர்களது கோழைத்தனத்தை பார்க்கும் போது ஒரே சிரிப்பு..
*******************************************
மேலும் ஒரு அருமையான நிகழ்ச்சினை காண நேர்ந்தது..அது விஜய் டி.வி.யின் 'நீயா நானா' நிகழ்ச்சி. 'காதலில் இருப்பவர்கள் காதலில் இருந்தவர்கள்' இரு தரப்பினர்களுக்கும் இடையான உரையாடல்..மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது..வெகுவிரைவில் இந்த நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கிறேன்..அவ்வ்வ்வ்வ்வ்
*******************************************
கவிதை:-

நீ நடக்கையில் உன்

நிழல் உன்னுடன் வருகிறது..

நான் நடக்கையில் மட்டும் என்னுடன்

இரண்டு நிழல்கள் வருவதாக உணர்கிறேன்...

நாம் இருவரும் நடக்கையில்

மூன்று நிழல்கள் நம்மை தொடர்கின்றன்..

அப்படியானால்

மூன்றாவது நிழல்...

நம் குழந்தையா..!!!

(டிஸ்கி:-இது என்னுடைய முதல் காதல் கவிதை..அதனால் நீங்க நல்லா இருக்கு என்று சொல்லியே ஆக வேண்டும்..இல்லைன்னா இது போல பல மொக்கைக்கவிதைகள் காத்து உள்ளன...)
*******************************************
நகைச்சுவை:-

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..
*******************************************
தத்துவம்:-
காதல் என்பது அழகான ஓவியம் போல..

வரையத்தெரிந்தவன் புத்திசாலி..

வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நீங்க எவ்வளவு பெரிய பதிவர்..பரிசோதிக்க ஒரு போட்டி..



படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம்..

வந்தது வந்துட்டிங்க...ஒரு ஆறு வித்தியாசம் கண்டுபிடிச்சி பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.. முதலில் சொல்லுபவர்களுக்கு வால்பையனுடன் ஒரு விருந்து..பங்கு பெறுவீர்..போட்டியில்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும் (06/07/09)



நன்றி...நன்றி..

பதிவுலகில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின்றன..இதற்குள் 56 பதிவுகள்..54 பாலோயர்கள்..இரண்டு முறை பதிவர் சந்திப்புகள்..நினைத்தாலே மனம் மகிழ்ச்சியாக உள்ளது..மேலும் என் எழுத்தையும் தொடர்ந்து ரசிக்கும் அந்த 54 பாலோயர்க்கும்,இனிமேல் பாலோயாராக சேர இருக்கும் நண்பர்களுக்கும் என் மனமானர்ந்த நன்றிகள்..

***********************************

நேற்று(05/07/09) நடைபெற விருந்த மேற்கு இந்தியத்தீவுக்களுக்கு எதிரான கடைசி ஒருதின போட்டி மழையால் கைவிடப்பட்டது..இருப்பினும் இந்திய அணி ஏற்கனவே முன்னிலையில் இருப்பதால் தொடரை எளிதாக கைப்பற்றியது..20 ஓவர் போட்டியில் கோப்பையை வெல்லமுடியாமல் போன இந்திய அணிக்கு இந்த போட்டி சற்று ஆறுதல் அளித்திருக்கும்..

மேலும் நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் கோப்பையை கைப்பற்றினார்..இது அவருக்கு 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.அவர் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..

***********************************

நேற்று காலை சன் டி.வி.யின் டாப்-டென் நிகழ்ச்சி காண நேரிட்டது..பெரும்பாலும் பாடல்களை மட்டும் கேட்கும் நான் சரி எந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது என பார்ப்போமே என பார்த்தால் ஒரே ஆச்சர்யம்

3வது இடத்தில் அயன்...

2வது இடத்தில் நாடோடிகள்

1வது இடத்தில் மாசிலாமணி..

மாசிலாமணி படத்தில் நல்ல பாடல்கள்,மற்றும் நல்ல கதைக்களம் என எல்லா அடிப்படைத்தேவைகளையும் இப்படம் பூர்த்தி செய்திருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..என்றனர்...

இந்த நிலைமை நீடித்தால் இந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட படங்கள் மட்டுமே அவர்கள் டி.வி.யில் டாப்-டென்னாக இருக்கும்..

இந்த பிழைப்புக்கு....????

***********************************

சமீபத்தில் 'அதே நேரம் அதே இடத்தின்' பாடல்கள் கேட்டேன்..இப்படத்தின் இசையமைப்பாளர்-பிரேம்ஜி அமரன்..படத்தில் ஒரு பாடல் பெண்களை மையப்படுத்தி வந்துள்ளது..பாடலை பாடியவர்:வெங்கட் பிரபு..எழுதியது யார் என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.பாடல் மிக அருமை..பாடலின் தொடக்க வரிகள்..

நம்மூர் சென்னையில நாள்தோறும் வீதியிலே
பல நூறு பொண்ணுங்களை பார்த்தேனே..

