கண்டதும் கேட்டதும்..(27-10-2009)


கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சீனா ஐயா அவர்கள் அவர் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்.. அதற்கு போன ஞாயிற்றுக்கிழமைதான் விடை கிடைத்தது..நானும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பி மதியம் அவரது வீட்டினை அடைந்தேன்..அவர் இருக்கும் அபார்மென்டை பார்க்கும் போதே நானும் அங்கேயே தங்கிவிடலாமோ என நினைப்பு வந்தது (காரணம் கேட்பவர்கள் தனியாக மின்னஞ்சல் பண்ணவும்). வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்தவுடன் சீனா ஐயாவின் மனைவி அவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடுத்தார்கள்.மிகவும் அருமையாக இருந்தது..பின் சிறிது நேரம் கதைத்து விட்டு அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்தேன்..மிகவும் அழகாக இருந்தது..பின் மதிய உணவு சாப்பிட்டோம்.. சாதம்,சாம்பார்,கேரட் பொரியல்,என அருமையான விருந்து.இந்த விருந்தை கார்த்தி அண்ணா மிஸ் பண்ணிவிட்டார்..பின் மின்சாரம் தடை செய்யப்படவே இருவரும் பேராண்மை படத்துக்கு கிளம்பினோம்..படமும் அருமை,தியேட்டரும் அருமை.ஏனென்றால் சிவாகாசியில் இருக்கும் தியேட்டரை விட பல மடங்கு நன்றாக இருந்தது..பின் வீட்டிற்கு வந்தவுடன் கார்த்தி அண்ணா வந்தார்..அதன் பின் ஸ்ரீதர் அண்ணா வந்தார்..மொத்தத்தில் ஒரு பதிவர் சந்திப்பினை நடத்திவிட்டு கிளம்பினோம்..பதிவர் சந்திப்பினில் நானும் ஸ்ரீதர் அண்ணனும் ஒரு குறும்படம் எடுப்பது உறுதியானது..எங்களது குறும்படத்திற்கு வசனமும் பஞ்ச் டையலாக் எழுதும் பொறுப்பினை அண்ணன் கார்த்திகைப்பாண்டியன் ஏற்றுக்கொண்டார்..அனேகமாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம்...

*************************

அது என்னமோ ஏதோ தெரியவில்லை..எனக்கு எவனோ ஒருவன் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போய்கிறது..போன முறை சிவகாசி வந்தவுடன் அழைத்தார்கள்..என்னால் செல்ல இயலவில்லை..இதோ இந்த சனிக்கிழமையும் அப்படியே நடந்தது.நான் அழைக்கும் போது அவர் கொஞ்சம் பிஸி.அவர் அழைக்கும் போது நான் கொஞ்சம் பிஸி..நாம் இருவரும் அடுத்த முறையாவது சந்தித்துவிடுவோமா அண்ணா...

*************************

அண்மையில் பார்த்த படங்களில் என்னை வெகுவாக ஈர்த்தது பேராண்மை...படத்தில் பல இடங்களில் பொண்வண்ணன் பேசும் போது கட் செய்யப்படுகின்றன.இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்களையே சென்சார் அனுமதித்து தொலைக்காட்சிகளில் வெளியிடும் போது ஒரு நல்ல படத்தின் வசனத்தை கத்தரிப்பது நன்றாக இல்லை.. மற்றபடி படத்தில் நடித்து உள்ள அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம் போல் இருக்கிறது..

*************************

கவிதை:-

உயிர்

உயிருடன் இருக்கும் பொழுது ,
உணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,
உயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,
உணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;
உயிரில்லாத உடலை பார்த்து . . .

*************************

தத்துவம்:-

இன்றைய வெற்றி நாளையும் வெற்றி…!!
இன்றைய தோல்வி நாளைய அனுபவம்… !!!!

*************************

டிஸ்கி:-

இந்த பதிவு படித்து முடித்தவுடன் பின்னூட்டமோ வோட்டோ மட்டும் தான் போடணும் என்று அவசியம் இல்லை...எங்கள் வீட்டிற்கு தேவையான மிக்ஸி,கிரைண்டர்,என எந்த நல்லா பொருளாக இருந்தாலும் அனுப்பி வைங்க..

100 பாலோயர்ஸ் அடையச்செய்த அனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நானும் ஆதவனும்...


கடந்த ஒரு மாதமாக தீபாவளி சீக்கிரம் வராதா என எதிர்பார்த்த பல கோடி மக்களில் நானும் ஒருவன்..காரணம் ஒன்றே ஒன்று தான்..வேட்டைக்காரனும் ஆதவனும் ஒரே தேதியில் வெளியிடுவதுதான்..கடைசி நேரங்களில் வேட்டைக்காரன் வெளியிடவில்லை என உறுதியானது..இருப்பினும் என் மனம் சூர்யா,,சூர்யா,,என கத்திக்கொண்டிருந்தது..செல்போனில் காலர்டீயூன் முதல் கணிணியில் நான் தினமும் கேட்கும் முதல் பாடல் என ஆதவனே இருந்தான்...

