எனக்கு வந்த குறுஞ்செய்திகள்..



மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!

****************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

19 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

முதல் மேட்டரை தவிர மற்றதெல்லாம் காதல் தான்!

அன்பு அண்ணே வீட்டுல சொல்லி சீக்கிரம் கால் கட்டு போடுங்க!

துபாய் ராஜா said...

அன்புத்தம்பி அனைத்து செய்திகளும் அருமை தம்பி.

லோகு said...

//வால்பையன் said...

முதல் மேட்டரை தவிர மற்றதெல்லாம் காதல் தான்!

அன்பு அண்ணே வீட்டுல சொல்லி சீக்கிரம் கால் கட்டு போடுங்க!//

குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் வால்பையன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..

வழிப்போக்கன் said...

ஒரே காதல் மழையா பொழிகிறீங்களேஅண்ணா....
:)))

Raju said...

OK.

S.A. நவாஸுதீன் said...

மழை - ரொம்ப டாப்பு
மத்ததெல்லாம் ஓக்கே

Karthik said...

ஹா..ஹா. :)))

//அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..//

கடைசி வரியை விட்டுட்டீங்களே?

ஓடு..ஓடு..ஓடு!

Cable சங்கர் said...

m..mm.. வயசு.. :)

தேவன் மாயம் said...

ஹா..ஹா. :)))

//அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..//

கடைசி வரியை விட்டுட்டீங்களே?
///

நாங்களும் கொலை வெறியோட சுத்திக்கிட்டு இருக்கோம்!!!அன்பு! மாட்டினே அவ்வளவுதான்!!!இஃகி! இஃகி!

கார்த்திகைப் பாண்டியன் said...

Love"O"phobia..:-))))

தீப்பெட்டி said...

//நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..//

எனக்கு பிடித்த குறுஞ்செய்தி..

*இயற்கை ராஜி* said...

mmmmmmm........

Sen22 said...

Ella SMS-m Nalla irukku..

cheena (சீனா) said...

ஆகா ஆகா - எழுது எழுது - காதல் பைத்தியம் பிடித்து அலையாதே - ஒடம்பப் பாத்துக்க - நான் அம்மா கிடே சொல்றேன் - நல்ல பொண்ணாப் பாக்கச் சொல்லுறேன் - சரியா

முதல் கவிதை சூப்பர் - அருமை அருமை

நல்வாழ்த்துகள்

Unknown said...

அருமை...
அழகான தொகுப்பு...
வாழ்த்துக்கள்...

சுந்தர் said...

நல்லா இருக்கு தம்பி !

சிங்கக்குட்டி said...

உங்க வீடு சினேகா வீட்டுக்கு பக்கமோ? :-))

Saranya said...

இயல்பாய் இருந்தது முதல் SMS
மற்றபடி...... ok
சிரிக்க வைக்கும் sms இருக்கா?

Anonymous said...

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்

Suparappu........