என்னோட நெஞ்சுக்குள்ளே எப்போதும் கண்ணுக்குள்ளே
உயிராக ஒருத்தியாகத்தான் வைச்சேனே..

பாடலை ஸ்கிரினில் பார்க்க ஆவலாக உள்ளது...

***********************************

நகைச்சுவை:-

மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்..
அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோங்க.
கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..

***********************************

கவிதை:

நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..


***********************************

தத்துவம்:

தூசி பட்ட கண்களும் காதல் பட்ட இதயமும்
எப்போதுமே கலங்கி கொண்டே தான் இருக்கும்..

***********************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்டதும் கேட்டதும்..(1/7/09)


இது ஒரு மொக்கைப்பதிவுதான்..அதாவது அவியல்,குவியல்,உட்கார்ந்து யோசித்தது,ரூம் போட்டு யோசித்தது,காக்டெயில்,கொத்து புரோட்டா,மாதிரி இதுவும் ஒன்னுங்க....எனக்கும் இந்த மாதிரி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசைங்க..ஆனால் அதிகமான ஆணி பிடுங்குதல்,சரியான தலைப்பு கிடைக்காததால் எழுத இயலவில்லை..இந்த தலைப்பின் சொந்தக்காரர் அண்ணன் ஸ்ரீ-க்கு என் மனமார்ந்த நன்றிகள்..

*******************************************************************

போன வெள்ளிக்கிழமையன்று வெளியான நாடோடிகள் திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது.அனைவரும் போய் பார்க்க வேண்டிய படம்.
சசிகுமார் இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் கலக்கி வருகிறார்..அவரது நடனம் கூட நன்றாக உள்ளது...சமீபத்திய மொக்கைப்படங்கள் பார்த்த எனக்கு இப்படம் ஒரு திருப்தியாக இருந்தது.இனி நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்கள்..ஆயிரத்தில் ஒருவன்,கந்தசாமி.நந்தலாலா..பொறுத்திருந்து பார்ப்போம்..

*******************************************************************

சமீபத்தில் வந்த திரைப்பட பாடல்களில் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரத்தில் ஒருவன் தான்..படத்தில் இருக்கும் பத்து பாடல்களும் அருமையாக உள்ளது.இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் தன் பணியை செவ்வென செய்து உள்ளார்..இருந்தாலும் செல்வராகவன் படம் என்றாலே என் நெஞ்சினில் வருவது யுவன்சங்கர் ராஜாவின் இசைதான்..துள்ளுவதோ இளமை, 7யின் தாக்கம்...இப்படத்திலும் இசையமைத்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.இருப்பினும் ஜீ.வி.பிரகாஷ்குமாருக்கு ஹேட்ஸ் ஆப்...

பாடல்களை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்க.

*******************************************************************

அண்ணன் பைத்தியக்காரன் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டி நேற்றோடு நிறைவுக்கு வந்தது.பல மூத்த பதிவர்கள் பங்கு பெற்ற இப்போட்டியில் நானும் பங்குபெற்றது மிக்க மகிழ்ச்சி..மொத்தம் 219 கதைகளாம்.என்னோட சிறுகதை படிக்க..

*******************************************************************

24-6-09 அன்று அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் தங்கைக்கு மதுரையில் இனிதே நடைபெற்றது..இதில் பங்குகொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி.சொல்லரசன் மற்றும் ஆதவா ஆகிய இரு முக்கிய பதிவர்களை முதன் முதலாக சந்தித்தேன்.தங்கைக்கு கல்யாணம் முடிந்த கையுடன் தனக்கும் பொண்ணு தேடிக்கொண்டு வருகிறார் அண்ணன் கார்த்திகைப்பாண்டியன்.விண்ணப்பம் செய்பவர்கள் செய்யலாம்..


*******************************************************************

வழக்கமாக நான் பதிவெழுதாத நாட்களில் நம்ம கடையின் நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கும்..வெறும் பத்து ஹிட்ஸ் வந்து இருக்கும்..அதுவும் நான்தான் பார்த்திருப்பேன்..கடந்த இரண்டு நாட்களாக தினமும் 100 பேர் வருகின்றனர்...என்னவென்று தணிக்கைகுழு வைத்து ஆராய்ச்சி செய்ததில் டாக்டர் தேவன் சாரின் பதிவுலக மன்மதன்கள் என்ற பதிவுதான் காரணம் என தெரியவந்தது..எனவே டாக்டருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
மேலும் டாக்டரின் சமீபத்திய பதிவான காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை அவரது மனைவி படித்துவிட்டாராம்..வீட்டில் ஒரே கலாட்டாவாம்..
மேலும் விவரங்களுக்கு தேவா சாரை அணுகவும்...