ஒருவளியாக தீபாவளியும் வந்தது..சூர்யாவின் தீவிர ரசிகன் என்பதால் என் சொந்த செலவிலேயே என் நண்பர்களுக்கும் டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தேன்..மதியம் 2.30க்கு படம்..நானோ 12.30க்கே கிளம்பிவிட்டேன்..ஒவ்வொரு நண்பனுக்கும் போன் போட்டு வரசொல்லி தியேட்டருக்குள் நுழையும் போது என் நண்பனின் கையில் இருந்த 1000 வாலா சரவெடியை போட்டு பட்டையைக்கிளப்பினோம்...

நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம்...

தியேட்டரில் சூர்யா என எழுத்து வரும்போது விசில் சத்தம் விண்ணை பிளந்தது..படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் படத்தில் எல்லோரும் இங்கிலிஸ் பீசுலே பேசுனாங்க...சரி படம் எங்கேயோ போகப்போகுது என நினைத்துக்கொண்டிருந்தேன்.சூர்யா கையில் மவுத் ஆர்கனுடன் வரும்போது உடம்பெல்லாம் ஒரே வித்தியாசமான அனுபவம்..



எதிலும் குறிபார்த்து சுடுகின்ற சூர்யா ஒருமுறை குறி தவறிவிட அவனை பத்து நாட்களுக்குள் கொன்று விடுவதாக சபதம் எடுக்கிறார்..தியேட்டரில் சரோஜாதேவி பளபளக்க,,நயன்தாரா பாட்டி மினுமினுக்க என ஒரே காமெடி..கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர்..எப்போதும் திரையில் இருந்தார்கள்..எதற்கென்றே தெரியவில்லை..

முதல் பாதி முடிவதற்குள் நான் சிறிது தூங்கிவிட அருகிலிருந்த நண்பன் என்னடா மாப்ள தூங்கிட்ட...

அது ஒன்னுமில்லைடா...சிரித்துக்கொண்டே சமாளிப்பதற்குள்..

இடைவேளை...

என்னடா படம் இவ்வளவு மொக்கையா இருக்கு..

வடிவேலு இல்லைனா படம் இவ்வளவு தூரம் கூட வந்துக்காதுடா மச்சான் என்றான் இன்னொருவன்...

நான் தூக்கக்கலைப்பை போக்க ஒரு காபி குடித்துவிட்டு,விடு மச்சான் இனிமே படம் விறுவிறுப்பா போகும்டா என அவனுக்கு நம்பிக்கை அளித்துவிட்டு நானும் சிறிது தைரியத்துடன் வந்து உட்கார்ந்தேன்..

இடைவேளைக்கு பின் பன்னிரண்டு வயது சூர்யா..ஒரு பத்து நிமிட காட்சி மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி இருந்தது....மற்றபடி விஜய் அஜித் என அனைத்து நடிகர்களும் நடித்த கமர்சியல் படங்களின் தொகுப்பு..ஹசிலி பிசிலியே ரசமளி என்ற பாடல் திரையில் வரும் போது தியேட்டரில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சற்று கண்முழித்து பார்த்தனர்..



படத்தின் பிளஸ்:-

1.சூர்யா..சூர்யாவின் நடிப்பு..
2.வடிவேலுவின் காமெடி..

படத்தின் மைனஸ்:-

1.பிண்ணனி இசை..
2.கதை,திரைக்கதை,
3.சண்டைக்காட்சிகள் (குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டை)
4.நயன்தாரா..(தயவு செய்து இந்த பாட்டி இனிமே தமிழ் சினிமாக்கு வேணாம்)

இன்னும் நிறைய இருக்கு...

(இனிமேலும் உங்க மூனு பேரை ஒன்னுபோல பார்த்தேன்..)


படம் முடிந்து வெளிவருகையில்..

நண்பன் ஒருவன்...மாப்ள ஒரு உண்மையை சொன்னா கோவிச்சுக்கிட மாட்டீயே,,,

சொல்லுடா....

இந்த படத்துக்கு குருவி எவ்வளவோ பெட்டர்....

என்னடா இப்படி சொல்லிட்டே...சரி விடுடா...

எல்லோருக்கு ஜெயிக்கிற காலம் வரும்..
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும்

இதுக்கு பதிலா பேராண்மைக்கு போய் இருக்கலாம்டா...

விடு மாப்ள..இதுக்கெல்லாம் சிங்கம் பதில் சொல்லும்டா..என்று மனதை தேற்றிக்கொண்டேன்...



டிஸ்கி:-
1.மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...வேட்டைக்காரனை

2.தற்சமயம் செல்போனில் காலர்டியூனும் மாற்றப்பட்டுள்ளது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...



வலையுலக கதாநாயகன்...

பதிவுலக மன்மதன் அண்ணன் ராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இவர் மென்மேலும் வளர நமீதா நற்பணி மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,,

சூரத் கிளை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS