அம்மா..

பார்த்து பார்த்து நீ என்னை அலங்கரிப்பாய்,
புது புடவை பொருந்தாத நிறத்தில் ரவிக்கை
உனக்கு மட்டும் தீபாவளி எப்போதும் இப்படித்தான்!
என் கண்கள் பார்த்தே மனதை படிக்கும் வித்தை
உனக்கு கை வந்த கலை............!
கோபமாய் கத்துவேன்.......
செல்லமாய் கொஞ்சுவேன்........
புரிதலோடு ஏற்க உன்னால் மட்டுமே முடியும்..............!
என் துயர தருணங்களில் ஓடி வருவேன் உன்னிடம்
என் ரனங்களுக்கான மருந்து
கிடைத்து விடும் உன் மடியில்...............!
தாமதமாய் வீடு திரும்புவேன்
தவித்து போவாய்.........
தடுமாறி ஆங்கிலம் பேசுவேன்
சிலிர்த்து போவாய்...............!
"விவரமான பையன் அவன்"
என்று என்னை ஊர் சொன்னாலும் நான் குழந்தை
என்ற நினைப்பு எப்போதும் உனக்கு.........!
வாழ்க்கை தந்தாய்........
வாழ வழி ஏற்படுத்தினாய்.........
துவண்டு விடும் போதெல்லாம்
தூக்கி நிறுத்தி சக்தி தந்தாய்.........!
அன்பு துளிர் விட்டுக்கொண்டே இருக்கும்
அசாத்யம் உனக்குள் மட்டும் எப்படி.......?

அதனால்தான்
கடவுளின் மாற்றாய்.........
கடவுளினும் மேலே...........
சரியாய் பொருந்துகிறாய்.......
அம்மா............. !!!!

**************************************


அனைவருக்கும் எனது மனமார்ந்த

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 பின்னூட்டங்கள்:

Anbu said...

குறிப்பு:மீள்பதிவு

லோகு said...

Sema sema...

Super mapla..

Meelpathiva? Nan ippathan Padikiren.. Super..

Happy New Year Mapla..

சர்பத் said...

Happy 2011 :)

jayakumar said...

very very nice my dear friend...pls visit my blog also...n leave your comments there...www.kmr-wellwishers.blogspot.com

Unknown said...

தாய்மையின் சிறப்பைச் சொல்லும் நல்பதிவு.

LOVE EYES said...

super anbu ma