*******************************************************************

பிரபல பதிவர் அவர் தன் காதலியிடன் சண்டையிட்டுக்கொண்டு உள்ளாராம்..தொ(ல்)லைபேசியில் வந்த குறுந்தகவல் தான் காரணமாம்..நல்லா பார்த்து எஸ்.எம்.எஸ். அனுப்புங்க மக்கா

*******************************************************************

நகைச்சுவை:-

ஆசிரியர்: ஒவ்வொருவரும் அவங்கிட்ட இருக்கிற தனித்திறமைப் பற்றி சொல்லுங்க..
மாணவன்:நான் பின்னாலே நடப்பேன் சார்..
ஆசிரியர்:எவ்வளவு தூரம்.
மாணவன்:உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுதோ அவ்வளவு தூரம்..
ஆசிரியர்:...????

*******************************************************************

கவிதை:-

பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்...

*******************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வருங்கால இந்திய பிரதமரின் 32 பதில்கள்..!!

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

ஓபன் ஹார்ட் என்பது சட்டென என் நண்பரின் மனதில் தோன்றியது.எனக்கும் பிடித்திருந்ததால் உடனே வைத்தேன்..அன்பு என்பது என்னுடைய பெயர்.மதி என்பது அம்மாவின் பெயர். அதனால் இரண்டையும் இணைத்து அன்புமதி என்று வைத்துக்கொண்டேன். என்னுடைய பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
************************************************************************
2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு வாரத்திற்கு முன்பு.சிறு குழந்தை ஒன்று எதிரே வந்த வண்டியின் மீது மோத அக்குழந்தையின் அம்மா கதறி அழுத காட்சியை பார்த்தபோது என் கண்களில் தானாகவே கண்ணீர் வந்தது..
************************************************************************
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்பபிடிக்கும்
************************************************************************
4.பிடித்த மதிய உணவு என்ன?

தயிர்சாதம்,அம்மாவின் சமையல் எதுவாயிருந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
************************************************************************
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்ச காலம் பழகியபின் அவர்களது நடத்தைகள் சரியாக இருந்தால் மட்டுமே உடனே நட்பை தொடருவேன்.ஆனால் நட்பு என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.
************************************************************************
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் குளிக்க பிடிக்கும். அருவியில் கிளிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதிலும் குற்றாலம் என்றால் ஜாலிதான்...
************************************************************************
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்..பின் ஆடை அணிந்திருக்கும் விதம்..
************************************************************************
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது:தன்னம்பிக்கை..எந்த வேலையிலும் வெற்றி எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என நினைப்பேன்..

பிடிக்காதது:கோபம்.வெற்றி என்ற இலக்குக்காக பல தவறான முடிவுகளை எடுத்தல்.. இந்த இரண்டையும் எவ்வளவோ முயன்றும் என்னால் மாற்ற இயலவில்லை..
************************************************************************
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாரிங்க..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை:-))
************************************************************************
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க..நான் விரும்பும் அனைவருமே என் அருகிலே உள்ளனர்..
************************************************************************
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

சிவப்பு நிற சட்டை..சந்தன நிற பேண்ட்..
************************************************************************
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ஒரு முறை பிறந்தேன்..ஒரு முறை பிறந்தேன்..உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..
************************************************************************
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு
************************************************************************
14.பிடித்த மணம்?

மல்லிகையின் மணம்.மண்வாசனை.
************************************************************************
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

பொன் வாசுதேவன்: "அகநாழிகை" என்னும் பெயரில் எழுதி வருகிறார்..நிறைய கவிதைகள் எழுதுவார்.
************************************************************************
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

டக்லஸ்: எனக்கு பிடித்த பதிவு. 2020 ல தமிழ் நாடு .....நம்ம கற்பனை..நல்ல மொக்கையான பதிவு.
************************************************************************
17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்..
************************************************************************
18.கண்ணாடி அணிபவரா?

கண்டிப்பாக இல்லை
************************************************************************
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பெரும்பாலும் காதல் திரைப்படங்கள்.
************************************************************************
20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க..
************************************************************************
21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்
************************************************************************
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இரண்டாம் பாகம்..
************************************************************************
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தினமும் ஒரு படம் வைத்து ரசிப்பேன்
************************************************************************
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:குழந்தையின் சிரிப்பு.
பிடிக்காதது : ரோட்டில் வரும் ஹார்ன் இரைச்சல்,
************************************************************************
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சென்னை..
************************************************************************
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எதுவும் இல்லை..
************************************************************************
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொதுவா லஞ்சம், மற்றும் ஏமாற்றுதல்.
************************************************************************
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்…
************************************************************************
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இன்னும் எதுவுமே பார்க்கலைங்க..பார்த்தபின் தான்சொல்ல முடியும்.. இதுவரை குற்றாலம் ரொம்ப பிடிக்கும்.. ************************************************************************
30.எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லைங்க..இந்தியாவின் பிரதமர் ஆனால் போதும்..
************************************************************************
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

ஏற்கனவே சொன்னது போல் நான் ரொம்ப சின்னப்பையன்ங்க..
************************************************************************
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே..ஒவ்வொருவரும் தன் இலக்கை நோக்கி முயற்சித்து போராடுங்கள்.. வெற்றி ஒரு நாள் நிச்சயம்..
************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS